Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 19 அக்டோபர், 2012

மனதில் பட்டதை சொல்லுவேன்...


சக்தி’ தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி 
தற்போது வசந்தம் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக 
கடமையாற்றுகிறார் பிரியா.
இந்த வாரம் உதயசூரியனுக்கு 
அளித்த நேர்காணல்.

நேர்காணல்:எஸ்.ரோஷன்

என் சகோதரி, சகோதரியின் கணவர் ஆகியோர் ஊடகத்துறையில் இருந்தாலும் நான் ஊடகத்துறைக்கு வந்தது எதிர்பாராமல் நடந்த சம்பவம். நான் முதன்முதல் பணியாற்றிய ஊடக நிறுவன அதிபரை முதல் முறை சந்தித்தபோது அவர் ‘‘நீங்கள் என்னவாக வர விரும்புகிறீர்கள்சு எனக் கேட்டார். நான் பொதுவாக மனதில் பட்டதைச் சொல்லும் இயல்புடையவள். அவர் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில் பிரபல்யமாக வேண்டும் என்பது தான், அவர் சிரித்துக் கொண்டே  தந்த வாப்புத்தான் என்னை இந்தத் துறைக்கு அழைத்து வந்தது.
கடுமையான உழைப்பும், ஆர்வமும் என்னை இந்தத் துறையில் நிலைத்திருக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் ஒரு ட்ரென்ட்  இருக்கும். அதைப் பின்பற்றுபவர்கள்தான் வெற்றி பெற முடியும்.
போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்களின் அடையாளம் என்ன?
அறிவிப்பாளராக இருப்பது ஒரு தனித்திறமை. அதை செபவர்களை பார்க்கும்போது பெரும் ஆச்சரியம் ஏற்படும். நான் அதை என் உயிராக மதித்து செது வருகிறேன். என் தொழிலுக்கு நான் ஒருபோதும் துரோகம் நினைத்ததில்லை. கடுமையாக உழைத்திருக்கிறேன். என்னுடைய அடையாளம் நான் நானாக இருப்பது என்று நினைக்கிறேன்.
 விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி எது?
Travel and Living, Animal Planert ரொம்ப ரொம்பப் பிடித்த தொலைக்காட்சிகள். படிக்க அறிய, ரசிக்க ஏராளம் உண்டு.

ரோல் மொடல் யார்?
பெண்களுக்காக, சமூகத்துக்காக போராடும் பெண்கள் என் ரோல் மாடல்.

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் எது? பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? எந்தப் படம்?

திரையரங்குக்குப் போகும் பழக்கமில்லை. சுதந்திரமாக வீட்டில் அமர்ந்து படம் பார்க்கப் பிடிக்கும். தமிழ், ஆங்கிலம், இந்தி படங்கள் பார்ப்பேன். அதிகம் நல்ல படங்களை தவறவிடமாட்டேன். அண்மையில் பார்த்து ரசித்த படம் வித்யாபாலனின் ‘கஹனி’ வித்தியாசமான கதைக்களம் கொண்டது.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு. அவர் நடித்த எல்லா படங்களும் பிடிக்கும்.

வாழ்வில் மறக்க முடியாதது ?
இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த நண்பன் அவர் வீட்டு வாசலில் இறந்து கிடந்தது. தற்கொலை செது கொண்டான் என்று சொல்லப்பட்டது.
* நான் சாதாரண அறிவிப்பாளராக இருந்து முகாமையாளராக பதவி உயர்வு பெற்றது.
* கலைஞர் தொலைக்காட்சியில் என்னுடைய முரளியுடனான நேரடிப் பேட்டி நிகழ்ச்சியை பார்த்து பாராட்டு குவிந்தது.
* தேசிய விருது கிடைத்தது.
 இவை எதையுமே மறக்க முடியாது
.
பொழுது போக்கு?
பாடல் கேட்பது, தனியாக அமர்ந்திருப்பது, உடற்பயிற்சி நிலையம் செல்வது.

 அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் !
விதம்விதமாக வித்தியாசமாக சமைப்பது, மற்றவர்களை நன்றாக பேசி சமாதானம் செவது. Saree டிசைன் செவது, அழகுக் கலை மீது தனிப்பிரியம் உண்டு.
  வசந்தம் டி.வி.யில் நீங்கள் தொகுத்து வழங்கும் முகமூடி நிகழ்ச்சி பற்றி ?

நீண்ட காத்திருப்பு, போராட்டத்தின் பின் ஆரம்பித்த நிகழ்ச்சி எங்கேயோ செயவேண்டியது, இங்கே செயக் கிடைத்தது. அற்புதமான நிகழ்ச்சி. இது கதையல்ல நிஜம் போலவே என்று என்னை கேட்பார்கள். நான் ‘ஆம்’ ஆனால் இது நம் மக்களுடைய தனிப்பட்ட சமூகப் பிரச்சினைகள் என்று விளக்கம் கூறுவேன். கரு ஒன்று ஆனால் களம் வித்தியாசமானது. நம்முடைய பிரச்சினைகள் மிக வித்தியாசமானவை. இன்னும் இன்னும் வித்தியாசமான விடயங்களை உங்கள் முன் கொண்டுவர தயாராகிறோம். பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர நீங்களும் ஒவ்வொரு ரசிகரும் முன்வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்கள் பிரச்சினை வெளிவருமே தவிர நீங்கள் யார் என்பது வெளிவராதது இதன் சிறப்பு. இங்கு வரும் ஒவ்வொருவரின் கதை மூலமும் நம் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணரக் கூடியதாக இருக்கும்.

சந்திக்க விரும்பும் நபர்?
இருந்திருந்தால் (உயிரோடு) கிளியோபாட்ரா...

உங்களுடைய (பிளஸ், மைனஸ்) என்ன?
பிளஸ்  எதை செதாலும் மனதை ஒரு நிலைப்படுத்தி உண்மையாக நேர்மையாக செது முடிப்பது.
மைனஸ்  அதிக முன்கோபம், அதைக் குறைக்க அதிகம் முயற்சிக்கிறேன்.
 நீங்கள் படித்ததில் பிடித்தது?
அநேகமாக வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் அதிகம் பிடிக்கும். சேகுவேராவின் வரலாற்றுப் புத்தகம் மிக மறக்க முடியாத புத்தகம். அவரை இன்னும் பிடிக்கவைத்தது. மற்றும் பெண்கள் சம்பந்தமான புத்தகங்கள் அதிகம் படிப்பேன்.

 நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
எங்கு சென்றாலும் இவர் அவர்தானே என்று குறுகுறு பார்வை பார்ப்பது. சிலர் பேசலாமா, இவர் பேசுவாரா என தயங்குவது இவை எல்லாம் என் கண்களுக்கு புலப்படும். நான்  எல்லோரோடும் சகஜமாக பேசுபவள். யார் என்னை எங்கு கண்டாலும் தாராளமாக பேசுங்கள்.
ஊச்ஞிஞுஞணிணிடு மூலம் அதிகபட்ச நண்பர்கள் இருக்கிறார்கள். என் நிகழ்ச்சிகளின் குறை நிறைகள் உங்களைத் தவிர யாராலும் சிறப்பாக சுட்டிக்காட்ட முடியாது. காத்திருக்கிறேன். அதேபோல் ஊடகங்களின் நல்லபடைப்புகளை மனம் விட்டு பாராட்டுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக