Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

ஞாயிறு, 11 மார்ச், 2012

உதவி கோருகிறார்....

மட்டக்களப்பு செங்கலடி தம்பானம்வெளியைச் சேர்ந்த அநுரகுமார் சுவாந்திரா (வயது 7) என்ற சிறுமி இருதயத்தில் ஏற்பட்டுள்ள துவாரம் காரணமாக இருதய நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தற்போது சிகிச்சை பெறுவதற்கு ரூபா ஐந்து இலட்சம் தேவை என வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது

மூன்று பிள்ளைகளின் தந்தையான சிறுமியின் தந்தை நாளாந்த கூலித் தொழிலாளி என்பதால் அவருடைய வருமானத்தின் மூலம் இந்தத் தொகையைப் பெறமுடியாதுள்ளதால் அவர் தனது மகளின் வைத்திய சிகிச்சைக்காக பொது மக்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்கிறார்.

உதவ விரும்பும் பொதுமக்கள் அல்லது அமைப்புகள் செங்கலடி மக்கள் வங்கிக் கிளை திலகநாயகி, கணக்கு இலக்கம் 2272001 5 0041240 இலக்கத்தில் வைப்பிலிட முடியுமென தாயார் வி. ஏ. திலகநாயகி தயவுடன் கேட்டுள்ளார். அவரது தொலைபேசி இலக்கம் 0779539560

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக