Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 9 மார்ச், 2012

அருட்தந்தை சில்வஸ்ரரின் பூதவுடல் இன்று மாலை நல்லடக்கம்

இறைபதமடைந்த திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட நிதிப் பொறுப்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு, கல்முனை கரித்தாஸ் எகெட் நிறுவனப் பணிப்பாளருமாகிய அருட்தந்தை த.சிறிதரன் சில்வெஸ்ரரின் பூதவுடல் இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் மட்டக்களப்பு தூய மரியாள் இணைப்பேராலயத்தில் இடம்பெறும்.


இறுதி இரங்கல் திருப்பலியினைத் தொடர்ந்து ஆலையடிச் சோலை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக மட்டக்களப்பு திருமலை மறைமாவட்ட ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழனன்று காலமான அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக நேற்று வெள்ளிக்கிழமை தாண்டவவெளியிலுள்ள அவரது உறவினர் வீட்டில் வைக்கப்பட்டதுடன், இன்று மட்டக்களப்பு ஆயர் இல்ல சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. மனித நேயப் பணியாளராக போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது மட்டக்களப்பு அம்பாறை மக்களுக்கு அளப்பரிய பணியாற்றிய இவரது மறைவுச் செய்தி கேட்டு பெருந்திரளான தமிழ், முஸ்லிம் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக