Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 30 நவம்பர், 2012

எனக்கு கைக்கொடுத்த வேட்டைக்காரன் பாடல்...


வசந்தம் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஷரன் ஜிதேந்திரா.  ஞாயிற்றுக் கிழமைகளில் மியூசிக் கபே நிகழ்ச்சி மற்றும் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஹரன் ஜிதேந்திரா இந்த வார உதயசூரியனில் 


நேர்காணல்: எஸ்.ரோஷன்

சினிமாவைப் போல் அறிவிப்புத்துறையும் மிகப் போட்டி நிறைந்தது. நேயர்களின் ரசனை அறிந்து, காலம் உணர்ந்து சில நிமிட பேச்சுகளில் உள்ளத்தை கொள்ளைக் கொள்வது ஒரு அபாரமான கலை! அந்தக் கலையை சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் மட்டும் ஜெயிக்கிறார்கள்.
அந்தவகையில் நேயர்களின் உள்ளத்தில் இடம்பிடித்து ஒரு வெற்றிகரமான அறிவிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் வசந்தம் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஷரன் ஜிதேந்திரா.
 ஞாயிற்றுக்கிழமைகளில் மியூசிக் கபே நிகழ்ச்சி மற்றும் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஹரன் ஜிதேந்திரா இந்த வார உதயசூரியனில் உங்களோடு தனது அனுபவங்களைப்  பகிர்ந்து கொள்கின்றார்.

ஹாய் வணக்கம்! என் சொந்த இடம் எட்டியாந்தோட்டை. அப்பா சச்சுதானந்தன் ஒரு ஓவியர், அம்மா கஸ்தூரி ராணி, செல்லத் தங்கை சரண்யபாரதி என அழகான குடும்பம்.
ஆரம்பக் கல்வியை எட்டியாந்தோட்டை சென். மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றேன். பின்னர் புலமைப்பரிசில் மூலம் கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
ஊடகத்துறைக்கு வந்தது ஒரு பெரிய கதை. இலங்கையில் ஒரு தொலைக்காட்சி  நிகழ்ச்சியின் மூலமாக கவிஞர் அஸ்மியினுடைய நட்புக் கிடைத்தது. அதன் பிறகு சிறிதுகாலம் வேலை இடமாற்றம் காரணமாக தொடர்பு இல்லாமலிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் வசந்தம் டி.வி.யின் புது வசந்தம் நிகழ்ச்சியில் பாடுவதற்காகச் சென்ற எனது நண்பன் சுதர்ஷன் மூலமாக அஸ்மியின் தொடர்பு  மீண்டும் கிடைத்தது. அவரது உதவியால்தான் அறிவிப்பாளராக இணைந்தேன்.

முதல் நாள் நிகழ்ச்சியை தொகுத்தளித்த அனுபவம்  வாழ்நாளில் மறக்கவே முடியாது. முதல்நாள் இரவு முழுதும் நான் தூங்கவே இல்லை. தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் ரொம்ப பதற்றமாக இருந்தேன்.
பதற்றமாக இருக்கும் போது பாட்டு கேட்பது வழக்கம். உடனே என்னுடைய செல்போனை எடுத்து பாட்டைப் போட்டேன். வேட்டைக்காரன் படத்துல புலி உறுமுது, பாடல் போனது. அந்தப்பாடல் என்னுள் ஏதோ ஒரு அசாத்தியமான துணிச்சலை ஏற்படுத்தியதை உணர்ந்தேன். அந்தப் பாடல் வரிகள் எல்லாம் எனக்கே எழுதின மாதிரி இருந்தது. அந்தத் தைரியத்தில் அப்படியே போய் கமரா முன்னாடி நின்றேன். நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்தேன். அதை இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்புதான் வரும். ஒரு விடயத்தை செய்யும் போது நாம் என்ன மன நிலையில இருக்கிறோம் என்பது முக்கியம் என்பதை அன்று உணர்ந்து கொண்டேன்.

போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்களின் அடையாளம் என்ன?:
எனது அடையாளத்தை , தனித்துவத்தை ரசிகர்கள்தான் சொல்லணும் என்பது  என்னுடைய கருத்து. இருந்தாலும் புதிதாக ஏதாவது பண்ணணும். 5 நிமிடம் பேசினாலும் அதில் எனக்குத் தெரிந்த ஏதாவது ஒரு விடயத்தை நேயர்களிடம் பகிர்ந்து கொள்ளணும் என நினைப்பேன்.

அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார்?  இந்திய அறிவிப்பாளர்கள் என்றால் அறிவிப்பாளராக இருந்து நடிகராக மாறிய சிவகார்த்திகேயன் அப்புறம் கோபிநாத் ஆகியோரை ரொம்பப் பிடிக்கும். இலங்கையில் இராஜேஸ்வரி அம்மாவையும் லோஷன் அண்ணாவையும் பிடிக்கும்.

வசந்தம் டி.வி.யில் கிடைத்த மறக்க முடியாத சம்பவம்:  வசந்தத்தில் ஒளிபரப்பாகும் ஆட்டோகிராப் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இராஜேஸ்வரி அம்மாவை சந்தித்து பேசியது. அதன் பிறகு சில நாட்களில் அவர் இறந்த செய்தி கேட்டதும் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.   சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக முதன் முதல் யாழ்ப்பாணம் சென்ற அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.

உங்களுடைய ரோல் மொடல்: நிச்சயமாக என்னோட அம்மாதான். ஒரு பிரச்சினையை எப்படித் தைரியமாக எதிர்கொள்வது அதை எப்படி வென்று வருவது என்ற மன தைரியத்தை அம்மாவிடம் தான் கற்றுக் கொண்டேன்.
பிடித்த நடிகர், நடிகை: பிடித்த நடிகர்  தல அஜித். சமூகத்துல உயர்ந்த அந்தஸ்துல இருந்தாலும் எளிமையும், எவருக்கும் உதவும் தன்மையும் இவர் மேல இருக்கிற பிரியத்தை நாளுக்கு நாள் அதிகரித்தது. எப்போதும் வெற்றிப் படங்களையே கொடுத்து மக்களின் இதயத்தில் இடம் பிடிக்கிறது சாதாரண விடயம்தான். ஆனாலும் தோல்விப் படங்களை கொடுத்தாலும் இவர் மீது ரசிகர்கள் வெறித்தனமா இருக்கிறாங்கன்னா அதற்கு காரணம் அவரோட உயர்ந்த பண்பு.
நடிகைகளில் ஸ்ரேயாவை ரொம்பப் பிடிக்கும். அடுத்தது காஜல் அகர்வாலையும் பிடிக்கும்.

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம்: துப்பாக்கி. இலங்கையில் முதல் காட்சி  பார்த்து விட்டு இது  மிகப் பெரிய வெற்றியடையப் போவதை உணர்ந்தேன். இத்திரைப்படத்திற்கு வரப்போகும் பிரச்சினையைப் பற்றியும் உணர முடிந்தது.

வாழ்வில் மறக்க நினைப்பது: ஒரே நாள் இரவில் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொன்ற சுனாமியின் நினைவுகள் மற்றது 2012.12.21 இல் உலகம் அழிந்து விடுமோ என்கிற நினைப்பையும் மறக்க விரும்புகிறேன்.

மறக்க முடியாத சம்பவம்: நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கலை விழா நிகழ்ச்சிக்கு அம்மா வந்திருந்தாங்க. நான் நடன நிகழ்ச்சியில் மட்டும்தான் இருந்தேன். ஆனால், போட்டி நிகழ்ச்சிகளில் பரிசில்கள் வாங்கிய மாணவர்களை பார்த்துவிட்டு நானும் அப்படி பரிசு வாங்கி இருந்தால் நல்லது என அம்மா கூறி வருத்தப்பட்டாங்க. அதற்குப் பிறகு சில வருடங்களில் நான் கவிதை, கட்டுரை, விவாதம் என எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசும் வாங்கினேன். கடைசியில் 2004ஆம் ஆண்டு நான் கல்லூரியின் இந்த மாணவர் மன்றத் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். பின்னர் நாங்கள் ஒழுங்கு செய்திருந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு என் கையால் சான்றிதழ் வழங்குவதை அம்மா பார்த்துச் சந்தோசப்பட்டாங்க. அன்று நான் பெற்ற சந்தோசத்திற்கு அளவே இல்லை. இந்த சம்பவத்தை என்றும் மறக்க மாட்டேன்.

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்: லேட்டஸ்ஸா துப்பாக்கி படத்தில் அலைக்க லைக்க அப்பிள் என்ற பாடல்.

அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள்: கொஞ்சம் கொஞ்சம் கவிதை எழுதுவேன். ரொம்ப சுமாரா பாடுவேன், அப்புரம் நல்லா சுவீமிங் பண்ணுவேன், அப்பா மாதிரி கொஞ்சம் வரைவேன்.

சந்திக்க விரும்பும் நபர்: நடிகர் அஜித் அவரைச் சந்தித்து பிறகு அப்படியே அவருடைய உதவியுடன் சுப்பர் ஸ்டார், உலக நாயகன், இசைப்புயல், கவிப்பேரரசு ஆகியோரைச் சந்திக்க ஆசை.

திருமணம் எப்போது: திருமணத்தைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. இன்னும் 2 வருடங்களில் நடக்கும் என்று நினைக்கிறேன். காதல் என்பது எல்லா மனிதர்களுக்கும் வரக்கூடிய ஒரு பொதுவான உணர்வு. அதுக்கு நான் மட்டும் விதி விலக்கல்ல.

அடிக்கடி மறக்கும் பொருள்: பேனைதான். இதுவரைக்கும் ஒரு பேனையை கூட மை முடியும் வரை பாவித்த சரித்திரமே கிடையாது.

நீங்கள் படித்ததில் உங்களுக்குப் பிடித்தது: வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை. அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள் என்ற தத்துவம் ரொம்ப பிடிக்கும்.

யாருடன் இணைந்து நிகழ்ச்சி செய்ய பிடிக்கும்: யாரோடு நிகழ்ச்சி தொகுத்து வழங்க நேர்ந்தாலும் அதை சந்தோஷமாக செய்ய வேண்டும் என்பதுவே என்னுடைய ஆசை.

உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது: நீங்கள் தோல்வியடையும் போதெல்லாம் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள். உங்களை மேலும் பலப்படுத்திக் கொள்ள இறைவன் வழங்கும் வாய்ப்புகள் என உங்கள் மனதை ஊக்கப்படுத்துங்கள்.
மேலும் எனது நிகழ்ச்சிகளை பார்த்து கருத்து தெரிவியுங்கள். காரணம் எங்கள் பலவீனம் என்ன என்பதை உணர்ந்து கொள்வதே எம்முடைய பலம்.

வியாழன், 22 நவம்பர், 2012

ராகுமான் இசையில் பாடனும்...

‘கோ’ திரைப்படத்தில் என்னமோ ஏதோ என்ற ஒரே பாடல் மூலம் உச்சத்திற்கு போனவர் பாடகர் அலப்ராஜ்.  தற்போது மாற்றான் திரைப்படத்தில் இவர் பாடிய  தீயே... தீயே... பாடல்தான் இளைஞர்களின் ரிங்டோன். 

இந்தவாரம்  அவர் உதயசூரியன் வாயிலாக உங்களைச் சந்திக்கிறார்.
நேர்காணல்: எஸ்.ரோஷன்

ஹாய் முதல்ல  எல்லோருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்! நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையிலதாங்க. நான் தமிழன் என்று நீங்க எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பீங்க. நான் தமிழன் இல்லைங்க. நான் ஒரு மலையாளி.

பாடகராக அறிமுகமாகியது எப்படி ?

எனது குடும்பம் இசைக் கலைஞர்களைக் கொண்ட ஒரு அழகான குடும்பம். என்னுடைய அம்மா பாடகி. அத்தோடு டப்பிங் குரல் கொடுப்பவர். அப்பாவும் பாடகர், இசையமைப்பாளர். இந்தக் குடும்பப் பின்னணியில் இருந்ததால எனக்கும் சின்ன வயசுல இருந்தே இசைத்துறையில் ஆர்வம் இருந்தது. இசைத்துறையில் அப்பாதான் எனக்கு பயிற்சியளித்தார். நாங்கள் இருவரும் பல மேடைகளில் பாடல்களை பாடியிருக்கின்றோம்.  எனது நண்பரான தமன் என்னை  2009 ஆம் ஆண்டு ஐயனார் திரைப்படத்திற்கு பாடுவதற்கு அழைத்தார்.  நான் இதுவரையில் 20  22 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கின்றேன். இன்னும் புதிய பாடல்களையும் பாடிக் கொண்டிருக்கின்றேன். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடியிருக்கீங்க. இதில் எந்த மொழியில் பாடுவதற்கு உங்களுக்கு இலகுவாக உள்ளது?

நான் மலையாளி என்பதாலோ என்னவோ மலையாளப் பாடல்கள் பாடுவதற்கு இலகுவாக இருக்கும்.  தமிழில பாடுவது கொஞ்சம் கஷ்டம்தான். தமிழ் மொழியில் சிலவார்த்தைகளை பாவனையாகவும் அழகாகவும் உச்சரித்துப்பாட வேண்டும் என்ற காரணத்தினால்தான். இருந்தாலும் தமிழில் பாடுவது ரொம்பப் பிடிக்கும்.

நீங்கள் பாடிய பாடலில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது ?

 கோ படத்தில என்னமோ ஏதோ... தான் என் பேவரிட். இந்தப் பாட்டுதாங்க என் வாழ்க்கையையே மாற்றியது. இதுக்கு பிறகு தான் எனக்கு பல விருதுகளும் நிறைய சந்தர்ப்பங்களும் கிடைத்தது. அதுமட்டுமல்ல இன்றைக்கு வரை ஹிட்டாகவும் இருக்குது.

நீங்க ஹீரோ மாதிரி இருக்கீங்க.  ஏதாவது திரைப்படத்தில் நடிக்கனும்னு என்று தோணலியா?

ஏங்க எக்கு தப்பா கேக்குறீங்க. படங்களில் நடிக்கிறது என்று இதுவரை நான் யோசித்தது கூட கிடையாது.
எந்த ஹீரோவுக்கு உங்களுடைய குரல் ஒத்துப்போகுமென்று நினைக்கின்றீர்கள்?

எனக்கு யாராக இருந்தாலும் பரவாயில்லை. உதாரணமாக என்னமோ ஏதோ பாட்டுக்கு யார் நடிகர் என்று தெரியாது. பிறகுதான் நடிகர்  ஜீவான்னு தெரியும். அதேமாதிரி எங்கேயும் காதல் படத்தில் நான் பாடிய  எங்கேயும் காதல் பாட்டுக்கு பிரபுதேவா  தான் திரையில வருவார் என்று தெரியாது. ஆனா ரெண்டு பேருக்குமே அந்தப்பாடல் ரொம்பப் பொருந்திப் போனது.   யார் நடித்தாலும் பரவாயில்லை எனது பாட்டு மக்கள் மத்தியில் வெளிவந்தால் அதுவே எனக்கு சந்தோஷம்தான்.
வெற்றிக்குத்தேவை திறமையா? அதிர்ஷ்டமா?
இரண்டுமே தேவை.

 தீபாவளியில் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் இருக்கா?

நான் ஒரு கிறிஸ்தவன். இருந்தாலும் சின்ன வயசுல இருந்தே தீபாவளி என்றால் எனது நண்பனுடைய வீட்டுக்குப் போவேன். அந்தத் தொடர்மாடி கட்டிடத்தில உள்ள எல்லாரும் ஒரு இடத்தில கூடி பட்டாசு வெடிப்பாங்க. ரொம்ப சந்தோஷமாகவும் அழகாகவும் இருக்கும். 

சந்திக்க விரும்பும் நபர் யார்?

நான் நிறைய இசையமைப்பாளர்களை சந்தித்திருக்கின்றேன். ஆனால் சந்திக்க விரும்பும் ஒரே ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். அவர் இசையில் பாடனும்னு இல்லாவிட்டால் அவரது பாடலுக்கு கிட்டார் வாசிக்க சந்தர்ப்பம் கிடைச்சாலே போதும்.

இலங்கை வந்த அனுபவம் பற்றி?

2010 இல் நான் இலங்கைக்கு வந்திருக்கின்றேன். கிட்டார் வாசிப்பதற்காக. நிறைய நண்பர்களை அங்கு சந்தித்தேன். கொழும்பு அனுபவம் எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது.

இன்றைய பாடலாசிரியர்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?

புதுப் பாடலாசிரியர்கள்ல வந்து மதன் கார்க்கி ரொம்பப் பிடிக்கும். அவரது வரிகளில் கவித்துவத்தோடு புதுமையும் இருக்கும். 

மாற்றான் படத்துல தீயே... தீயே... பாடல் அனுபவம் எப்படி?

ஹரிஸ் ஜெயராஜ் சேர் பாடக் கூப்பிட்டார். இரட்டை வேடத்தில நடிக்கிற சூரியாவில் ஒரு  சூரியாவுக்கு நான் பாடினேன். ஹாரிஸ் ஜெயராஜ் கூட பணியாற்றுவது ரொம்ப இனிமையான அனுபவம்.

இலங்கையிலுள்ள உங்களுடைய ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

உங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி. நீங்க தருகிற ஆதரவுதான் எங்களோட பலம். அது ரொம்ப முக்கியம். உங்களுடைய பாராட்டுக்கள் தான் எங்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றது. பாடகர்களாகிய எங்களுக்கு எப்போதும் உங்களுடைய பங்களிப்பைத் தாருங்கள். 

வெள்ளி, 9 நவம்பர், 2012

பாடகியாக ஆசைப்பட்டேன்....


சூரியன் FM அறிவிப்பாளர்
 Fresha.IN 
நேர்காணல்
நேர்காணல்:
எஸ்.ரோஷன்


புத்துணர்ச் சியான காலைப் பொழுதில் இனிமையான பாடல்கள், வாழ்த்துக்களோடு சூரியன் வானொலியில் அருணோதயம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் தொகுப்பாளினி Fresha.
 இந்த வார உதய சூரியனில் உங்களோடு அவர்...
 ஹா உதய சூரியன் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் Fresha Leena எனது சொந்த இடம் மன்னார் . அம்மா கொலஸ்டா, அப்பா நேசன், தம்பி பிரஷ்ஷான், தங்கை  அபிஷா  என மிகவும் கலகலப்பான குடும்பம் என்னுடையது.

சிறுவயது முதலே ஊடகத்துறையில்  பணியாற்ற மிகவும் ஆசைப்பட்டேன். அதுவும் பாடகியாக வருவதற்காக மிகவும் முயற்சி செதேன். அது பலிக்கவில்லை.  நான் ஒரு அறிவிப்பாளராக வர ஆசைப்பட்டேன்.  என் ஆசை நிறைவேறியது.

கொழும்பில் ஓர் நிறுவனத்தில் அறிவிப்பு பயிற்சியை முடித்துக் கொண்டு சூரியனுக்கு விண்ணப்பித்தேன். நான் அதிர்ஷ்டசாலி.  எனக்கு இவ்வளவு  இலகுவாகக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  இப்பொழுது ஓரு அறிவிப்பாளராக உங்கள் முன் நிற்கிறேன்.
நீங்கள் தொகுத்து வழங்கும் அருணோதயம் நிகழ்ச்சி பற்றி?
சூரியன் வானலையில் அதிகாலை நேர நிகழ்ச்சி அருணோதயம், நான் பாடசாலை செல்லும் காலங்களில் இந் நிகழ்ச்சியைக் கேட்டபடி தான் செல்வேன். இந் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்குவேன்  என்று அப்போது கனவிலும் நினைக்கவில்லை.   புத்துணர்ச்சியாக அந்த காலை  பொழுதில் இனிமையான பாடல்கள், வாழ்த்துகள் என்று தொகுத்து வழங்கும் போது  கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

இந்தத் துறையில் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என நினைக்கிறீர்கள்?
  புகழ் பணம் வந்து விட்டால் தங்கள் பழைய நிலைமைகளை மறப்பது.
 புகழைச் சேர்ப்பதற்கு நல்லவர்கள் போல் நடிப்பது  (இப்படியானவர்களைப் பார்த்திருக்கிறேன்).
 திறமையை நம்பாமல் மற்றவர்களை நம்புவது (காக்கா பிடிப்பது)
 குரலை மட்டும் வைத்துக் கொண்டு  தேடல் இல்லாமல் இருப்பது
 இதையெல்லாம் இங்கே நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்கள் அடையாளம் என்ன?
இத்துறையில் தேடல் அவசியம். மற்றும் பொறுமை மிகமிக அவசியம். என்னை அடையாளப்படுத்த இன்று நான் கற்றுக் கொள்ள வேண்டியது  நிறைய இருக்கிறது.

இலங்கை இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்  யார்?
 இலங்கையில் லோசன், நவநீதன், சைலி, மேனகா

சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருக்கின்ற அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?
 நான் ரசித்து மகிழ்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் நான் ரசித்த அறிவிப்பாளர்களுடன் பணியாற்றுவது மிகவும் சந்தோசம்.

 உங்களுக்கு ரோல் மொடல் யார்?
 மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சால்வா.  அடுத்து எனது அம்மா.

உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகை யார்?
 நடிகர் ஜெயம் ரவி, கம்பீரமான தோற்றம்
ஜெனிலியா குறும்பு, ஆடையலங்காரம் சிரிப்பு

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் எது?
 மாற்றான்

வாழ்வில் மறக்க நினைப்பது?
அப்படி எதுவும் இல்லை, எதுவும் நீண்டநாள் நினைவு இருக்காது.

பொழுது போக்கு : வானொலி, தியானம்.

ஏனைய திறமை : பாடுவது

 கடுப்பாகும் விடயம் : அர்த்தமில்லாமல் காத்திருப்பது.

 பிளஸ் : துணிச்சல், யாரையும் நம்பாதது,

மைனஸ்;  எல்லா விடயத்தையும் விளையாட்டுத் தனமா எடுப்பது.

யாருடன் இணைந்து நிகழ்ச்சி செயப் பிடிக்கும்?
 ஆசையை வெளியில்  சொன்னால் நிறைவேறாது. எனது ஆசை சீக்கிரம்

நிறைவேறும். அப்போது உங்களுக்கே தெரியும்.
மறக்க முடியாத சம்பவம்?

 எனக்கு 6 வயது  இருக்கும் போது மாமாவின் மகன்.  என்னிலும் 4 வயது இளையவன். என்னுடன் விளையாடி கொண்டிருந்தான். பின்பு நான் வீடு சென்று விட்டேன். மாலையில் கிணற்றிலிருந்து அவனை பிணமாக எடுத்தார்கள் அதை என் கண்கள் மறக்கவில்லை.

துப்பாக்கி முனையில் நேர்காணல் செய்ததை என்னால் மறக்க முடியாது


வசந்தம் டிவி சிரேஷ்ட தொகுப்பாளரும், அறிவிப்பாளருமான  இர்பானுடைய நேர்காணல்.

நேர்காணல்:
எஸ்.ரோஷன்

வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளரும், தொகுப்பாளரும், சிரேஷ்ட அறிவிப்பாளருமான இர்பான் இந்த வார உதயசூரியனில் உங்களுடன் தன்னைப்பற்றிய  விடயங்களை பகிர்ந்து கொள்கின்றார்...
வாசகர் வட்டத்திற்கு வணக்கம். நான் பிறந்தது முல்லைத்தீவு. வளர்ந்தது, படித்தது, வாழ்ந்துகொண்டிருப்பது எல்லமே புத்தளத்தில். புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்று  தொடர்ச்சியாக அங்கேயே ஒரு வருடம் ஆசிரியராகவும் கடமை புரிந்திருக்கிறேன். எனது மாமா லியூசின் மூலமாகவே ஊடகத் துறைக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பம் கிடைத் தது.  இதேநேரம் எனக்கு தொடர்ச்சியாக வாப்புக்களை வழங்கியதில் கே.டி.பிரசாத் மறக்க முடியாதவர். ஊடகத்துறையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றவர்களில் எம்.என்.ராஜா அவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது.

1999 ஆம் ஆண்டு சினிமாஸ் நிறுவனத்தின் வெள்ளித்திரை விருந்து என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்கினேன். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது எனது உணர்வலைகளை சொல்லித்தீர்க்க வார்த்தைகள் இல்லை. முதல் படைப்பை தருகின்ற எல்லோரும் இதனை உணர்ந்திருப்பார்கள்.

*வசந்தம் டி.வி.க்கு வருவதற்கு முன்னர் நேத்ரா தொலைக்காட்சியில் பணிபுரிந்துள்ளீர்கள். அங்குள்ள அனுபவங்களை சொல்ல முடியுமா?
மறக்க முடியாத அனுபவங்கள் அங்குதான் கிடைத்தன. 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட வேளையில் அந்த நெருக்கடியான நேரத்தில் பணிபுரிந்த திகில் அனுபவமே அனைத்தையும் தாண்டி மனதில் இருக்கிறது.

* அறிவிப்புத்துறையைச் சார்ந்தவர்கள்  எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? இது உன்னதமான தொழில். யாருக்கும் இலகுவில் கிடைக்காத வாப்பு. நேரத்தை அறிந்து செயற்படுவதோடு பொறுப்புணர்வோடு செயலாற்ற வேண்டும். புதிய விடயங்களை தேடுபவராகவும் மொழி வளமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.
*வசந்தம் டி.வி.யில் நீங்கள் தயாரித்து, தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் பற்றி? வசந்தம் தொலைக்காட்சி ஆரம்பித்து மூன்று வருடங்களேயான நிலையில் முதல் வருடத்திலேயே இரண்டு தேசிய விருதுகளை பெற்றுக் கொண்டது. இங்கு இருக்கின்ற அனைவருமே ஒரு குடும்பமாக செயற்படுகிறோம். நிகழ்ச்சிகளை வழங்குகின்ற போது சுதந்திரமாக செயற்படும் வாப்பை எமது முகாமையாளர் வழங்குவதால்தான் தரமான நிகழ்ச்சிகள் வெளிவருகின்றன. அந்த வகையில் எனது தயாரிப்புகளாக முகமூடி, தலைவாசல், சுற்றிவரும் பூமி, கண்மணி,    எமது பார்வை, நினைத்தாலே இனிக்கும், நிலாவே வா, வசந்தம் டொப் டென் போன்றவற்றை  குறிப்பிடலாம்.

*முகமூடி நிகழ்ச்சி பற்றி ?
ஆரம்பத்தில் நமது நாட்டில் இவ்வாறான நிகழ்ச்சிகள் சாத்தியமா? என்ற சந்தேகம் இருந்தது. பின்னர் ரசிகர்களின் ஆதரவினால் இன்று நல்ல தரமான நிகழ்ச்சி என்ற பெயரை  குறுகிய காலத்துக்குள்ளே முகமூடி பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதற்கு நாடெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான
தொலைபேசி அழைப்புக்கள் வருகின்றன.
முகமூடி சமூகத்தில் அநீதி இழைக்கப்பட்டவர்களின் குரலாகவும் திறமையுள்ளவர்களுக்கு களமாகவும் அமைகிறது.

*பாடசாலை அனுபவம் எப்படி?  பாடசாலையில் நீங்கள் செத சேட்டை, அதனால் அடிவாங்கிய அனுபவம் உண்டா?
பாடசாலையில் நான் ரொம்ப நல்ல பிள்ளை... இருந்தும் ஒரு முறை வகுப்பறையில் சில மாணவர்கள் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த நேரம் அவ்வழியே வந்த கந்தசாமி சேர் நான்தான் அந்த தவறை செதேன் என்று என்னை மைதானத்தின் நடுவே வெயிலில் நிற்கவைத்தார். இன்றும் செயாத தவறுக்காக தண்டிக்கப்பட்டதை எண்ணி வருத்தப்படுகிறேன்.

*போட்டிகள் நிறைந்த இந்த துறையில் உங்களின் அடையாளம்?
அனைவரோடும் கலகலப்பாக கடமையாற்றுவதோடு இயல்பாக இருப்பது.

*உங்களுடைய ரோல் மொடல் யார்?
 நீ செல்வதற்கு பாதை இல்லை என்று கவலைப்படாதே. நீ சென்றால் அதுவே பாதை. என்ற கூற்றுக்கிணங்க செயற்பட்டு வருகின்றேன்.

*இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர்?
பீ.எச்.அப்துல் ஹமீது, கோபிநாத்

*உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகை யார்?
நடிகர் விஜஉற்சாகமான நடிப்பு, நடனம்.
நடிகை நதியாஎன்றும் இளமையான நடிப்பு.

*வாழ்வில் மறக்க நினைப்பது எது?
கடந்த கால யுத்தம் தந்த நினைவுகள்.

*உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ?
யுத்த காலத்தில் மட்டக்களப்பில் துப்பாக்கி முனையில் முன்னாள் முதலமைச்சர்  பிள்ளையானை முதன் முதலாக நேர்காணல் செதது.

*அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
வாயை மூடி சும்மா இருடா...

*பொழுதுபோக்கு?
முகப்புத்தகத்தில் நண்பர்களோடு அரட்டை அடிப்பது.

* அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள்?
தினம் தினம் கவிதைகளை எழுதி கண்காணாது
மறைத்துவைப்பேன்.

*சந்திக்க விரும்பும் நபர் யார்?
 ஆங் சாங் சூகி

*நீங்கள் அடிக்கடி கடுப்பாகும் விடயம் என்ன?
அவசர அழைப்புகளை எடுக்கும் போது Answer  பண்ணாமல் இருப்பது.

* நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்?
Until the Final Hour  என்ற ஹிட்லரின்  கடைசி நிமிடங்கள்.
உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
நல்ல தரமான நிகழ்ச்சிகளின் உருவாக்கம் உங்கள் கைகளிலே இருக்கிறது. ஆகவே தரமான நிகழ்ச்சிகளுக்கே உங்கள் ஆதரவை வழங்குங்கள்.