Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

சனி, 23 மார்ச், 2013

எனக்கு நானே ரோல் மொடல்...

சூரியன் வானொலியின் மூலம் அறிவிப்புத் துறைக்கு அறிமுகமாகி வசந்தம் டி.வி.யின் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி இன்றி வெற்றி எப்.எம்.மின் அறிவிப்பாளராக இருப்பவர் பூஜா.
இந்த வாரம் பேஸ்புக் பகுதியினூடாக உங்களை சந்திக்கிறார்.

எனது ரசிகர்களுக்கு வணக்கம்! எனது சொந்த ஊர், பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கொழும்புதான். அம்மா ஒரு ஆசிரியர். தங்கை, தம்பி, நான்  என அன்பான அழகான சிறிய குடும். ஆரம்பம் முதல் உயர்கல்வி வரை கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். எனது பாடசாலையிலேயே இரண்டு அறிவிப்பாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவர் என்பதில் பெருமையடைகிறேன்.
ஆரம்பத்தில் சூரியனில் இடம்பெற்ற தேர்வில் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் எனது அறிவிப்புப் பயணம் தொடர்ந்தது.
நீங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி குறித்து சொல்ல முடியுமா?
வார நாட்களில் மதியம் 1 முதல் 3 மணிவரை இடம் பெறும் கூல் ஸ்போர்ட்ஸ் அதைத்தவிர நேயர்களின் விருப்பத் தெரிவு பாடல்கள் வாழ்த்துகளுடன் இணைந்து வரும் மியூசிக் மசாலா.

அறிவிப்புத்துறையைச் சார்ந்தவர்கள் இப்படிதான் இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள் ஆனால் நீங்கள்


சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி
இருக்கக்கூடாது?
கேள்வி கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஒரு அறிவிப்பாளருக்கு தலைக்கனம் இருக்கக் கூடாது.  தனது பெயரைப் பயன்படுத்தி சொந்த காரியங்களில் ஈடுபடல், சுய விளம்பரம் செதல் என்பவை இருக்கவே கூடாது.

பாடசாலை அனுபவம்?
பாடசாலைக் காலத்தினை மறக்கவே முடியாது. எனது பாடசாலையில் நான் வகிக்காத பதவிகளே இல்லை. எல்லா போட்டிகளிலும் பங்குபற்றுவேன். என் திறமைகளை வெளிக்கொணர்ந்த களம் எனது பாடசாலையும், ஆசிரியர்களும் தான்.

போட்டிகள் நிறைந்த இந்த துறையில் உங்களின் அடையாளம் என்ன?
வேகமான என்னுடைய பேச்சுப் பாணி

இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார்?
அமரர். கே.எஸ்.ராஜா. கோபி நாத் (நடந்தது என்ன)

நீங்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி?
வசந்தம் டீ.வி. விஜ டீவி.

உங்களுடைய ரோல் மொடல் யார்?
எனக்கு நானே ரோல் மொடல். எனினும் சேத்தனா லியனகே. (சிரச செதி வாசிப்பாளர்) பிடிக்கும்

சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருந்த அனுபவம் பற்றி சொல்ல முடிமா?
என்னை ஒரு அறிவிப்பாளராக அறிமுகப்படுத்தியது என் அன்னை வானொலி சூரியன் எப்.எம்.தான் என்னைத் தெரிவு செத லோஷன் அண்ணா, எனக்குப் பயிற்சி அளித்த சிரேஷ்ட அறிவிப்பாளர்களை மறக்க முடியாது. ரமணன் அண்ணா, கிருஷ்ணா அண்ணா, பரணி அண்ணா, நவா அண்ணா, விமல் அண்ணா, சங்கீதா, குமுதினி அக்கா இவர்கள் எல்லோருமே என்னை பட்டை தீட்டி செம்மைப்படுத்தியவர்கள்

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம்? பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? 
ரசித்து பார்த்த படம் கும்கி. பிடித்த நகைச்சுவை நடிகர் சந்தானம் (கண்ணா லட்டு தின்ன ஆசையா?)

வாழ்வில் மறக்க நினைப்பது எது?

இத்துறையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் ?
பூவே வா பேசும் போது...

உங்களுடைய பொழுதுபோக்கு?
இசை கேட்பது, ஷொப்பிங் செல்வது, நல்ல நிகழ்ச்சிகளை பார்ப்பது, நகைச்சுவைக் காட்சிகளை இரசிப்பது, எது கிடைத்தாலும் வாசிப்பது.

உங்களிடம் உள்ள அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் என்ன?
அழகுக்கலை, பெயின்டிங்ஸ், சமையல்

திறமைகள் இருந்தும் இந்தத் துறையில் நீங்கள் சாதிக்க முடியாதுபோன சந்தர்ப்பங்கள்?
அப்படி எதுவும் இதுவரை இருக்கவில்லை, எனக்குக் கிடைத்த மூத்த அறிவிப்பாளர்களின் வழிகாட்டலினால் நான் எனது முழுப் பங்களிப்பையும் வழங்குகிறேன். முக்கியமாக எனக்கு கிடைத்த பணிப்பாளர்கள் எல்லோருமே மட்டுமல்ல எங்கள் குழுவிற்கும் திறமைகளைக் வெளிக் காட்டுவதற்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

சந்திக்க விரும்பும் நபர் யார்?
பில் கேற்ஸ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான்.

உங்களுடைய (பிளஸ், மைனஸ்) என்ன?
பிளஸ் எந்த நிகழ்ச்சியையும் செயக்கூடிய ஆற்றல். மைனஸ் கோபம்

அடிக்கடி மறக்கும் பொருள்?
மொபைல் போன், பேனா.

படித்ததில் பிடித்தவை?
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு எனும் கண்ணதாசனின் அற்புதமான தத்துவங்கள்.

யாருடன் இணைந்து நிகழ்ச்சிசெயப் பிடிக்கும்?
அபர்ணா அண்ணா, நான் விரும்பும் திறமையான கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர். ராஜ், கவிதா அக்கா இருவருமே கலகலப்பான அறிவிப்பாளர்கள். இவர்களோடு இணைந்து நிகழ்ச்சி செய்வது மிகவும் பிக்கும்.

உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
இந்த ஆறு வருடமும் எனக்கு அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. என்னைப் பாராட்டுவது போல என் குறைகளையும் சுட்டிக்காட்டி என்னை மென்மேலும் செம்மைப்படுத்துங்கள்.
இது போல இனிவரும் காலங்களிலும் உங்கள் ஆதரவை வழங்குங்கள். அதுவே புதிய நிகழ்ச்சிகளை  படைத்தளிப்பதற்கான உத்வேகத்தை அளிக்கும்.

சனி, 16 மார்ச், 2013

இசை பயிற்சி அல்ல உணர்ச்சி!

நம்நாட்டு கலைஞர் ஷமீல் உதயசூரியனுக்கு அளித்த நேர்காணல்.

நேர்காணல்: எஸ்.ரோஷன்

எல்லா புகழும் இறைவனுக்கே...! உலகின் ஆதாரமான இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறேன். ஹா உதயசூரியன் நண்பர்களே...
நான் ஷமீல். இலங்கையில் இசைத்துறைக்கு நான் அறிமுகமாகி இந்த வருடத்துடன் ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன.
நான் ""கனவின் கருவில்...'' என்னும் பாடலின் மூலம் இசையமைப்பாளனாக, பாடலாசிரியராக, பாடகராக அறிமுகமானேன்.
இசை எனக்கு அறிமுகமானது பெற்றோர் மூலமாகவே. அதனால், எனக்கு இசை மீதான ஆர்வம் என்பது அதிசயத்தக்க ஒரு விடயமாக இருக்கவில்லை. ஆனால்  புதிதாக பாடல்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது ஒரு புதிய முயற்சி.
திருகோணமலையை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் நான் இசைத்துறையை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள்தான்.
முதன் முதலாக  பேட்டியெடுத்து என்னை உற்சாகப்படுத்தியது காண்டீபன் அண்ணாதான். சக்தி வானொலி  மற்றும் அபர்ணா அண்ணா, காண்டீபன் அண்ணா, கஜமுகன் அண்ணா, டயானா, கணாதீபன் அண்ணா, பிரஜீவ் எல்லோருக்கும் இந்த இடத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதன் பிறகு எனக்கு முகவரி தந்தது சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசர்கள் நிகழ்ச்சிதான். சியா அண்ணா, சமந்த ராஜ் ஆகியோர் எனக்கு களமமைத்துத் தந்தவர்களில் முக்கியமானவர்கள்.  
பிறகு சூரியனில் எப்.எம். இல் கிடைத்த வேலை இசை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்போது எத்தனையோ பேருக்கு வேலையின் மகத்துவம் புரிவதில்லை. எனக்குக் கிடைத்த இந்த வேலையை ஒரு கொடையாகவே கருதுகிறேன். முக்கியமாக சூரியன் பொறுப்பதிகாரி நவநீதன் அண்ணாதான் நான் இசைத்துறையில் பிரகாசிக்கக் முக்கிய காரணம். எனக்கு ஒரு வழிகாட்டியாக செயற்பட்டவரும் அவரே. இந்த காலகட்டத்தில் தான் நிறைய பாடல்களை உருவாக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
""எத கேட்டாலும் சூரியன் போல இருக்குமா...'' பாடலில் தொடங்கி இப்போது ஒலிக்கும் ""வான் முழுதும்...'' பாடல் வரை அநேகமான நிலைய குறியிசைகள் செதுள்ளேன். அதில் 2009 ஆம் ஆண்டு ""எத்தனை நாளா...''  என்ற நிலைய குறியிசைக்கு  சிறந்த நிலைய குறியிசைக்கான விருது கிடைத்தது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த நிலைய குறியிசைகளில் 90 வீத வரிகள் நானே எழுதியதுதான்.
 அத்துடன் முக்கியமாக சூரியன் ஆலோசகர் நடராஜசிவம் அவர்களை நினைவுபடுத்தியாக வேண்டும். வானொலி சம்பந்தமான விடயங்களின் ஊற்று என்றும் அவரை சொல்லலாம். அதில் நானும் கொஞ்சம் பருகிக்கொண்டேன்.
அலுவலக கலைஞர்கள் தவிர்ந்து, எனது பாடல்களுக்காக இலங்கை, இந்தியா, அமெரிக்கா, மலேசியா போன்ற நாட்டுக் கலைஞர்கள் பலருடன் பணி புரிந்துள்ளேன். எனது வாழ்வில் ""கனவின் கருவில்...'' பாடலுக்கு அடுத்தபடியாக பெரிய திருப்பம் தந்தது மழைவிழியின்... பாடல்.
இதன்மூலம் கிடைத்த ஒரு மிகப்பரிய கவிஞர் நண்பன் சதீஷ்காந்த். எனது பாடல்களுக்கு நானே வரி எழுதுவதிலிருந்து சற்று ஒதுங்கக் காரணமாக அமைந்தவர். அவரது அறிமுகத்தின் பின் அவரது பாடல் வரிகள்தான் இப்போது எனது இசையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் இசையமைப்பாளர் நிக்கி  எனது இசையைத் தாண்டிய தொழிநுட்ப அறிவு வளரக் காரணமாக இருந்தவர்.
அமெரிக்க கலைஞர்களுக்காக இசையமைக்கும் போது தான் நிறைய ஒலி பொறியியலாளர்களின் நட்பு கிடைத்தது. எனது பாடல்களில், அன்றிலிருந்து இன்று வரை சண்டைபோடும் சிறந்த ஒளி நயம், அதில் என்றுமே நான் பின் வாங்கியதில்லை. இன்று வரை ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு வகையாகத்தான் அமைகின்றன. அதன் சிறந்த இசைக் கலவைக்காக கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். இன்னும் எனக்கு திருப்தி ஏற்படாத விடயம் இசை மட்டும் தான்.
எனது வாழ்க்கையில் மனைவி, பிள்ளைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். மனைவியின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியம். ஏனென்றால் இசைப்பயண ஆரம்பம் தொடக்கம் இன்று வரை எனக்கு 2 அல்லது 3 மணி நேரம்தான் தூங்கக் கிடைக்கும். அப்படி இருக்க குடும்ப வேலைகளை முழுதுமாக தன் பொறுப்பில் எடுத்து செது வருகிறார். என்னை எந்த கஷ்டமும் படுத்தாது எனது பாடலின் முதல் விமர்சகராகவும் எனது மனைவி நௌசியா இருக்கிறார். மகள் சஷா, மகன் ஹசன். இவர்கள்தான் எனது  உலகம்.
இப்போது எனது இசைப் பயணம் கடல் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. பெயர் குறிப்பிட முடியாத தென்னிந்திய திரைப்படத்தில் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இசை குரு ரஹ்மானுடன் பல திரைப்படங்களில் பணிபுரிந்தவரினூடாக எனக்கு இப்படி ஒரு வாப்பு கிடைத்தது இறைவன் சித்தம். இந்தப் படம் முடிவுறும் தருவாயில் உள்ளது. அது பற்றியும் விரைவில் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
புதிதாக இசைத்துறையில் சாதிக்கும் நோக்குடன் வரும் இளைஞர்கள் தொழில் நுட்பத்தில் பின் நிற்க வேண்டாம். உங்கள் மெட்டுகள், இசை சிறப்பாக இருப்பினும், தொழில்நுட்பத்தில் தான் சறுக்கி விடுகிறோம். அதையும் சிறப்பாகக் கவனித்து, இசையை ஒன்றையொன்று குழப்பாத வகையில் அமைத்து, முடிந்தளவு குரல் பதிவில் அந்த பாடலுக்கான உணர்வுகள் வரும் வரையில்  முயற்சி செது பாருங்கள். கட்டாயம் அதில் உங்களுக்கு வெற்றி இருக்கும்.
இசைப் பயிற்சி அல்ல... இசை உணர்ச்சி...!

வெள்ளி, 15 மார்ச், 2013

சிறந்த அறிவிப்பாளர்கள் என்பதை விட செய்தி வாசிப்பாளராவதே எனது இலட்சியம்

சூரியன் வா னொலி அறி விப்பாளர்களில் ஒருவர் தான் கும்மாளம் வேணிஜா. குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர். இந்த வாரம் பேஸ்புக் பகுதியினூடாக சுவாரஷ்யமான விடயங்களை உங்களுடன் பகிர் ந்துகொள்கிறார் வேணிஜா நாராயணசாமி.
நேர்காணல்:எஸ்.ரோஷன்
 ஹாய்... எல்லோருக்கும் வணக்கம்! என்னுடைய சொந்த இடம் இயற்கை அழகின் இருப்பிடமான கண்டி.  அப்பா நாராயணசாமி, அம்மா புஷ்பம், செல்லமா ஒரு குட்டித் தங்கை ஜெயமலர் இதுதான் என்னோட உலகம். என் உணர்வுகளுக்கும் சந்தோசத்திற்கும் உயிர் கொடுக்கும் அழகிய கோவில்.
என் வளர்ச்சிக்கு எப்போதும் பக்க பலமா இருந்தது எனது பாடசாலைதான். (கலஹா ஸ்ரீ ராமகிருஷ்ணா மத்திய கல்லூரி) அத்தோடு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங் கலைமாணி பட்டப் படிப்பினை நிறைவு செய்து இன்று உங்கள் முன் ஒரு அறிவிப்பாளராக இருக்கின்றேன்.

*அறிவிப்புத் துறை பிரவேசம்,  முதல் நாள் அனுபவம்:
வானொலி அறிவிப்பாளராக வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. அதற்காக பல முயற்சிகளை செய்தேன். அதற்கான பலன் சில மாதங்கள் கழித்து எனக்கு கிடைத்தது. நேர்முகத் தேர்வுகளின் பின் இறைவனின் கருணையால் தெரிவு செயப்பட்டேன்.
முதல் நாள் அனுபவம் மறக்க முடியாத ஒன்று. தூரத்தே இருந்து காற்றலை வழியே இரசித்த குரல்களுக்கு உரியவர்களோடு அருகே இருந்து வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. சூரிய குடும்பத்தில் நானும் ஒரு அங்கமா இணைந்து கொண்டதும் என் சந்தோசங்களை இரட்டிப்பாக்கின. மேலும் இந்தத் துறையில் என்னை பட்டை தீட்டிய பெருமை நடராஜசிவம் அவர்களையே சாரும்.

*நீங்கள் தொகுத்து வழங்கும் சூரியன் வானொலியின் (கும்மாளம்) நிகழ்ச்சி பற்றி சொல்ல முடியுமா?
தேடல் சார்ந்த தரமானதொரு நிகழ்ச்சிதான் கும்மாளம். ஒவ்வொரு நாளும் புதிய புதிய விடயங்களோடு மணம் வீசும் புதுமையான களம். நேயர்களுக்கு மட்டும் அல்லாமல் நிகழ்ச்சியை தொகுத்து அளிக்கும் எம் அறிவுக்கும் சரியானதோர் விருந்தாகத்தான் இந்நிகழ்ச்சி அமைகின்றது.

*அறிவிப்புத்துறையைச் சார்ந்தவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள் ஆனால் நீங்கள் சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி இருக்கக்கூடாது?
மெ வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் கடமையே கண்ணாயினர். அதுபோல் கடமையில் எப்போதுமே கண்ணும் கருத்துமா இருக்க வேண்டும். எந்த விடயத்திலும் அலட்சியமா இருந்துவிடக் கூடாது. அலட்சியத்தால் பாரிய ஆபத்துகளை சந்திக்க நேர்ந்திடும். அத்தோடு திறமையை நம்பாமல் மற்றவர்களை காக்கா பிடித்து முன்னால் வர நினைப்பது, குரலை மட்டும் வைத்துக்கொண்டு திறன்களை வளர்க்காதவர்கள் ஓர் சிறந்த அறிவிப்பாளராகிவிட முடியாது.

*நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது நடந்த சுவாரஷ்யமான அனுபவம் பற்றி சொல்லுங்களேன்:
ஒரு தடவை எம் கலையக தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. நான் பேச ஆரம்பித்ததும் மறுமுனையில் ஒருவர் மிரட்டும் தொனியில் ஆங்கிலத்தில் உரையாட, எம் மேலதிகாரிகளில் யாரோதான் அழைப்பில் இருக்கின்றார் என பயந்து நடுங்க ஆரம்பித்துவிட்டேன். சற்று நேரத்தின் பின்னர் மறு முனையில் சிரிப்பு சத்தம் கேட்கவும் தான் புரிந்தது, அது எம் சக அறிவிப்பாளர் என...

*பாடசாலை அனுபவம்?  பாடசாலையில் நீங்கள் செத குறும்புகள்:
“அது ஒரு காலம்... அழகிய காலம்...சு வாழ்வில் எப்போதுமே மறக்க முடியாத தருணங்கள் அவை. பாடசாலை காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து செத குறும்புகள் ஏராளம். அதில் குறிப்பிட்டுச் சொல்வதானால் ஒரு நாள் ண்tச்ஞூஞூ ட்ஞுஞுtடிணஞ் நடக்கும்போது நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து வகுப்பில் துப்பட்டாவை பந்து போல சுற்றி எறிந்து  விளையாடினோம். அதை பார்த்த அதிபர் ஒரு சில நாட்கள் எம்மை வகுப்பிற்குள் வர அனுமதிக்கவில்லை.

*இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?
இலங்கையைப் பொறுத்தவரைக்கும் லோஷன் அண்ணா, நவநீதன் அண்ணா  மற்றும் சந்துரு அண்ணா ஆகியோர். இந்தியாவில் ஆஐஎ ஊM பாலாஜி.

*நீங்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி எது?
இளைஞர்களின் துடிப்பை அறிந்து எப்போதுமே தரமான புதிய நிகழ்சிகளை படைக்கும் விஜய் டி.வி. தான் எனக்கு எபோதுமே பிடிக்கும்.

*உங்களுடைய ரோல் மொடல் யார்?
மேனகா மற்றும் ஷைலி 

*சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருக்கின்ற அனுபவம் பற்றி சொல்ல முடிமா?
இங்கு வேலை செகின்றோம் எனும் உணர்வே எமக்கு வருவதில்லை. இது எங்கள் இல்லம், இங்கு இருக்கும் ஒவொருவரும் உணர்வுகளை மதித்து செயற்படும் நல்ல உறவுகள், அத்தோடு எம் நேயர்கள் எம் மீது காட்டும் அன்பும் அளப்பரியது... மொத்தத்தில் இங்கு கிடைக்கும் ஒவ்வொரு அனுபவங்களும் இனிமையானவை.  

*சமீபத்தில் நீங்கள் பார்த்த படம்? பிடித்த நகைச்சுவை நடிகர்?
 பிடித்த படம் துப்பாக்கி. பிடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு.

*உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதா சம்பவம் பற்றி சொல்ல முடியுமா?
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாதது.

*அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல் எது?
 மெல்லினமே... மெல்லினமே...

*உங்களிடம் உள்ள அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் என்ன?
சிறுகதை, கவிதை எழுதுவது, நடனத்திலும் சற்று ஆர்வம் உள்ளது.

*சந்திக்க விரும்பும் நபர்?
அப்துல் கலாம்

*உங்களுடைய (பிளஸ், மைனஸ்) என்ன?
பிளஸ் எல்லோரிடமும் நட்போடு பழகுவது, மைனஸ்னா கோபமும் கண்ணீரும் தான்.

*நீங்கள் அடிக்கடி கடுப்பாகும் விடயம்?
மும்முரமாக ஏதாவது வேலையில் ஈடுபடும் போது யாரவது அரட்டை அடித்தால் பிடிக்காது...

*நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்? உள்ளத்தில் அன்போடு  உறவாடும் வீணை
உதடுகள் இரண்டுமோ அமுதத்தின் பானை
பதியாத மட மாது பார்வைக்கு பதிலேது
நடை போடும் அநு ராகம் நடமாடும் இளமேகம்
அவள் உள்ளம் பெருங் கோயில் ஊண்  உடம்பு ஆலயம்
தெருவிலே அந்த தேவதை நடந்து வந்தால் இலட்சம் விழிகளால்
அவளுக்கு லட்சார்ச்சனை ஆனால்
அவள் வாழ வேண்டும் என்றால் தர வேண்டுமாம் வரதட்சணை
(மேத்தாவின் கவிதை)

*யாருடன் இணைந்து நிகழ்ச்சி செயப் பிடிக்கும்?  தரணிதரனோடு இணைந்து நிகழ்ச்சி செய பிடிக்கும்.

*இலட்சியம்: எதிர்காலத்தில் நேயர்கள் மத்தியில் வேணிஜா நாராயணசாமி என்பவள் நல்ல அறிவிப்பாளர் என்பதை விட ஒரு சிறந்த செதி வாசிப்பாளர் என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது கனவு.

*உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது? சூரியனை எப்போதும் தமது உயிராக நேசிக்கும் நேயர்கள் மீதான எனது அன்பு மாற்றமில்லாமல் எபோதும் தொடரும்...!

வெள்ளி, 1 மார்ச், 2013

ஏ.ஆர்.ரகுமான் மாதிரி இருக்கணும்

5வருடங்களை வெற்றிகரமாகக் கடந்து 6 ஆவது ஆண்டிலும் தனது பயணம் தொடரும் வெற்றியில் உற்சாகமாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நேயர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனித்துவத்தை பேணிக் கொண்டிருக்கும் அறிவிப்பாளர் சக்சி! 
அன்பான உதயசூரியன் வாசகர்களும் வெற்றி அறிவிப்பாளர் சக்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

என்னைப்பற்றி சொல்லனும்னா?  அம்மா, அப்பா நான் என்ற ஒரு சிறு குடும்பம் எங்களது. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியல் கல்வி கற்றேன். பாடசாலைக் காலத்திலிருந்தே அறிவிப்பாளர் மன்றத்தில் உறுப்பினராகவும் தொடர்ந்து தலைவராகவும் இருந்திருக்கிறேன். இவ்வாறு இருக்கும் பொழுது பாடசாலையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து  வழங்கும் வாப்பு எனக்குக் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் பாடசாலையில் வருடந்தோறும் நாங்கள் நடத்து Hindu FM  வானொலியும் அறிவிப்புத் துறைக்கு வருவதற்கு ஒரு உந்துசக்தியாக இருந்தது.  பாடசாலைக்காலத்தில்  இருந்தே வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாப்புகள் கிடைத்ததோடு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் அக்னி என்ற விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடிய வாப்பும் கிடைத்தது.  இதன்மூலமாக உயர்தரம் முடித்துவிட்டு இந்தத் துறைக்கு உத்தியோகபூர்வமாக வந்தேன்.
நீங்கள் தொகுத்து வழங்கும் vettri FM வானொலியின்  நிகழ்ச்சி பற்றி சொல்ல முடியுமா?
நகைச்சுவை பூர்வமாக நிறைய விடயங்களை சொல்லும் கலகலப்பு நிகழ்ச்சி. வாரநாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை, வெற்றி நைற் டிரைவ்  (Night Drive) மொழி கடந்த இசையினால் (Tamil/ English/ Hindi/ Sinhala இசை) மக்களைக் குதூகலப்படுத்தும் ஒரேயொரு நிகழ்ச்சி (சனி இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை), ஞாயிறு  1 மணி முதல்  3 மணி வரை சக்சியுடன் சனிவூட் நிகழ்ச்சி போன்றவற்றை தொகுத்து வழங்குகின்றேன்.

அறிவிப்புத்துறையைச்  சார்ந்தவர்கள்  இப்படித்தான் இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் நீங்கள் சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி இருக்கக்கூடாது?
மக்களுக்குத் தேவையான  விடயங்களை உரிய நேரத்தில் உரிய முறையில் ஊடகத்தில் சொல்ல வேண்டுமே ஒழிய வெளியில் பிதற்றுபவனாக இருக்கக் கூடாது.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது நடந்த சுவாரஷ்யமான அனுபவம் பற்றி சொல்லுங்களேன்.
நிகழ்ச்சி நடத்துவதே ஒரு சுவாரஷ்யம் தான், தினம் தினம் ஏராளம் சுவாரஷ்யங்கள் நடக்குது. எதை சொல்றது?

பாடசாலை அனுபவம் எப்படி?, பாடசாலையில் நீங்கள் செத சேட்டை, அதனால் அடிவாங்கிய அனுபவம் உண்டா?
பாடசாலை காலங்களில் நண்பர்களோடு செத குறும்புகள் ஏராளம்! நிறைய சேட்டைகள் செதிருக்கிறேன். மாணவத்தலைவன் என்றபடியால் பாட நேரத்தில் வகுப்பில் இருப்பதில்லை. இதனால் பாட ஆசிரியர்களின் கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறேன். ஒருமுறை எட்டாம் ஆண்டு படிக்கும் போது  உயர்தர வகுப்புக்குள் இருந்த படியால் அப்போதைய அதிபர் என் முதுகில் அடித்த  அடி இன்னும் வலிக்கிறது.

போட்டிகள் நிறைந்த இந்த துறையில் உங்களின் அடையாளம் என்ன?
மைக் முன்னாடி காட்டுக்கத்து கத்துறது, அதாவது சரளமாக கதைக்கிறது. ஒவ்வொரு நாளும் வித்தியாச வித்யாசன நிகழ்ச்சிகளை படைக்க முயற்சி செய்வது. 

இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார்?
ஒவ்வொருவரிடமும் வித்தியாசமான  ஒவ்வொரு திறமை உண்டு. அவற்றை ரசிப்பேன் நல்லவற்றை பின்பற்றுவேன்.

உங்களுடைய ரோல் மொடல் யார்?
A.R.RAHMAN அவசரப்பட்டு அவர்போல பெரிய இசை மேதையா வரப்போறேன்னு நினைச்சுடாதிங்க.  என்ன தான் இமயத்துல இருந்தாலும் அவர் போல்  எளிமையான இயல்பு எனக்கு எப்போதும் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்.

தொலைக்காட்சியிலும் /  வானொலியிலும்  நிகழ்ச்சி செயும்போது உங்களுக்கு  ஏற்படுகின்ற அனுபவம் அல்லது வித்தியாசம்  பற்றி சொல்ல முடிமா?
இரண்டுமே வெவ்வேறான ஊடகங்கள். உங்களுக்கு தெரியும் வானொலியில் குரல் மட்டுமே வெளிக்காட்டப்படும். ஆனால், தொலைக்காட்சிக்கு உடல் மொழி, சாதாரணமாக அருகிலிருந்து கதைப்பது போன்ற உணர்வை பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படுத்தவேண்டியிருக்கிறது.  

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் ஏது? பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? எந்தப்படம்?
விஸ்வரூபமெடுத்த விஸ்வரூபம்  1st day 1st show
நகைச்சுவை நடிகர்: அப்போ வடிவேல் இப்போ சந்தானம்

உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதா சம்பவம் பற்றி சொல்ல முடியுமா?
இன்னும் என் மனதை தாக்கும் கசப்பான அனுபவம் எதுவும் இல்லை, நான் பச்ச மண்ணுப்பா. அப்படியே கெட்ட அனுபவம் ஏதும் நடந்தா அடுத்த நிமிஷமே மறந்துடுவேன்.

எந்த வகையான பாடல் உங்களுக்கு பிடிக்கும்? அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல் எது?
புதிய பாடல்களை எப்போதும் ரசிப்பேன். அண்மைக்காலமா காதல் பாடல்கள் ரொம்பப் பிடிக்குது, காதல் மாதம் என்றபடியாலோ தெரியல...

உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?
இசையை ரசிப்பேன், வேலை முடிந்ததும் நண்பர்களோடு அரட்டை, பின்பு குறட்டை.  குறிப்பாக பழைய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை சேகரிப்பது.

உங்களிடம் உள்ள அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் என்ன?
கொஞ்சம்  Magic செவேன். இதுதான் என்னுடைய தொலைகாட்சி பிரவேசத்துக்கு உறுதுணையாக இருந்தது.

சந்திக்க விரும்பும் நபர் யார்?
கடவுளைத் தான், ஏன் தெரியுமா? இந்த உலகம் தலை கீழா இருக்கு. அதை கொஞ்சம் நேராக்கிட்டு போங்கனு சொல்லத் தான்.  சும்மா சொன்னேங்க தப்ப நினைக்காதீங்க...

உங்களுடைய (பிளஸ்,மைனஸ்) என்ன?
பிளஸ்: எல்லோரோடும் நொடிப்பொழுதில் பழகி விடுவேன்.
மைனஸ்: மைக்கில கத்துறது போதாதுன்னு வெளியிலையும் அதிகமா கத்திடுவேன்.

நீங்கள் அடிக்கடி கடுப்பாகும் விடயம் என்ன?
நேரடி நிகழ்ச்சி செது கொண்டிருக்கும் போது  என்னோடமொபைலுக்கு கோல் பண்ணி பாட்டு கேட்குறது.

அடிக்கடி எந்த பொருளை மறப்பீர்கள்?
என்னோட கண்ணாடி

நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்?
steve jobs Cß Think Different Change the world என்ற கருத்து.

உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
இதே அன்பும் ஆதரவும் எப்போதும் வேண்டும், விமர்சனகளையும், கருத்துகளையும் உடனுக்குடன் தெரிவிக்கும் நேயர்களுக்கு நன்றி.
எஸ்.ரோஷன்