Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

சனி, 8 அக்டோபர், 2011

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் உற்சவம்

பாண்டிருப்பு திரௌபதை
அம்மன் உற்சவம்

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் சனிக்கிழமை நிறைவடைகின்றது.
அன்றைய தினம் பகல் பாற்பள்ளயம் தருமர் முடிசூட்டு வைபவம் வழிபாடு மற்றும் இரவு அம்மனின் ஊர்வலம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை வந்தடைதல் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெறும்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை விசேட ஆராதனையுடன் திருக்கதவு திறத்தல், கடலுக்குச் சென்று ஆராதனை செய்து ஊர் ஆரவாரத்துடன் ஊர்வலம் வருதல், கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது.
எதிர்வரும் புதன்கிழமை பகல் வாள் மாற்றுதல், பஞ்சபாண்டவர் திரௌபதாதேவி சகிதம் வனவாசம் செல்லல், அஞ்ஞாதவாதம் செய்யும் நிகழ்வு இடம்பெறும். மறுநாள் அருச்சுனன் பாசுபதம் பெறத்தவம் செய்தல், அரவானைக் களப்பலியிடல், பிற்பகல் கடல் குளித்தல், மஞ்சள் குளித்தல் தீ மிதித்தல் நிகழ்வுகளும் இடம்பெறும்.
மகோற்சவம் ஆரம்பமானது முதல் தினமும் அதிகாலை மாலை விசேட பூசை மற்றும் மகாபாரத பாராயணமும் இடம்பெற்று வருகிறது.