Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

இந்திய இசைக்களத்திலும் கால்பதிக்கு இலங்கை பாடலாசிரியர் ஸதீஷ்காந்

ஒரே நேரத்தில் இலங்கை, இந்திய, மலேசிய, கனேடிய திரைப்படங்களில் பாடல்களை எழுதிக் கொண்டிருக்கும் இளம் முன்னணிப் பாடலாசிரியர் ஸதீஸ்காந். தினக்குரலின் சகோதர
வெளியிடான உதயசூரியனுக்கு அளித்த நேர்காணல்
நேர்காணல்: எஸ்.ரோஷன்

பல அர்த்தமுள்ள வரிகள் மூலம் முத்திரை பதித்திருக்கும் ஸதீஸ்காந் இந்த வாரம் உங்களுடன்.
ஹாய் வணக்கம்! மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு தான் என் சொந்த ஊர். குடும்பத்தில் 4 பேர். அப்பா மின்சார சபையில் தொழில் புரிகின்றார். அம்மா ஆசிரியை. ஒரே மகன் நான். கடைசி செல்லப்பிள்ளை எனது தங்கை.
நான் இசைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகமான அனுபவம் பற்றி சொல்லப் போனால் சக்தி டி.வி.யின் இசை இளவரசர்கள் நிகழ்ச்சியில் முதல் சுற்றில் பங்கு பற்றினேன். எனினும் 2 ஆம் சுற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
அதன் பிறகு இலங்கையில் இருக்கும் எல்லா இசையமைப்பாளர்களிடமும் வாய்ப்பு கேட்டேன்.
வாய்ப்புகள் எனும் வரம் எல்லோருக்கு இலகுவாக கிடைத்து விடுவதில்லையே! அதற்காக நிறைய முயற்சித்தவம் செய்ய வேண்டும். தளராத மனம் வேண்டும். இவை இருந்தால் வாய்ப்புக் கதவு என்றாவது ஒருநாள் திறக்கும்.
எனக்கும் ஒருநாள் கதவு திறந்தது. 2007 இல் இசையமைப்பாளர் ஷமீலின் இசையில் “வானவில் தேவதை'' எனும் பாடலை எழுத சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்தப் பாடல் மூலம் இசை உலகிற்கு அறிமுகமாகி இதுவரை 3 தேசிய விருதுகளையும் ஒரு மாகாண விருதையும் பெற்றுள்ளேன்.
எனக்கு 2011ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருது ஜனாதிபதியால் அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. ஜனாதிபதி கையால் விருது பெற்றது என்வாழ்வில் மறக்கமுடியாது.
இதுவரை நான் 6 இசைத் தொகுப்புகளில் பாடல்களை எழுதியுள்ளேன். கனவின் கருவில் (ஷமீல்), உள்ளம் திறந்தேன் (ஷமில் நிக்கி), டெஸ்டினி (பிரணிவ்), யாழ் தேவி (ஜெயந்தன்) ஆகிய பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளதுடன். சகிஸ்ணா, பிரஜீவின் இசையில் இரு இசைத் தொகுப்புகள் மிக விரைவில் வெளிவர இருக்கின்றன.

சகிஸ்ணாவின் இசையில் வெளிவரவுள்ள இசைத் தொகுப்பில் இந்தியாவின் பிரபல பாடகர்களான பிரசன்னா, ஸ்ரீ சரண், வந்தனா ஸ்ரீநிவாசன், ஷில்பா, விஜ ஜேசுதாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றவர்கள் பாடியிருப்பது சிறப்பம்சமாகும்.
அதுமட்டுமல்ல இதுவரை 55 பாடல்கள், 20 நிலையக் குறியிசைகள், 100 விளம்பரப் பாடல்களை எழுதியுள்ளேன். வெற்றி, வசந்தம், சூரியன் ஆகிய வானொலிகளில் நிலையக் குறியிசைகளை எழுதியுள்ளேன்.
நான் எழுதிய வானவில் தேவதை, காதல்னா காதல் இல்லை, யாழ்தேவி, சோனியா. ஐ லவ் யு, ஏதேதோ, பூக்கின்றா பூவா, துளித் துளி, காதோடு காதல், உன்னாலே உன்னாலே, ரொக் வேமு ஆகிய பாடல்கள் சமூக வலையத்தளங்களிலும் வானொலி ஊடகங்களிலும் இலட்க் கணக்கான மக்களின் வரவேற்பைப் பெற்றது. அத்தோடு நான் எழுதிய 5 பாடல்கள் (சோனியா, துளித் துளி, காதோடு காதல், ஐ லவ் யு, ஓராயிரம் வெண்ணிலா) சக்தி தமிழ் இசை விருதிற்காக வேறுபட்ட பிரிவுகளில் பரிந்துரை செயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சூரியன் தயாரிப்பில் ஷமீலின் இசையில் எழுதிய மழை விழி என்ற பாடல் இலங்கை இசையில் ஒரு இலக்கண படைப்பாக வெளிவந்ததுடன் தனியார் வானொலிகளில் ஆயிரக் கணக்கான தடவைகள் ஒலிபரப்பானது.
அது top 20 யில் அதிக தடவைகள் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்தது. கிரிஷான் மகேசனின் இசையில் எனது வரிகளில் இந்திய இசைத் துறையின் ஜாம்பவான்களான ஷங்கர் மகாதேவன், எசான், லோ பாடிய ரொக் வெமு (rugby song) பாடல் வலையத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட பாடலாக மாறியதுடன், ஒரே வாரத்தில் 12000 இற்கும் மேற்பட்டவர்களால் download செயப்பட்டது.
இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் A.R.V.லோஷனில் குரலில் எனது வரிகளிலும் ஷமீலின் இசையிலும் வெளிவந்த இறைவன் அருகில் என்ற கவிதை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
அத்துடன் கல்லூரியின் கடைசி பெஞ்ச்சு, இன்று மாலை தென்றலுடன் கூடிய காதல் வரும் ஆகிய கவிதைக் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமாக பேசப்பட்டன.
இதுவரை ஷமீல், பிரஜீவ், கந்தப்பு ஜெயந்தன், ஜோக்ஸ், பிரணிவ், சகிஸ்ணா, சஞ்சித் லக்ஸ்மன், ராஜ், கிரிஷான் மகேசன், ஸ்ரீ விஜ, நிக்கலின் மரியோ, ஒஸ்மான், லக்ஸ்மன் உட்பட 20 இற்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களுக்கு எனது பாடல்களை எழுதியுள்ளேன்.
நான் சக்தி நிறுவனம் தயாரிக்கும் எழுதாத கதை திரைப்படத்தில் பிரஜீவின் இசையில் பாடல்களை எழுதி வருகின்றேன். அதனோடு இரண்டு இந்தியத் திரைப்படத்திலும் மலேசிய, இலங்கை மற்றும் கனேடியக் குறுந்திரைப்படத்திலும் பாடல்களை எழுதி வருகின்றேன்.
தற்போது நான் ஷாகிஸ்னா இந்திய இசையமைப்பாளரின் இசையில் 10 பாடல்களில் 8 பாடல்கள் எழுதியுள்ளேன்.
இன்னும் நான் பாடல்கள் எழுதி சிறந்த பாடலாசிரியராக வளர்வதற்கு ரசிகர்களாகிய உங்களின் ஆதரவு என்றும் தேவை.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

சூரியன் சாதாரண மக்களின் தோழனாக இருக்கிறான்!




சூரியவன் வானொலியின் அறிவிப்பாளரும்
வைத்தியருமான மணிவன்னன்
தினக்குரலின்
சகோதர
வெளியீடான உதயசூரியன்
பத்திரிகைக்கு அளித்த நேர்காணல்.

நேர்காணல்:எஸ்:ரோஷன்

சூரியன் வானொலியின் இரவுகளை இனிமையாக்கி அதிகாலையை ரம்யமாக்குபவர் அறிவிப்பாளர் மணிவண்ணன்.
அறிவிப்பாளராக பலராலும் அறியப்பட்டிருக்கும் மணிவண்ணன் தொழில் ரீதியாக ஒரு மருத்துவர், அதுமட்டுமல்ல அறிவிப்பாளர், கவிஞர், நல்ல ரசனையாளர் என பல ஆற்றல்களை தனக்குள்ளே கொண்டுள்ளார்.
விடிய விடிய இரவுச்சூரியன் நிகழ்ச்சியில் அட்டகாசமான பாடல்களை, நேரமறிந்து ரசிகர்களின் ரசனையறிந்து ஒலிபரப்பி அதிகாலையில் கவிதையோடு கீதம் கலந்து காற்றலையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் மணிவண்ணன் இந்த
வார உதயசூரியனில் உங்களோடு!
ஹா.. நான் நவரத்தினம் மணிவண்ணன் எனது சொந்த ஊர் யாழ்ப்பாணத்தின் வேலணை.
வேலணை ஜயனார் வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியை கற்றேன். பின்பு வேலணை மத்திய கல்லூரியிலும் யாழ். பற்றிக்ஸ் கல்லூரியிலும் கல்வியை தொடர்ந்து பின்னர் மருத்துவக் கல்லூரியில் கற்றேன் . தற்போது நான் மருத்துவத் துறையில் பட்டம் பெற்று மருத்துவத்துறையில் பணியாற்றுகிறேன்.

வைத்தியத் துறையிலிருந்து அறிவிப்பிற்கு!
இயல்பாகவே எனக்கு கலையீடுபாடு அதிகம். எனது ஊரிலே நாடகங்கள் இசை நிகழ்ச்சி என்று விசேட நாட்களில் நிறைய நிகழ்வுகள் நடக்கும். இவற்றை பார்த்து அவற்றில் ஏற்பட்ட ஈடுபாடும் ஈர்ப்பும் கலை ஆர்வத்திற்கு வித்திட்டன எனலாம். அத்தோடு அந்த நாட்களில் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்பது உண்டு. இதனால் அறிவிப்புத் துறையிலும் நாட்டம் ஏற்பட்டது. கல்லூரி காலங்களில் குறிப்பாக மருத்துவக் கல்லூரியில் மாணவனாக இருக்கும் போது நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் நானே அறிவிப்பாளராக இருந்து வந்தேன். அப்போது தான் இவ்வாறு எனது ஆர்வம் வளர்ந்து வந்தது.
அதன் பிறகு தொழில் ரீதியாக கொழும்பில் வசிக்க நேர்ந்த போது கிடைத்த வாப்பு என்னை சூரியன் அறிவிப்பாளராக மாற்றியது

தொகுத்தளிக்கும் நிகழ்ச்சிகள்!
வைத்தியத் தொழிலில் இருப்பதால் பகுதி நேரமாகத்தான் இதில் பணி புரிய முடிகிறது. காலையில் அருணோதயம் நிகழ்ச்சி, இரவில் விடிய விடிய சூரியன் நிகழ்ச்சியும் செவேன். காலையில் பிறந்த நாள் வாழ்த்துக்கூறி அவர்களின் மகிழ்வில் நாங்களும் கலந்து மகிழ்வது ஒரு சிறப்பான வானலை அனுபவம்.
விடிய விடிய சூரியன் நிகழ்ச்சியில் நேரடியாக நேயர்களோடு உரையாடும் சந்தர்ப்பம் வாக்கின்றது. பல தரமான பல்வேறு மன நிலையில் உள்ளவர்களோடு உரையாடும் சந்தர்ப்பமும் வாழ்க்கையில் பல பரிணாமங்களையும் பக்கங்களையும் எனக்கு அறிமுகப்படுத்துகின்றது.
அதிகாலையில் இடம் பெறும் ரீங்காரம் நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டாக வேண்டும். பல இரசிகர்களை எனக்கு பெற்றுத்தந்த நிகழ்ச்சி இது என சொல்லலாம். இது நேயர்களின் கவிதைத் தொகுப்பு நிகழ்ச்சியாக அமைகின்றது. எனக்கு கவிதை மீது ஈடுபாடு அதிகம். என் காதலிக்கு எழுதிய கவிதையில் என் முதல் கவிதை ரீங்காரம் நிகழ்ச்சியில் ஆரம்பித்தேன். இதற்கு பின்பு பல கவிதைகளை எழுதி இருக்கின்றேன். இத்தகையதொரு பின்புலம் பாடலுக்கு ஏற்ற கவிதையை கூறி நிகழ்ச்சிகளை தொகுப்பதில் எனக்கு உதவுகின்றது. இந் நிகழ்ச்சி வளர்ந்து வரும் கவிஞர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாக அமைந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் வானொலி அனுபவம்!
எனது முதல் அறிமுக நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு விடிய விடிய சூரியன் நிகழ்ச்சியில் ஆரம்பித்தது. சக அறிவிப்பாளர் றிம்சாத்துடன் இணைந்து செத அந்த நிகழ்ச்சி மறக்க முடியாததோர் அனுபவம். முதல் நிகழ்ச்சியென சற்று பதற்றமாகவும் வான் அலையின் என் குரல் ஒலிக்கிறதென்ற பரவசமாகவும் இருந்தது .

இந்த துறையில் கைகொடுத்தவர்கள்!
திருமதி கமலோஜினி பரமசிவம் அவர்கள் என்னை சூரிய குடும்பத்தில் இணைவதற்கான அறிமுகத்தை ஏற்படுத்தி தந்தார்.
அவரையும் எனக்கு பயிற்சியும் ஆலோசனையும் வழங்கி நெறிப்படுத்திய மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் சூரியன் தலைமைப் பொறுப்பதிகாரி நவநீதன் ஆகியோர் இத்துறையில் எனக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள். அத்துடன் சிறுவயதிலிருந்து கலைத்துறையில் என்னை வழிப்படுத்திய எனது சித்தப்பா கவிஞர் வேலணையூர் தாஸ் அவர்களையும் என்னை வளர்த்து கல்விதந்து ஆளாக்கிய பெற்றோர்களையும் இவ்விடத்தில் நான் குறிப்பிடவேண்டும்.

அறிவிப்புத் துறையில் முன்மாதிரி?
யாரையும் பின்பற்றாமல் எனக்கென ஒரு பாணியை ஏற்படுத்த முயற்சிக்கிறேன் ஆனால் மூத்த அறிப்பாளர்கள் நடராஜசிவம், பீ. எச். அப்துல்ஹமீத், மதியழகன் ஆகியோரின் அறிவிப்பு மிகவும் பிடிக்கும். அவர்களது வழிகாட்டல் மற்றும் அனுபவம் சக அறிப்பாளருடைய ஆதரவு என்பவற்றால் வளர விரும்புகிறேன் .

குடும்பம்?
யாழ்ப்பாணத்தில் பிரபல வைத்தியர் க.நவரத்தினம் எனது தந்தையார் அம்மா கமலேஸ்வரி. எனக்கு நான்கு சகோதரர்கள்.
மனைவி சுஜீபா இவரும் மருத்துவ பணியில் இருக்கிறார். ஆராதனா, அக்சயா என இரண்டு மகள்மார். எனது மனைவி ரீங்காரம் நிகழ்ச்சி விரும்பி கேட்பார். எனது கலைப்பயணத்தில் இவர்களும் துணையாக இருக்கிறார்கள்.

உங்கள் சக அறிப்பாளர்கள் !
அன்பான ஒரு கலைக்குடும்பம் ஒவ்வொருவரும் வேறுபட்ட தனித்திறமை வாந்தவர்கள். பல்வேறு ஆளுமைகளின் கூட்டணி. சூரிய குடும்பம் எல்லோருடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆவல். நேரம் தடையாக இருக்கும். இருப்பினும், எதிர்பார்ப்புகளும் காத்திருப்புகளும் நிறைவேறலாம் என்ற நம்பிக்கையுண்டு.

இரண்டு துறைகளில் இனிமை அனுபவம்!
மருத்துவத்துறையில் இருந்து கொண்டே அறிவிப்பாளராகவும் பணியாற்றுகின்றேன். இரண்டும் வேறுபட்ட தொழிற் சூழலாக இருப்பினும் இரண்டும் மக்களோடு தொடர்பானது. மேலும் வானொலி கூடுதலாக இசையோடு சம்பந்தப்பட்டது.
இசை கூட சில வேளைகளில் மருத்துவமாகிறது. மனதினால் ஏற்படும் உளவியல் சார்ந்த நோகளுக்கு இசை தீர்வாகிறது என ஆராசிகள் சொல்கின்றது இந்தவகையில் எனது தொழிலோடு மிக நெருக்கமாக உணர்கிறேன்.

வானொலி ஊடகத்துறை இன்று எந்நிலையில் உள்ளது. ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
தொழில் நுட்பம் வளராத காலங்களில் வானொலியே மக்களின் பிரதான ஊடகமாக இருந்தது இன்று இலத்திரனியல் ஊடகங்களின் வரவு வானொலியின் செல்வாக்கை சிறிது குறைத்துள்ளது .
ஆயினும் இன்றும் வானொலிக்கென்று தனியான ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பாக சூரியன் சாதாரண மக்களின் தோழனாக இருக்கிறான் .