Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

செவ்வாய், 25 ஜூன், 2013

அம்மா சொன்ன கடைசி வார்த்தை

 சக்தி சுப்பர் ஸ்டார் சுதன் உதயசூரியனுக்கு அளித்த பேட்டி;

சக்தி தொலைக்காட்சி நடத்திய சுப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறி பல இதயங்களில் இடம்பிடித்தவர் சுதன்.

பல போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிகள் இவர் வசமாகியிருக்கின்றன. தமிழ், சிங்கள மொழிகளில் பல பாடல்களைப் பாடி முன்னேறிவரும் இலங்கையின் இளம் பாடகர் இவர்.
இவர் வெற்றி இலக்கைத் தொட்டது பற்றியும் தன் வாழ்க்கையின் கடந்து வந்த பாதை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
பிறந்தது யாழ்ப்பாணம். ஆனால் சிறுவயதிலிருந்து படித்து வளர்ந்ததெல்லாம் திருகோணமலையில். அப்பா கிருஸ்ணராஜ், அம்மா வடிவழகி. வீட்டில் ஐந்து பிள்ளைகளில் நான் கடைக் குட்டி.
 ஆரம்பம் முதல் உயர்தரம் வரை திருமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில்தான் எனது பள்ளிப்பருவம் கழிந்தது. பள்ளிப்பருவத்தில் நான் பெரிய சாதனையாளன். காரணம் 32 மாணவர்களைக் கொண்ட எங்கள் வகுப்பறையில் நான்தான் 31 ஆம் நிலை. அவ்வளவு மக்கு, படிப்பதில் ஆர்வம் அற்றவனாக இருந்தாலும் பேச்சு, மெவல்லுநர் போட்டிகளில் மாவட்ட, மாகாண மட்டங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளேன்.
எந்தவித இசைப் பின்னணியும் கொண்டிராதது எனது குடும்பம். இசையில் நாட்டம் வந்ததற்குக் காரணம் எனது அம்மாதான். அவர் சமைக்கும் பொழுது பாடும் மெல்லிய இசைப் பாடல்கள் அவரது சமையல் போலவே ருசியாக இருக்கும். என்னைப் பாட வைத்து அவர் ரசிப்பது மட்டுமல்லாது அயலவர்களையும் அழைத்து என்னைப் பாட வைத்து மகிழ்ச்சி அடைவார்.
 எனக்கும் என் நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்த எனது பாடும் திறமையை வளர்த்துக் கொள்வதற்காக கல்லூரியில் இசை கற்கச் சென்ற முதலாவது நாளே எனது சங்கீத ஆசிரியர் தந்த பரிசு இசைக்கற்பதற்கான ஆர்வத்தையே குறைத்தது. வழமையாக பாடசாலை முதல் தினத்தில் யாரும் பாடசாலைக்கு பெரிதாகச் செல்வதில்லை (அன்றைய தினம்தான் வகுப்பறை ஒழுங்கமைப்பு) அதன்வழி வந்த நானும் பாடசாலை போகவில்லை. இரண்டாம் நாள் சங்கீதப் பாடத்துக்கு முதன்முதலாக சென்றபோது முதலாவது நாள் ஏன் பாடசாலைக்கு வரவில்லையென்று என்னை கண்டித்ததை இன்னும் மறக்கமுடியாது. கைவசம் நிறைய மெட்டுக்கள் இருந்தும் பாடல் வரிகள் இருந்தும் பொருளாதாரம் பெரும் முட்டுக்கட்டையாவே இருந்தது. ஆரம்பத்தில் இசைத் தட்டு வெளியிடுவதற்காக நாங்கள் நாடியவர்களும் எங்ளை ஏமாற்றினார்களே தவிர, கைகொடுக்கவில்லை. எப்படியிருந்தாலும் எனது கல்லூரியில் நடைபெற்ற தியானம் மற்றும் பஜனைப்பாடல்களில் எனது கவனத்தை செலுத்திவந்தேன். இவ்வாறு இருக்க, எனது பாடும் திறனைக்கண்ட ஒரு ஆசிரியர் எனது கல்லூரியில் வலயமட்ட வில்லுப்பாட்டுப்போட்டிக்கு அணித்தலைவராக என்னை நியமித்தார்.
எனக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீண்டநாள் பயிற்சியின் பின் எனது முதல் மேடையை சந்திக்கத் தயாராக இருந்தேன்.
அன்று எங்களுக்கு போட்டி. வில்லுப்பாட்டுக்கான உடையில் மேடையை நோக்கிச் சென்றபோது எமது கல்லூரியின் உப அதிபர் என்னை மட்டும் நிறுத்தி பாடப்போக வேண்டாம் என்றார், அருகில் எனது மாமா கண்கலங்கியபடி என்னைப் பார்த்தார். அப்பொழுதுதான் எனது அம்மா மரணப்படுக்கையில் இருப்பது தெரியவந்தது.
உடனே கொழும்பு பெரிய மருத்துவமனைக்குச் சென்றோம். எனது அம்மாவின் நிலைகுறித்து நான் அழுதுகொண்டு சென்றேன்.
ஆனால், எனது அம்மா சிரித்தப்படி என்னை வரவேற்றார். அம்மாவிற்கு கடைசிப்பால் பருக்கச்சொன்னார்கள். அம்மா அதை குடித்தபின் என்னிடம் சொன்ன ஒரேயொரு வார்த்தை  தம்பி நல்லா படி. அம்மாவின் மரணத்தின் பின் அந்த வார்த்தை என் வாழ்க்கையையே மாற்றியது. நன்றாகப் படித்தேன். Oசஃ சித்தி எதினேன். உயர்தரத்தில் வர்த்தக பாடத்தைக் கற்று அம்மாவின் ஆசியோடும், அப்பாவின் உறுதுணையோடும் பல்கலைக்கழகம் தெரிவானேன். இதில் மறக்க முடியாத அனுபவம் என்னவென்றால் எனது வகுப்பாசிரியரிடம் (5ஆம் ஆண்டு தொடக்கம் 9 ஆம் ஆண்டு வரை)  பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மற்றைய மாணவர்களுடன் நானும் சென்றேன். வந்த எல்லா மாணவர்களுக்கும் வாழ்த்தி விட்டு என்னைப் பார்த்து நீ எதற்காக வந்தா எனக் கேட்டார்.
 நானும் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளேன் எனக் கூற  கண்கலங்கியவாறு என்னை கட்டியணைத்தார்.
எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தது. நான் பல்கலைக்கழகம் வந்து ஆறு மாதத்தில் எனது அப்பாவின் இழப்பையும் சந்தித்தேன். இறுதியாக அப்பாவைப் பார்த்தது, என்னை பல்கலைக்கழகத்திற்கு வழியனுப்பியபோது சிரித்தவாறு கைகளை அசைத்த அந்த நிமிடங்கள்தான் இன்னும் என் மனம்விட்டு நீங்காமல் இருக்கின்றது.
பின்பு பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் குளியலறைப் பாடகன்தான். பின்பு எனக்கென ஒரு துணையை   தேடிக்கொண்டேன், நல்ல நண்பர்களையும் சேர்த்துக்கொண்டேன். அவர்களின் தூண்டுதலில் ரோட்டெரி கழகப் பாடல் போட்டிக்குச் சென்று இரண்டாம் இடம் பெற்றேன். பின்பு தேசிய இளைஞர் பேரவையினால்  தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட பாடல் போட்டியில் இரண்டாம் இடம், சக்தி சுப்பர் ஸ்டார் என எனது பாடல் பயணம் நீண்டது. மக்களின் ஆசியுடனும் நண்பர்களின் துணையுடனும் இறுதிப்போட்டிக்கு தெரிவானேன். இந்த வெற்றிக்கு எனது நண்பன் குணூடிண்ட ஈடிடூச் னுடைய உதவிக்கு நான் என்ன செதாலும் ஈடில்லை. இதன்போது எனது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களின் ஊக்குவிப்பும் எனது இசைப் பயணத்திற்கு மேலும் வலுச் சேர்த்தது.
நிகழ்ச்சியில் நான் இறுதிச்சுற்றுவரை முன்னேறியதை கௌரவப்படுத்தும் வகையில் எனது நண்பர்கள் எனக்காக ஒரு வைபவத்தினை ஒழுங்கு செதிருந்தார்கள். எமது பல்கலைக்கழக வரலாற்றிலேயே தனியொரு மனிதனுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட முதலாவது வைபவம் அது என்பது எனக்கு பெருமிதம் தந்தது.
இதற்கு எனது சகோதர மொழி நண்பர்கள், கனிஷ்ட மாணவர்கள், வேறு பீட நண்பர்கள் வந்து என்னை வாழ்த்தி கௌரவப்படுத்தினர். எனது பல்கலைக்கழக உபவேந்தரும் வருகை தந்து கேடயம் தந்து என்னை கௌரவித்தார். இந்த உதவிகளுக்கு நான் என்ன கைமாறு செயப்போகிறேன் என்று தெரியவில்லை.
இறுதிவரை நன்றிமறவாத மனம் வேண்டும் இறைவனே. இதுவரை ஏழு இசைத்தட்டுப் பாடல்களைப் பாடியுள்ளேன். அதில் பாத்தியா, சந்தோஷின் பாடல் ஒன்றுக்கு என்னை சொல்லிசை (ரெப்) எழுதுமாறு பணித்தார்கள். அவர்கள் கொடுத்த மெட்டுக்கு பத்து நிமிடத்தில் சொல்லிசை எழுதினேன். இதற்கு அவர்களிடமிருந்து கிடைத்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் நெஞ்சில் நீங்காதவை.
இதுபோன்றே சக்தியால் தயாரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பாடல்கள் இசைத் தொகுப்பில் இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன் மேற்பார்வைக்காக அழைக்கப்பட்டார். அதன்போதுதான் பாடல் பாடுவதில் எவ்வளவு நுணுக்கம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். நான் பயந்து பயந்து பாடிய அந்தப் பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 
எங்களது அடுத்த இசைத்தொகுப்பு மகுடி புகழ் தினேஸ் கனகரட்ணத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நிச்சயம் இந்த இசைத்தொகுப்பு வெற்றியடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. என்னுடைய இசை வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த எனது சகோதரர்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

எஸ்.ரோஷன்

சனி, 22 ஜூன், 2013

அறிவிப்பாளராகனும் என்பது என் சிறுவயதுக் கனவு!

எம்மில் பலருக்கு திரைப்படங்களை பார்ப்பதற்கு முதல் அப்படங்களின் கதைகளை அறிவதில் ஆர்வம் அதிகம். அப்படிப்பட்ட ஆர்வலர்களுக்கு விருந்து படைப்பது வர்ணம் டி.வி.யின் திரைக்கதம்பம் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பிரியா லுவேந்திரன்.
இந்தவாரம் உதயசூரியன் வாயிலாக சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.
ஹாய் ரசிகர்களே! நான் உங்கள் பிரியா லுவேந்திரன் (பிரியதர்ஷினி லுவேந்திரன்) 
நான் பகுதி நேரமாகத்தான் வர்ணம் தொலைக்காட்சியில் தொகுப்பாளரா இருக்கேன்.
 அப்பா, அம்மா, செல்லத் தங்கை மற்றும் என்ன நேசிக்கிற தாத்தா, பாட்டி இதுதான் என்னுடைய குடும்பம். படிச்சது சைவமங்கையர் வித்தியாலயத்தில்.
பாடசாலைக் காலத்தில ரொம்ப குறும்புத்தனமான பொண்ணு. தொகுப்பாளராக வரனும் என்றது என்னோட சிறுவயது கனவு. என்னுடைய கனவு நனவாக மூன்று பேர் காரணகர்த்தாக்களாக இருக்கிறாங்க. ஒன்று ஹிஷாம் அண்ணா மற்றையது என்னுடைய அத்தை நித்தியகல்யாணி பத்மநாதன், மற்றையது பவனீதா லோகநாதன். இவர்களூடாகவே எனது தொகுப்பாளர் பயணம் தொடர்கிறது. 
*முதன் முதல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவம்  2012 செப்டம்பர் 20 ஆம் திகதி என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அதுதான் என்னுடைய ஊடகப் பயணத்தின் முதற்படி.
*நீங்கள் தொகுத்து வழங்கும் திரைக்கதம்பம், டொப் டென் சோங்ஸ் அனுபவம் பற்றி சொல்லுங்கள்: ரொம்பவே சந்தோஷமா நிகழ்ச்சி பண்ணியிருக்கிறேன். சில சமயம் ஸ்கிரிப்ட் மறந்தாலும் சொல்லிக் கொடுக்க பலபேர் இருக்காங்க. சில படங்களைப் பற்றி நான் கேள்விப் பட்டதே இல்லை. நிகழ்ச்சிக்காக அந்தப் படங்களை பார்த்த சந்தர்ப் பங்களும் உண்டு.
*மனம் கவர்ந்த நேயர்கள் பற்றி: என்னுடைய திறமைக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள் அவங்கதான். அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். இந்தத் தருணத்தில் அவர்களுக்கு என்னுடைய நன்றியையும் சொல்லிக் கொள்கிறேன்.
*நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கிடைத்த அனுபவங்கள்: ஒவ்வொரு நிகழ்ச்சியும் சுவாரஷ்யமான அனுபவம்னு தான் சொல்லனும். குறிப்பாகச் சொன்னால் காதலர் தின சிறப்புப் பேட்டி நிகழ்ச்சியை சொல்லலாம். அது எனக்கு மட்டுமல்ல எங்கள் குழுவுக்கே சுவாரஷ்யமான அனுபவமாக இருந்தது.
 உங்களைக் கவர்ந்த அறிவிப்பாளர்கள்: இலங்கையில் ஹிஷாம் மொஹமட், இந்தியாவில் கோபிநாத், சிவகார்த்திகேயன், டிடி
*உங்களுடைய ரோல் மொடல்: எப்பவுமே அப்பாதான். ஆனால், அதிகமான விஷயங்களை கற்றுக்கொண்டது அம்மாவிடம்தான்.
* ஆச்சரியப்பட வைத்த நபர் : நீயா நானா கோபிநாத். அவரைப்பார்த்து ஆச்சரியப்படாத சந்தர்ப்பங்களே இல்லை.
*வர்ணம் தொலைக் காட்சியில் பணியாற்றுவது பற்றி: அங்கு பணிபுரிகிறோம் என்பதை விட ஒரு குடும்பமாக வாழ்கின்ற உணர்வுகளே அதிகம்.
*உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்: 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி நடந்த சூப்பர் சிங்கர்ஸுடனான பேட்டி. அதுதான் என்னுடைய முதல் பேட்டி நிகழ்ச்சி. என்னுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்ற சந்தர்ப்பமும் அதுதான். அப்புறம் என்னுடைய சாதாரணதர, உயர்தர பெறுபேறுகள் மூலம் பெற்றோரை பெருமைபடுத்திய அருமையான அந்தத் தருனங்கள்.
*சந்திக்க விரும்பும் நபர்: சந்தர்ப்பம் கிடைத்தால் கோபிநாத் மற்றும் இயக்குநர் பாலாவையும் சந்திக்க வேண்டும்.
* படித்ததில் உங்களுக்குப் பிடித்தது: உன் கண்ணில் நீர் வழிந்தால்  என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ  கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ போன்ற பாரதியின் அற்புதமான கவிவரிகள்
*நேயர்களுக்குக் கூற விரும்புவது: உங்களுடைய உண்மையான அன்பிற்கு தலை வணங்குகிறேன். இதேபோன்ற ஆதரவு என்றும் எனக்குத் தேவை.

சனி, 27 ஏப்ரல், 2013

பில்லா2 சவுண்ட் இஞ்சினியர் கௌசிகன்

தென்னிந்தியத் திரைப்படங்களின் வெற்றிக்கும் அதன் பிரம்மாண்டத்திற்கும் கதை, களம், கதாபாத்திரங்கள் எந்தளவு முக்கியத்துவம் வகிக்கின்றதோ அந்தளவு அப்படத்தின் சவுண்ட் சிஸ்டமும் முக்கியத்துவம் வகிக்கின்றது.
அவ்வாறு அஜித்தின்  பில்லா2 படத்தில் இசையால் அசத்தியவர் கௌசிகன். இவர் ஜேர்மனியைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் இவரது பூர்வீகம் இலங்கை.
இவரது அப்பா சிவலிங்கம் பலராலும் அறியப்பட்டவர். அதாவது ராஜ்சிவா என்று அழைக்கப்படும் எழுத்தாளர். திருகோணமலையைச் சேர்ந்தவர்.
இவ்வாரம் பேஸ்புக் பகுதியில் இணைகிறார் கௌசிகன் சிவலிங்கம்.
ஹாய் வணக்கம்! உங்களுக்கு என்னை அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 இசைத்துறையில் சிறுவயது முதல் ஆர்வமிருந்தாலும் என்னுடைய 5 ஆவது வயதில் அப்பா வாங்கிக் கொடுத்த கீபோர்டுதான் இசைத்துறைப் பயணத்திற்கான முதல் படியாக அமைந்தது. அந்த கீபோர்ட்டில் ""முஸ்தபா... முஸ்தபா...'' என்னும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலை முதன் முதலாக  இசைத்துக் காட்டினேன். என்னுடைய இசை ஆர்வத்தை அறிந்து கொண்ட பெற்றோர் இசைப் பள்ளியில் முறையாக இசையைக் கற்றுக்கொள்வதற்காக சேர்த்து விட்டார்கள். கீபோர்ட்டுடன் மிருதங்கமும் கற்றிருக்கிறேன். இவை இரண்டிலும் குறித்த அளவுக்குத் தேர்ச்சி பெற்ற நான், எனது 15 ஆவது வயதில் பாடல்களை இசையமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டேன். எனது மெட்டுகளுக்கு, அப்பா பாடல் வரிகளை எழுதித் தந்தார். அதுவே என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.
ஐரோப்பிய வானொலிகளில் எனது பாடல்கள் வலம் வந்தன.  இதன் பயனாக சென்னை செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நான் சென்னை சென்றதும் சினிமாத்துறையில் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது. பல பாடகர்கள், பாடல் ஆசிரியர்கள், இசை வல்லுநர்கள் எனப் பலரின் அறிமுகமும் கிடைத்தன. பாடல் ஆசிரியர் சினேகன் அவர்களின் வரிகளுக்கு எனது இசையமைப்பில் உருவான பாடலொன்று பாடகி சைந்தவி  பாட, “கலசா ஸ்ரூடியோசு இல் பதிவானது. அந்த நொடியில் எனக்கு ஆச்சரியமான நிகழ்வு ஒன்று நடந்தது. அதுவே என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.
எனது பாடல்கள் பதிவு செயப்பட்டுக் கொண்டிருக்கும் கலசா ஸ்ரூடியோவின் இன்னுமொரு தளத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் தனது பாடல்களைப் பதிவு செதுகொண்டிருந்தார். அங்கு எனக்கு அவரது அறிமுகம் கிடைத்தது. தொழில்நுட்ப ரீதியாக இருவரும் நிறையப் பேசினோம்.
என்னுடைய இசைப் பயிற்சியை முழுமையாக்குவதற்காக SAE  இல் (Society Of Automotive Engineers) கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நானும் கல்லூரியில் சேர்ந்து ஓடியோ சவுண்ட் என்ஜினியரிங் பட்டப்படிப்பை ஆரம்பித்தேன்.
விடுமுறையில் இந்தியா சென்ற நான் அங்கு ஒரு இசை அல்பம் செயும் நோக்குடன் பாடகர்களை வைத்து பாடல்களைப் பதிவு செதேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில், மலேசியாவைச் சேர்ந்த ‘lady Kash & Krissy’ (எந்திரன் படத்தில் ""இரும்பிலே ஒரு இருதயம்''  என்ற பாடலைப் பாடியவர்கள்),  Where ever You Are, It’s Your Time  என இரண்டு ஆங்கிலப் பாடல்களை எனது இசையமைப்பிலும், இசைக்கோர்ப்பிலும் பாடினார்கள். அந்தப்பாடல்களை நீங்கள் யூடிப்பில் இந்த முகவரியுடாக பார்வையிடலாம். (.http://www.youtube.com/watch?v=cPA7LHybe20 ) ( http://www.youtube.com/watch?v=xXuykCIiNRw ).
அதன் பின்னர் நான் எனது படிப்பிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தினேன். 2011 இல், Audio Engineerig Diploma பட்டம் கிடைத்தது. 2011 ஏப்ரல் இந்தியா சென்றேன். யுவனுடன் 4 மாதங்களுக்கு மேல் பணியாற்றினேன். இந்த நேரத்தில் Apple Computer நிறுவனத்தில் பணிபுரிய என்னை அழைத்தார்கள். அங்கு வேலை செது கொண்டே இசைத்துறையிலும் ஈடுபட்டேன்.
மீண்டும் 2012 இல் எதிர்பாராத அழைப்பு ஒன்று யுவன் சங்கர் ராஜாவிடமிருந்து வந்தது. “ஒரு படம் பண்ணப்போறோம். அதில் நீ தான் பிரதான சவுண்ட் எஞ்ஜினியர். உனக்குப் பிடித்த மிக பிரபலமான ஸ்ரூடியோவை நீயே புக் பண்ணு'' என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வார்த்தைகள் வரவே இல்லை. கண்கள் கலங்கி விட்டன. சவுண்ட் எஞ்ஜினியராக என்னைத் தேடி யுவன் சங்கர் ராஜாவே ஐரோப்பா வருகிறேன் என்றவுடன் எனக்கு அளவு கடந்த சந்தோஷத்துடன் உடனே ஜேர்மனியில் மிகப்பிரபலமான ஸ்டூடியோ ஒன்றை புக் செதேன். ஸ்டூடியோவில் நான் அவரை சந்திக்கும்வரை என்ன படம் என்று தெரியாது. அவரும் சொல்லவில்லை. அவர் ஜேர்மனி வந்து இறங்கியவுடன் அது அஜித் அவர்களின் “பில்லா2'' படம் என்றார். எனது சந்தோசத் துக்கு அளவே இல்லை.
பில்லா2 படத்திற்காக கடுமையாக உழைத்து பாடல்களை பதிவு செது முடித்தோம். அந்தப்  படத்தின் பாடல்கள் முழுமையடைந்து வெற்றியையும் தேடித்தந்தன. அதன் பின்னர் ஜெயம் ரவியின் நடிப்பில், அமீரின் இயக்கத்தில் உருவான ""ஆதிபகவன்'' படத்துக்கும் சவுண்ட் எஞ்சினியராகக் கடமையாற்றினேன். இன்னும் பல திரைப்படங்களுக்கு சவுண்ட் எஞ்சினியாரகக் கடமையாற்றவுள்ளேன்.
இளவயதிலேயே தென்னிந்தியத் திரைப்பட உலகில், முதல் இசைக்கோர்வையாளர் என்ற பெயர் எனக்கு கிடைத்துள்ளது. அத்துடன் இலங்கைத் தமிழர்களில் முதல் இசைக் கோப்பாளராகவும் தென்னிந்தியத் திரைத்துறையில் கடமையாற்றியிருக்கிறேன். இந்த நேரத்தில் நான் ஒன்று சொல்ல வேண்டும். எனது திறமையை அறிந்து என் விருப்பப்படி என்னை வழிநடத்திய எனது பெற்றோர்களே என் வெற்றிக்கு முதல் காரணம். அத்துடன், எனக்கு ஊக்கம் தந்து எல்லாவிதத்திலும் அக்கறை எடுத்த எனது சகோதரிக்கும் என் நன்றிகள். எப்போதும் உற்சாகப்படுத்தும் என் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
அதேபோல் நான் இன்னும் பண்ணப்போகும் பாடல்களுக்கும், நான் இசையமைக்கும் அல்பங்களுக்கும் ரசிகர்களாகிய உங்களுடைய ஆதரவு என்றும் தேவை. வரும் காலத்தில் நான் தென்னிந்திய இசையமைப்பளராக வருவதற்கு என்னுடைய அப்பா, அம்மாவின் தா மண்ணின் மைந்தர்களாகிய உங்களின் ஆசியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்...!

சனி, 23 மார்ச், 2013

எனக்கு நானே ரோல் மொடல்...

சூரியன் வானொலியின் மூலம் அறிவிப்புத் துறைக்கு அறிமுகமாகி வசந்தம் டி.வி.யின் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி இன்றி வெற்றி எப்.எம்.மின் அறிவிப்பாளராக இருப்பவர் பூஜா.
இந்த வாரம் பேஸ்புக் பகுதியினூடாக உங்களை சந்திக்கிறார்.

எனது ரசிகர்களுக்கு வணக்கம்! எனது சொந்த ஊர், பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கொழும்புதான். அம்மா ஒரு ஆசிரியர். தங்கை, தம்பி, நான்  என அன்பான அழகான சிறிய குடும். ஆரம்பம் முதல் உயர்கல்வி வரை கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். எனது பாடசாலையிலேயே இரண்டு அறிவிப்பாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவர் என்பதில் பெருமையடைகிறேன்.
ஆரம்பத்தில் சூரியனில் இடம்பெற்ற தேர்வில் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் எனது அறிவிப்புப் பயணம் தொடர்ந்தது.
நீங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி குறித்து சொல்ல முடியுமா?
வார நாட்களில் மதியம் 1 முதல் 3 மணிவரை இடம் பெறும் கூல் ஸ்போர்ட்ஸ் அதைத்தவிர நேயர்களின் விருப்பத் தெரிவு பாடல்கள் வாழ்த்துகளுடன் இணைந்து வரும் மியூசிக் மசாலா.

அறிவிப்புத்துறையைச் சார்ந்தவர்கள் இப்படிதான் இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள் ஆனால் நீங்கள்


சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி
இருக்கக்கூடாது?
கேள்வி கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஒரு அறிவிப்பாளருக்கு தலைக்கனம் இருக்கக் கூடாது.  தனது பெயரைப் பயன்படுத்தி சொந்த காரியங்களில் ஈடுபடல், சுய விளம்பரம் செதல் என்பவை இருக்கவே கூடாது.

பாடசாலை அனுபவம்?
பாடசாலைக் காலத்தினை மறக்கவே முடியாது. எனது பாடசாலையில் நான் வகிக்காத பதவிகளே இல்லை. எல்லா போட்டிகளிலும் பங்குபற்றுவேன். என் திறமைகளை வெளிக்கொணர்ந்த களம் எனது பாடசாலையும், ஆசிரியர்களும் தான்.

போட்டிகள் நிறைந்த இந்த துறையில் உங்களின் அடையாளம் என்ன?
வேகமான என்னுடைய பேச்சுப் பாணி

இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார்?
அமரர். கே.எஸ்.ராஜா. கோபி நாத் (நடந்தது என்ன)

நீங்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி?
வசந்தம் டீ.வி. விஜ டீவி.

உங்களுடைய ரோல் மொடல் யார்?
எனக்கு நானே ரோல் மொடல். எனினும் சேத்தனா லியனகே. (சிரச செதி வாசிப்பாளர்) பிடிக்கும்

சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருந்த அனுபவம் பற்றி சொல்ல முடிமா?
என்னை ஒரு அறிவிப்பாளராக அறிமுகப்படுத்தியது என் அன்னை வானொலி சூரியன் எப்.எம்.தான் என்னைத் தெரிவு செத லோஷன் அண்ணா, எனக்குப் பயிற்சி அளித்த சிரேஷ்ட அறிவிப்பாளர்களை மறக்க முடியாது. ரமணன் அண்ணா, கிருஷ்ணா அண்ணா, பரணி அண்ணா, நவா அண்ணா, விமல் அண்ணா, சங்கீதா, குமுதினி அக்கா இவர்கள் எல்லோருமே என்னை பட்டை தீட்டி செம்மைப்படுத்தியவர்கள்

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம்? பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? 
ரசித்து பார்த்த படம் கும்கி. பிடித்த நகைச்சுவை நடிகர் சந்தானம் (கண்ணா லட்டு தின்ன ஆசையா?)

வாழ்வில் மறக்க நினைப்பது எது?

இத்துறையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் ?
பூவே வா பேசும் போது...

உங்களுடைய பொழுதுபோக்கு?
இசை கேட்பது, ஷொப்பிங் செல்வது, நல்ல நிகழ்ச்சிகளை பார்ப்பது, நகைச்சுவைக் காட்சிகளை இரசிப்பது, எது கிடைத்தாலும் வாசிப்பது.

உங்களிடம் உள்ள அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் என்ன?
அழகுக்கலை, பெயின்டிங்ஸ், சமையல்

திறமைகள் இருந்தும் இந்தத் துறையில் நீங்கள் சாதிக்க முடியாதுபோன சந்தர்ப்பங்கள்?
அப்படி எதுவும் இதுவரை இருக்கவில்லை, எனக்குக் கிடைத்த மூத்த அறிவிப்பாளர்களின் வழிகாட்டலினால் நான் எனது முழுப் பங்களிப்பையும் வழங்குகிறேன். முக்கியமாக எனக்கு கிடைத்த பணிப்பாளர்கள் எல்லோருமே மட்டுமல்ல எங்கள் குழுவிற்கும் திறமைகளைக் வெளிக் காட்டுவதற்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

சந்திக்க விரும்பும் நபர் யார்?
பில் கேற்ஸ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான்.

உங்களுடைய (பிளஸ், மைனஸ்) என்ன?
பிளஸ் எந்த நிகழ்ச்சியையும் செயக்கூடிய ஆற்றல். மைனஸ் கோபம்

அடிக்கடி மறக்கும் பொருள்?
மொபைல் போன், பேனா.

படித்ததில் பிடித்தவை?
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு எனும் கண்ணதாசனின் அற்புதமான தத்துவங்கள்.

யாருடன் இணைந்து நிகழ்ச்சிசெயப் பிடிக்கும்?
அபர்ணா அண்ணா, நான் விரும்பும் திறமையான கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர். ராஜ், கவிதா அக்கா இருவருமே கலகலப்பான அறிவிப்பாளர்கள். இவர்களோடு இணைந்து நிகழ்ச்சி செய்வது மிகவும் பிக்கும்.

உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
இந்த ஆறு வருடமும் எனக்கு அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. என்னைப் பாராட்டுவது போல என் குறைகளையும் சுட்டிக்காட்டி என்னை மென்மேலும் செம்மைப்படுத்துங்கள்.
இது போல இனிவரும் காலங்களிலும் உங்கள் ஆதரவை வழங்குங்கள். அதுவே புதிய நிகழ்ச்சிகளை  படைத்தளிப்பதற்கான உத்வேகத்தை அளிக்கும்.

சனி, 16 மார்ச், 2013

இசை பயிற்சி அல்ல உணர்ச்சி!

நம்நாட்டு கலைஞர் ஷமீல் உதயசூரியனுக்கு அளித்த நேர்காணல்.

நேர்காணல்: எஸ்.ரோஷன்

எல்லா புகழும் இறைவனுக்கே...! உலகின் ஆதாரமான இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறேன். ஹா உதயசூரியன் நண்பர்களே...
நான் ஷமீல். இலங்கையில் இசைத்துறைக்கு நான் அறிமுகமாகி இந்த வருடத்துடன் ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன.
நான் ""கனவின் கருவில்...'' என்னும் பாடலின் மூலம் இசையமைப்பாளனாக, பாடலாசிரியராக, பாடகராக அறிமுகமானேன்.
இசை எனக்கு அறிமுகமானது பெற்றோர் மூலமாகவே. அதனால், எனக்கு இசை மீதான ஆர்வம் என்பது அதிசயத்தக்க ஒரு விடயமாக இருக்கவில்லை. ஆனால்  புதிதாக பாடல்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது ஒரு புதிய முயற்சி.
திருகோணமலையை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் நான் இசைத்துறையை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள்தான்.
முதன் முதலாக  பேட்டியெடுத்து என்னை உற்சாகப்படுத்தியது காண்டீபன் அண்ணாதான். சக்தி வானொலி  மற்றும் அபர்ணா அண்ணா, காண்டீபன் அண்ணா, கஜமுகன் அண்ணா, டயானா, கணாதீபன் அண்ணா, பிரஜீவ் எல்லோருக்கும் இந்த இடத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதன் பிறகு எனக்கு முகவரி தந்தது சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசர்கள் நிகழ்ச்சிதான். சியா அண்ணா, சமந்த ராஜ் ஆகியோர் எனக்கு களமமைத்துத் தந்தவர்களில் முக்கியமானவர்கள்.  
பிறகு சூரியனில் எப்.எம். இல் கிடைத்த வேலை இசை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்போது எத்தனையோ பேருக்கு வேலையின் மகத்துவம் புரிவதில்லை. எனக்குக் கிடைத்த இந்த வேலையை ஒரு கொடையாகவே கருதுகிறேன். முக்கியமாக சூரியன் பொறுப்பதிகாரி நவநீதன் அண்ணாதான் நான் இசைத்துறையில் பிரகாசிக்கக் முக்கிய காரணம். எனக்கு ஒரு வழிகாட்டியாக செயற்பட்டவரும் அவரே. இந்த காலகட்டத்தில் தான் நிறைய பாடல்களை உருவாக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
""எத கேட்டாலும் சூரியன் போல இருக்குமா...'' பாடலில் தொடங்கி இப்போது ஒலிக்கும் ""வான் முழுதும்...'' பாடல் வரை அநேகமான நிலைய குறியிசைகள் செதுள்ளேன். அதில் 2009 ஆம் ஆண்டு ""எத்தனை நாளா...''  என்ற நிலைய குறியிசைக்கு  சிறந்த நிலைய குறியிசைக்கான விருது கிடைத்தது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த நிலைய குறியிசைகளில் 90 வீத வரிகள் நானே எழுதியதுதான்.
 அத்துடன் முக்கியமாக சூரியன் ஆலோசகர் நடராஜசிவம் அவர்களை நினைவுபடுத்தியாக வேண்டும். வானொலி சம்பந்தமான விடயங்களின் ஊற்று என்றும் அவரை சொல்லலாம். அதில் நானும் கொஞ்சம் பருகிக்கொண்டேன்.
அலுவலக கலைஞர்கள் தவிர்ந்து, எனது பாடல்களுக்காக இலங்கை, இந்தியா, அமெரிக்கா, மலேசியா போன்ற நாட்டுக் கலைஞர்கள் பலருடன் பணி புரிந்துள்ளேன். எனது வாழ்வில் ""கனவின் கருவில்...'' பாடலுக்கு அடுத்தபடியாக பெரிய திருப்பம் தந்தது மழைவிழியின்... பாடல்.
இதன்மூலம் கிடைத்த ஒரு மிகப்பரிய கவிஞர் நண்பன் சதீஷ்காந்த். எனது பாடல்களுக்கு நானே வரி எழுதுவதிலிருந்து சற்று ஒதுங்கக் காரணமாக அமைந்தவர். அவரது அறிமுகத்தின் பின் அவரது பாடல் வரிகள்தான் இப்போது எனது இசையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் இசையமைப்பாளர் நிக்கி  எனது இசையைத் தாண்டிய தொழிநுட்ப அறிவு வளரக் காரணமாக இருந்தவர்.
அமெரிக்க கலைஞர்களுக்காக இசையமைக்கும் போது தான் நிறைய ஒலி பொறியியலாளர்களின் நட்பு கிடைத்தது. எனது பாடல்களில், அன்றிலிருந்து இன்று வரை சண்டைபோடும் சிறந்த ஒளி நயம், அதில் என்றுமே நான் பின் வாங்கியதில்லை. இன்று வரை ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு வகையாகத்தான் அமைகின்றன. அதன் சிறந்த இசைக் கலவைக்காக கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். இன்னும் எனக்கு திருப்தி ஏற்படாத விடயம் இசை மட்டும் தான்.
எனது வாழ்க்கையில் மனைவி, பிள்ளைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். மனைவியின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியம். ஏனென்றால் இசைப்பயண ஆரம்பம் தொடக்கம் இன்று வரை எனக்கு 2 அல்லது 3 மணி நேரம்தான் தூங்கக் கிடைக்கும். அப்படி இருக்க குடும்ப வேலைகளை முழுதுமாக தன் பொறுப்பில் எடுத்து செது வருகிறார். என்னை எந்த கஷ்டமும் படுத்தாது எனது பாடலின் முதல் விமர்சகராகவும் எனது மனைவி நௌசியா இருக்கிறார். மகள் சஷா, மகன் ஹசன். இவர்கள்தான் எனது  உலகம்.
இப்போது எனது இசைப் பயணம் கடல் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. பெயர் குறிப்பிட முடியாத தென்னிந்திய திரைப்படத்தில் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இசை குரு ரஹ்மானுடன் பல திரைப்படங்களில் பணிபுரிந்தவரினூடாக எனக்கு இப்படி ஒரு வாப்பு கிடைத்தது இறைவன் சித்தம். இந்தப் படம் முடிவுறும் தருவாயில் உள்ளது. அது பற்றியும் விரைவில் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
புதிதாக இசைத்துறையில் சாதிக்கும் நோக்குடன் வரும் இளைஞர்கள் தொழில் நுட்பத்தில் பின் நிற்க வேண்டாம். உங்கள் மெட்டுகள், இசை சிறப்பாக இருப்பினும், தொழில்நுட்பத்தில் தான் சறுக்கி விடுகிறோம். அதையும் சிறப்பாகக் கவனித்து, இசையை ஒன்றையொன்று குழப்பாத வகையில் அமைத்து, முடிந்தளவு குரல் பதிவில் அந்த பாடலுக்கான உணர்வுகள் வரும் வரையில்  முயற்சி செது பாருங்கள். கட்டாயம் அதில் உங்களுக்கு வெற்றி இருக்கும்.
இசைப் பயிற்சி அல்ல... இசை உணர்ச்சி...!

வெள்ளி, 15 மார்ச், 2013

சிறந்த அறிவிப்பாளர்கள் என்பதை விட செய்தி வாசிப்பாளராவதே எனது இலட்சியம்

சூரியன் வா னொலி அறி விப்பாளர்களில் ஒருவர் தான் கும்மாளம் வேணிஜா. குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர். இந்த வாரம் பேஸ்புக் பகுதியினூடாக சுவாரஷ்யமான விடயங்களை உங்களுடன் பகிர் ந்துகொள்கிறார் வேணிஜா நாராயணசாமி.
நேர்காணல்:எஸ்.ரோஷன்
 ஹாய்... எல்லோருக்கும் வணக்கம்! என்னுடைய சொந்த இடம் இயற்கை அழகின் இருப்பிடமான கண்டி.  அப்பா நாராயணசாமி, அம்மா புஷ்பம், செல்லமா ஒரு குட்டித் தங்கை ஜெயமலர் இதுதான் என்னோட உலகம். என் உணர்வுகளுக்கும் சந்தோசத்திற்கும் உயிர் கொடுக்கும் அழகிய கோவில்.
என் வளர்ச்சிக்கு எப்போதும் பக்க பலமா இருந்தது எனது பாடசாலைதான். (கலஹா ஸ்ரீ ராமகிருஷ்ணா மத்திய கல்லூரி) அத்தோடு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங் கலைமாணி பட்டப் படிப்பினை நிறைவு செய்து இன்று உங்கள் முன் ஒரு அறிவிப்பாளராக இருக்கின்றேன்.

*அறிவிப்புத் துறை பிரவேசம்,  முதல் நாள் அனுபவம்:
வானொலி அறிவிப்பாளராக வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. அதற்காக பல முயற்சிகளை செய்தேன். அதற்கான பலன் சில மாதங்கள் கழித்து எனக்கு கிடைத்தது. நேர்முகத் தேர்வுகளின் பின் இறைவனின் கருணையால் தெரிவு செயப்பட்டேன்.
முதல் நாள் அனுபவம் மறக்க முடியாத ஒன்று. தூரத்தே இருந்து காற்றலை வழியே இரசித்த குரல்களுக்கு உரியவர்களோடு அருகே இருந்து வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. சூரிய குடும்பத்தில் நானும் ஒரு அங்கமா இணைந்து கொண்டதும் என் சந்தோசங்களை இரட்டிப்பாக்கின. மேலும் இந்தத் துறையில் என்னை பட்டை தீட்டிய பெருமை நடராஜசிவம் அவர்களையே சாரும்.

*நீங்கள் தொகுத்து வழங்கும் சூரியன் வானொலியின் (கும்மாளம்) நிகழ்ச்சி பற்றி சொல்ல முடியுமா?
தேடல் சார்ந்த தரமானதொரு நிகழ்ச்சிதான் கும்மாளம். ஒவ்வொரு நாளும் புதிய புதிய விடயங்களோடு மணம் வீசும் புதுமையான களம். நேயர்களுக்கு மட்டும் அல்லாமல் நிகழ்ச்சியை தொகுத்து அளிக்கும் எம் அறிவுக்கும் சரியானதோர் விருந்தாகத்தான் இந்நிகழ்ச்சி அமைகின்றது.

*அறிவிப்புத்துறையைச் சார்ந்தவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள் ஆனால் நீங்கள் சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி இருக்கக்கூடாது?
மெ வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் கடமையே கண்ணாயினர். அதுபோல் கடமையில் எப்போதுமே கண்ணும் கருத்துமா இருக்க வேண்டும். எந்த விடயத்திலும் அலட்சியமா இருந்துவிடக் கூடாது. அலட்சியத்தால் பாரிய ஆபத்துகளை சந்திக்க நேர்ந்திடும். அத்தோடு திறமையை நம்பாமல் மற்றவர்களை காக்கா பிடித்து முன்னால் வர நினைப்பது, குரலை மட்டும் வைத்துக்கொண்டு திறன்களை வளர்க்காதவர்கள் ஓர் சிறந்த அறிவிப்பாளராகிவிட முடியாது.

*நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது நடந்த சுவாரஷ்யமான அனுபவம் பற்றி சொல்லுங்களேன்:
ஒரு தடவை எம் கலையக தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. நான் பேச ஆரம்பித்ததும் மறுமுனையில் ஒருவர் மிரட்டும் தொனியில் ஆங்கிலத்தில் உரையாட, எம் மேலதிகாரிகளில் யாரோதான் அழைப்பில் இருக்கின்றார் என பயந்து நடுங்க ஆரம்பித்துவிட்டேன். சற்று நேரத்தின் பின்னர் மறு முனையில் சிரிப்பு சத்தம் கேட்கவும் தான் புரிந்தது, அது எம் சக அறிவிப்பாளர் என...

*பாடசாலை அனுபவம்?  பாடசாலையில் நீங்கள் செத குறும்புகள்:
“அது ஒரு காலம்... அழகிய காலம்...சு வாழ்வில் எப்போதுமே மறக்க முடியாத தருணங்கள் அவை. பாடசாலை காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து செத குறும்புகள் ஏராளம். அதில் குறிப்பிட்டுச் சொல்வதானால் ஒரு நாள் ண்tச்ஞூஞூ ட்ஞுஞுtடிணஞ் நடக்கும்போது நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து வகுப்பில் துப்பட்டாவை பந்து போல சுற்றி எறிந்து  விளையாடினோம். அதை பார்த்த அதிபர் ஒரு சில நாட்கள் எம்மை வகுப்பிற்குள் வர அனுமதிக்கவில்லை.

*இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?
இலங்கையைப் பொறுத்தவரைக்கும் லோஷன் அண்ணா, நவநீதன் அண்ணா  மற்றும் சந்துரு அண்ணா ஆகியோர். இந்தியாவில் ஆஐஎ ஊM பாலாஜி.

*நீங்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி எது?
இளைஞர்களின் துடிப்பை அறிந்து எப்போதுமே தரமான புதிய நிகழ்சிகளை படைக்கும் விஜய் டி.வி. தான் எனக்கு எபோதுமே பிடிக்கும்.

*உங்களுடைய ரோல் மொடல் யார்?
மேனகா மற்றும் ஷைலி 

*சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருக்கின்ற அனுபவம் பற்றி சொல்ல முடிமா?
இங்கு வேலை செகின்றோம் எனும் உணர்வே எமக்கு வருவதில்லை. இது எங்கள் இல்லம், இங்கு இருக்கும் ஒவொருவரும் உணர்வுகளை மதித்து செயற்படும் நல்ல உறவுகள், அத்தோடு எம் நேயர்கள் எம் மீது காட்டும் அன்பும் அளப்பரியது... மொத்தத்தில் இங்கு கிடைக்கும் ஒவ்வொரு அனுபவங்களும் இனிமையானவை.  

*சமீபத்தில் நீங்கள் பார்த்த படம்? பிடித்த நகைச்சுவை நடிகர்?
 பிடித்த படம் துப்பாக்கி. பிடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு.

*உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதா சம்பவம் பற்றி சொல்ல முடியுமா?
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாதது.

*அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல் எது?
 மெல்லினமே... மெல்லினமே...

*உங்களிடம் உள்ள அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் என்ன?
சிறுகதை, கவிதை எழுதுவது, நடனத்திலும் சற்று ஆர்வம் உள்ளது.

*சந்திக்க விரும்பும் நபர்?
அப்துல் கலாம்

*உங்களுடைய (பிளஸ், மைனஸ்) என்ன?
பிளஸ் எல்லோரிடமும் நட்போடு பழகுவது, மைனஸ்னா கோபமும் கண்ணீரும் தான்.

*நீங்கள் அடிக்கடி கடுப்பாகும் விடயம்?
மும்முரமாக ஏதாவது வேலையில் ஈடுபடும் போது யாரவது அரட்டை அடித்தால் பிடிக்காது...

*நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்? உள்ளத்தில் அன்போடு  உறவாடும் வீணை
உதடுகள் இரண்டுமோ அமுதத்தின் பானை
பதியாத மட மாது பார்வைக்கு பதிலேது
நடை போடும் அநு ராகம் நடமாடும் இளமேகம்
அவள் உள்ளம் பெருங் கோயில் ஊண்  உடம்பு ஆலயம்
தெருவிலே அந்த தேவதை நடந்து வந்தால் இலட்சம் விழிகளால்
அவளுக்கு லட்சார்ச்சனை ஆனால்
அவள் வாழ வேண்டும் என்றால் தர வேண்டுமாம் வரதட்சணை
(மேத்தாவின் கவிதை)

*யாருடன் இணைந்து நிகழ்ச்சி செயப் பிடிக்கும்?  தரணிதரனோடு இணைந்து நிகழ்ச்சி செய பிடிக்கும்.

*இலட்சியம்: எதிர்காலத்தில் நேயர்கள் மத்தியில் வேணிஜா நாராயணசாமி என்பவள் நல்ல அறிவிப்பாளர் என்பதை விட ஒரு சிறந்த செதி வாசிப்பாளர் என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது கனவு.

*உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது? சூரியனை எப்போதும் தமது உயிராக நேசிக்கும் நேயர்கள் மீதான எனது அன்பு மாற்றமில்லாமல் எபோதும் தொடரும்...!

வெள்ளி, 1 மார்ச், 2013

ஏ.ஆர்.ரகுமான் மாதிரி இருக்கணும்

5வருடங்களை வெற்றிகரமாகக் கடந்து 6 ஆவது ஆண்டிலும் தனது பயணம் தொடரும் வெற்றியில் உற்சாகமாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நேயர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனித்துவத்தை பேணிக் கொண்டிருக்கும் அறிவிப்பாளர் சக்சி! 
அன்பான உதயசூரியன் வாசகர்களும் வெற்றி அறிவிப்பாளர் சக்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

என்னைப்பற்றி சொல்லனும்னா?  அம்மா, அப்பா நான் என்ற ஒரு சிறு குடும்பம் எங்களது. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியல் கல்வி கற்றேன். பாடசாலைக் காலத்திலிருந்தே அறிவிப்பாளர் மன்றத்தில் உறுப்பினராகவும் தொடர்ந்து தலைவராகவும் இருந்திருக்கிறேன். இவ்வாறு இருக்கும் பொழுது பாடசாலையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து  வழங்கும் வாப்பு எனக்குக் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் பாடசாலையில் வருடந்தோறும் நாங்கள் நடத்து Hindu FM  வானொலியும் அறிவிப்புத் துறைக்கு வருவதற்கு ஒரு உந்துசக்தியாக இருந்தது.  பாடசாலைக்காலத்தில்  இருந்தே வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாப்புகள் கிடைத்ததோடு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் அக்னி என்ற விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடிய வாப்பும் கிடைத்தது.  இதன்மூலமாக உயர்தரம் முடித்துவிட்டு இந்தத் துறைக்கு உத்தியோகபூர்வமாக வந்தேன்.
நீங்கள் தொகுத்து வழங்கும் vettri FM வானொலியின்  நிகழ்ச்சி பற்றி சொல்ல முடியுமா?
நகைச்சுவை பூர்வமாக நிறைய விடயங்களை சொல்லும் கலகலப்பு நிகழ்ச்சி. வாரநாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை, வெற்றி நைற் டிரைவ்  (Night Drive) மொழி கடந்த இசையினால் (Tamil/ English/ Hindi/ Sinhala இசை) மக்களைக் குதூகலப்படுத்தும் ஒரேயொரு நிகழ்ச்சி (சனி இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை), ஞாயிறு  1 மணி முதல்  3 மணி வரை சக்சியுடன் சனிவூட் நிகழ்ச்சி போன்றவற்றை தொகுத்து வழங்குகின்றேன்.

அறிவிப்புத்துறையைச்  சார்ந்தவர்கள்  இப்படித்தான் இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் நீங்கள் சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி இருக்கக்கூடாது?
மக்களுக்குத் தேவையான  விடயங்களை உரிய நேரத்தில் உரிய முறையில் ஊடகத்தில் சொல்ல வேண்டுமே ஒழிய வெளியில் பிதற்றுபவனாக இருக்கக் கூடாது.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது நடந்த சுவாரஷ்யமான அனுபவம் பற்றி சொல்லுங்களேன்.
நிகழ்ச்சி நடத்துவதே ஒரு சுவாரஷ்யம் தான், தினம் தினம் ஏராளம் சுவாரஷ்யங்கள் நடக்குது. எதை சொல்றது?

பாடசாலை அனுபவம் எப்படி?, பாடசாலையில் நீங்கள் செத சேட்டை, அதனால் அடிவாங்கிய அனுபவம் உண்டா?
பாடசாலை காலங்களில் நண்பர்களோடு செத குறும்புகள் ஏராளம்! நிறைய சேட்டைகள் செதிருக்கிறேன். மாணவத்தலைவன் என்றபடியால் பாட நேரத்தில் வகுப்பில் இருப்பதில்லை. இதனால் பாட ஆசிரியர்களின் கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறேன். ஒருமுறை எட்டாம் ஆண்டு படிக்கும் போது  உயர்தர வகுப்புக்குள் இருந்த படியால் அப்போதைய அதிபர் என் முதுகில் அடித்த  அடி இன்னும் வலிக்கிறது.

போட்டிகள் நிறைந்த இந்த துறையில் உங்களின் அடையாளம் என்ன?
மைக் முன்னாடி காட்டுக்கத்து கத்துறது, அதாவது சரளமாக கதைக்கிறது. ஒவ்வொரு நாளும் வித்தியாச வித்யாசன நிகழ்ச்சிகளை படைக்க முயற்சி செய்வது. 

இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார்?
ஒவ்வொருவரிடமும் வித்தியாசமான  ஒவ்வொரு திறமை உண்டு. அவற்றை ரசிப்பேன் நல்லவற்றை பின்பற்றுவேன்.

உங்களுடைய ரோல் மொடல் யார்?
A.R.RAHMAN அவசரப்பட்டு அவர்போல பெரிய இசை மேதையா வரப்போறேன்னு நினைச்சுடாதிங்க.  என்ன தான் இமயத்துல இருந்தாலும் அவர் போல்  எளிமையான இயல்பு எனக்கு எப்போதும் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்.

தொலைக்காட்சியிலும் /  வானொலியிலும்  நிகழ்ச்சி செயும்போது உங்களுக்கு  ஏற்படுகின்ற அனுபவம் அல்லது வித்தியாசம்  பற்றி சொல்ல முடிமா?
இரண்டுமே வெவ்வேறான ஊடகங்கள். உங்களுக்கு தெரியும் வானொலியில் குரல் மட்டுமே வெளிக்காட்டப்படும். ஆனால், தொலைக்காட்சிக்கு உடல் மொழி, சாதாரணமாக அருகிலிருந்து கதைப்பது போன்ற உணர்வை பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படுத்தவேண்டியிருக்கிறது.  

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் ஏது? பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? எந்தப்படம்?
விஸ்வரூபமெடுத்த விஸ்வரூபம்  1st day 1st show
நகைச்சுவை நடிகர்: அப்போ வடிவேல் இப்போ சந்தானம்

உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதா சம்பவம் பற்றி சொல்ல முடியுமா?
இன்னும் என் மனதை தாக்கும் கசப்பான அனுபவம் எதுவும் இல்லை, நான் பச்ச மண்ணுப்பா. அப்படியே கெட்ட அனுபவம் ஏதும் நடந்தா அடுத்த நிமிஷமே மறந்துடுவேன்.

எந்த வகையான பாடல் உங்களுக்கு பிடிக்கும்? அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல் எது?
புதிய பாடல்களை எப்போதும் ரசிப்பேன். அண்மைக்காலமா காதல் பாடல்கள் ரொம்பப் பிடிக்குது, காதல் மாதம் என்றபடியாலோ தெரியல...

உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?
இசையை ரசிப்பேன், வேலை முடிந்ததும் நண்பர்களோடு அரட்டை, பின்பு குறட்டை.  குறிப்பாக பழைய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை சேகரிப்பது.

உங்களிடம் உள்ள அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் என்ன?
கொஞ்சம்  Magic செவேன். இதுதான் என்னுடைய தொலைகாட்சி பிரவேசத்துக்கு உறுதுணையாக இருந்தது.

சந்திக்க விரும்பும் நபர் யார்?
கடவுளைத் தான், ஏன் தெரியுமா? இந்த உலகம் தலை கீழா இருக்கு. அதை கொஞ்சம் நேராக்கிட்டு போங்கனு சொல்லத் தான்.  சும்மா சொன்னேங்க தப்ப நினைக்காதீங்க...

உங்களுடைய (பிளஸ்,மைனஸ்) என்ன?
பிளஸ்: எல்லோரோடும் நொடிப்பொழுதில் பழகி விடுவேன்.
மைனஸ்: மைக்கில கத்துறது போதாதுன்னு வெளியிலையும் அதிகமா கத்திடுவேன்.

நீங்கள் அடிக்கடி கடுப்பாகும் விடயம் என்ன?
நேரடி நிகழ்ச்சி செது கொண்டிருக்கும் போது  என்னோடமொபைலுக்கு கோல் பண்ணி பாட்டு கேட்குறது.

அடிக்கடி எந்த பொருளை மறப்பீர்கள்?
என்னோட கண்ணாடி

நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்?
steve jobs Cß Think Different Change the world என்ற கருத்து.

உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
இதே அன்பும் ஆதரவும் எப்போதும் வேண்டும், விமர்சனகளையும், கருத்துகளையும் உடனுக்குடன் தெரிவிக்கும் நேயர்களுக்கு நன்றி.
எஸ்.ரோஷன்

புதன், 6 பிப்ரவரி, 2013

சூரியன் அறிவிப்பாளராக இருப்பதை எண்ணி பெருமை அடைகிறேன்

 சூரியன் வானொலி அறிவிப்பாளர் ????? உதயசூரியன் பத்திரிகைக்கு அளித்த நேர்காணல்.
நேர்காணல்:  எஸ்.ரோஷன்

வானொலி ரசிகர்கள் பலரை கண்ணயரவிடாமல் செய்தது சூரியனின் ரீங்காரம் நிகழ்ச்சி என்று சொல்லலாம்.  இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவரும், செய்தி வாசிப்பாளருமான லரீப் இந்த வாரம் பேஸ்புக் பகுதியினூடாக  இணைந்து கொள்கிறார்.

ஹாய் பிரண்ட்ஸ் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
 என்னுடைய சொந்த ஊர் செந்நெல் விளைகின்ற சம்மாந்துறை. அப்பா அமீர் அலி, அம்மா அவ்வா உம்மா.  வீட்டில் நான் தான் கடைசிப் பிள்ளை. இரண்டு அண்ணன்மார், ஒரு அக்கா. அக்காவின் செல்லக் குட்டீஸ். இதுதான் என்னுடைய உலகம்.
என் திறமைக்கு களம் கொடுத்தது எனது பாடசாலை (சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி). அறிவிப்பாளரானது தற்செயலாக நடந்த விடயம். நேர்முகத் தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்டு சூரியக் குடும்பத்தில் நானும் ஒரு அங்கமாக (பகுதிநேர அறிவிப்பாளராக) இருக்கின்றேன். இந்த அளவு என்னை வளர்த்துவிட்டு, ஒவ்வொரு நுட்பங்களையும் சொல்லிக் கொடுத்த பெருமை சூரியன் குடும்பத்தையே சாரும். 

நீங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பற்றி?
சூரியனின் விடிய விடிய இரவு சூரியன் மற்றும் ரீங்காரம் நிகழ்ச்சிகளையும், ரமலான் மாத முஸ்லிம் நிகழ்ச்சிகள் மற்றும் சனி,  ஞாயிறு தினங்களில் விடுமுறை   நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகின்றேன்.
இதில் ரீங்காரம் நிகழ்ச்சி நேயர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரீங்கார இரசிகர்களை கண்ணயராது காற்றோடு கதை பேச வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கவிதைகளையும் அதற்கு ஏற்ற பாடல்களையும் வழங்கி என்னால் இயலுமான அளவில் நேயர்களை சந்தோஷப்படுத்தி வருகிறேன்.

பாடசாலை அனுபவம் பற்றி?

 ஒரு தடவை  புதிதாக பாடசாலைக்கு வந்த மாணவர்களை விளையாட்டாக பகிடி வதை செய்து மாட்டிக் கொண்டு அடிவாங்கியது இன்றைக்கும் மறக்க முடியாது.
அப்புறம் பிரிவென்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாத எங்களை பிரித்து அர்த்தம் காண்பித்து சென்ற பள்ளிக்கூட கடைசி நாள் இன்னும்
என் கண்முன்னே வந்து போகிறது.

போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்களின் இலக்கு என்ன?
பரந்ததே உலகம்! சிறந்ததே          செல்வம். செல்வங்களில் சிறந்தது அறிவுச் செல்வம். அதே அறிவால்  போட்டித் தன்மையோடு போட்டி யிடும் இளைஞர்களுக்கு மத்தியில் நானும் பலரும் போற்றும்  ஓர்   சிறந்த செதி வாசிப்பாளராக மிளிர
வேண்டும் என்பதே எனது இலக்கு.

அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார்?

நிறையப் பேரை பிடிக்கும். குறிப்பிட்டுச் சொல்வதானால் நவா அண்ணா, சந்ரு அண்ணா, ரவூப் அண்ணா ஆகியோரைப் பிடிக்கும்.

சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருக்கின்ற அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?
வானில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவிற்கு ஈடாகுமா? அதேபோல உலகில் எத்தனை வானொலிகள் இருந்தாலும் அவை  சூரியனிற்கு ஈடாகுமா? எனவே அப்படியான சூரிய குடும்பத்தில் இருப்பதை எண்ணிப் பெருமையடைகிறேன்.
பிரபலங்களின் நட்பு, நாட்டு நடப்புகள் உலக விவகாரங்கள் போன்ற பல விடயங்களை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. என்னை  அடையாளப்படுத்திய பெருமை சூரியனையே சாரும்.

வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்?
2011.7.25 இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.  ஏனென்றால் இந்த நாளில்தான் நான் சூரியனில் முதன் முதலாக நவா அண்ணா மூலம் என்றென்றும் புன்னகை நிகழ்ச்சியில்   அறிமுகமாகினேன். சந்தோஷத்தின் உச்சகட்டம் எது என்பதை அன்று நான் உணர்ந்தேன்.

அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல் எது?
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்...

அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் ?
விளையாட்டு, கவிதை எழுதுதல்

உங்களுடைய (பிளஸ், மைனஸ்) என்ன?
பிளஸ்: எல்லோரோடும் இணங்கிப் போதல்
மைனஸ்: தடுமாற்றம்

அடிக்கடி கடுப்பாகும் விடயம் என்ன?
தொலைபேசி அழைப்பிற்கு பதில் இல்லாமல் இருக்கும் போது.

நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்?
""யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப்பெயல்  நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே ''
எனும் கவித்துவமான வரிகள்.


நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
அறிவிப்பளர்கள் பிறப்பதில்லை உருவாகுபவர்கள். ஆகவே அவர்களின் திறமையை பாராட்டும் நீங்கள் அவர்களுடைய சிறு சிறு குறைகளுக்காக அவர்களை விட்டு  விலகாதீர்கள்.