Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

யார் இந்த மர்ம மனிதர்கள்??


யார் இந்த மர்ம மனிதர்கள்??

இலங்கையில் பல பாகங்களிலுமுள்ள பிரதேசங்களில் குறிப்பாக மலையகம் மற்றும் கிழக்கு பகுதிகளில் மர்ம மனிதன் பீதி ஏற்பட்டு நாட்டு மக்கள் அச்ச உணர்வுடன் வீட்டிற்குள்ளே இரவு நேரங்களில் நித்திரையில்லாம் இருக்கின்றனர். இந்த மர்ம மனிதர்கள் உண்மையில் இருக்கின்றார்களா அல்லது பொய் வதந்தியா??

மலையகத்தில் பல பகுதிகளில் கொலை செய்துவிட்டு தப்பிச் செல்வதாகவும் மற்றும் இளம் பெண்கள் அல்லது வயது வந்த பெண்களை பயமுர்த்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் கதவுகளைத் தட்டி விட்டு சென்றதாகவும் தப்பிச்சென்றதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்திருந்தனர்.

மலையகத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று மர்ம மனிதனை துரத்திச் சென்ற போது இளைஞர் ஒருவர் மின்சார வேளியில் சிக்குன்டு உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது. பின்னர் மர்ம மனிதர்கள் என்று கூறி சென்றவர்கள் பிரதேச வாசிகளால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிவந்த செய்தி ஒன்று சிலர் பேசிக்கொள்கின்றார்கள் ஏதோ புதையல் எடுக்கபதற்காக பெண்களின் இரத்தத்தை உறுஞ்சி சேகரிப்பதற்காக இந்த மர்ம மனிதர்கள் வருவதாகவும் பேசிக்கொள்கின்றார்கள்.அதேபோல் இறக்காமத்தில் ஒரு வதந்தி ஏற்பட்டிருக்கின்றது மரத்திற்கு மரம் தாவுகின்றானாம் மர்ம மனிதன் இது போன்ற வதந்திகள் பல பிரதேசங்களிலும் கிராமங்களிலும் உருவாகிக்கொண்டே இருக்கின்றது. இதனால் தற்போது நடைபெற்று வரும் .பொ..உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தாமல் இவ்வாறான வதந்திகளை கேட்டு அச்சத்தில் இருக்கின்றார்கள்.

மரத்திற்கு மரம் தாவுகின்றான் மர்ம மனிதன் என்று இறக்காம மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில் ஒரு வேளை அது குரங்குகளாகவும் இருக்கலாம் அல்லவா? இரவு நேரத்தில் பன்றி ஓடும் சத்தத்தைக் கேட்டுவிட்டுக்கூட மர்ம மனிதன் என்று பிரதேச மக்களையோ அல்லது கிராம மக்களையோ ஏமாற்றிவிடலாம் அல்லவா?

இரவு நேரத்தில் ஒரு அவசர தேவைக்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் காப்பதற்காக வயலுக்கு சென்றாலும் மர்ம மனிதர்கள் என்று அடித்து கொலை செய்யும் அளவுக்கு வந்துள்ளது. மலையக மக்கள் இருக்கும் பீதியில் யார் இரவு நேரத்தில் சென்றாலும் அடித்துக்கொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்க ஒரு தீர்வு கிடைக்குமா??? பாதுகாப்புக்காக பொலிஸார் இருக்கின்றார்களா????

நாம் நாட்டு மக்களே முக்கிய அறிவித்தல் பொய் வதந்திகளை பரப்பாதீர்கள். இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக