Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

சனி, 15 டிசம்பர், 2012

விஜயிடம் இருந்து கற்றுக்கொண்டேன்...

         ரோஜாக்கூட்டம் படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்து ஹிட் நாயகனாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் வலம் வந்தவர் ஸ்ரீராம்  என்கிற ஸ்ரீகாந்த் தினக்குரல் பத்திரிகையின் சகோதர வெளியிடான உதயசூரியன் பத்திரிகைக்கு அளித்த நேர்காணல்.

நேர்கண்டவர்:எஸ்.ரோஷன்

ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு மீண்டும் நண்பன், பாகன் என பிஸியாகி அதே ஹிட் இடத்திற்கு வந்திருக்கிறார்.
தமிழில் மட்டுல்ல தெலுங்கு, மலையாளத்திலும்  இப்போது பிஸியான நடிகராக இருக்கும் ஸ்ரீகாந்த் இந்த வாரம் பேஸ்புக் பகுதியில் உங்களோடு...!

வணக்கம் நான் உங்கள் நண்பன் ஸ்ரீகாந்த்! சென்னையில படிக்கும் போதே  எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் முதலில் அறிமுகமானது சின்னத்திரையில்தான். பாலச்சந்திரன் சேரின் மரபுக்கவிதைகள் என்ற  தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம் நான் மொடலிங் செய்து வந்தேன். என் படத்தை பார்த்து விட்டு  ரோஜாக்கூட்டம் திரைப்படத்திற்கு அழைப்பு வந்தது. ஆனா அந்த கேரக்டருக்கு ஏற்ற வயது எனக்கு இருக்கவில்லை. பின்னர் 2 வருடத்திற்கு பிறகு ரோஜாக்கூட்டம் படத்தில்  நடித்து மக்கள் மத்தியில் பிரபல்யமானேன்.

*ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பார்த்தீபன் கனவு என்று ஆரம்பத்தில் வெற்றிப் படங்களைத் தந்து அசத்தி வந்த நீங்கள் சிறிதுகாலம் அவ்வளவு ஜொலிக்கவில்லையே?
எல்லோருடைய வாழக்கையிலும் வெற்றி தோல்வி  என்று இருக்கும் இல்லையா...? நான் வெற்றிகளையும்  பார்த்து இருக்கிறேன். ஒரு கட்டத்திற்கு பிறகு தோல்விகளையும் பார்த்திருக்கிறேன். தவறுகளை திருத்திக் கொண்டால் வாழ்க்கையில முன்னேற வழி கிடைக்கும். நான் தோல்விகளிலிருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டேன்.  இப்போது நண்பன், துரோகி, பாகன் போன்ற வெற்றிப்படங்களை தந்து கொண்டிருக்கிறேன்.

* நண்பன் படத்தில் விஜய், ஜீவாவுடன் இணைந்து நடித்த அனுபவம் எப்படியிருந்தது?
 ஜீவா நான் சினிமாவுக்கு வந்த போது வந்த நடிகர்! ஆனால் விஜய் என்னைவிட மூத்தவர். என்னுடைய நெருங்கிய நண்பர்.
எல்லோரிடமும் ரொம்ப யதார்த்தமாக பழகக்கூடிய ஒருவர்.  ரொம்ப அனுபவசாலி. அவருடைய வார்த்தைகளும்  ரொம்ப கவனமாக இருக்கும். நண்பன் படம் மூலமாக நான் விஜயிடம் நிறைய  கற்றுக்கொண்டேன்.

* கல்லூரி மாணவனாக அதிகமான படங்களில் நடித்துள்ளீர்கள் அது பற்றி?
 இடையில் எனது வயதுக்கு மீறிய கதைகளிலும் நடித்திருந்தேன். நான் இந்த வயசில ஒரு கல்லூரி  மாணவனா நடிக்கலனா பிறகு நடிக்க முடியாது.  அந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்த வேண்டுமென்று கல்லூரி மாணவன் கதைகள் வந்ததால் நடித்தேன்.

 *கதைகள் தெரிவு செய்யும் போது எவ்வாறான   விடயங்களில் கவனம் செலுத்துவீர்கள்?
நான் ஏற்கனவே நடித்த படங்களின் கதைகள் போல் இருந்தால் தெரிவு செய்ய மாட்டேன். எனது கதாபாத்திரத்தில் என்ன புதுமை இருக்கு என்று பார்ப்பேன். இயக்குநர்  அந்தக் கதை மூலம் நம்மள வெளிப்படுத்துவாரா என்று தெரிந்து  கொள்வேன்.

* இலங்கைக்கு பல தடவைகள் வந்து இருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றி?
 பார்த்திபன் கனவு, வர்ணஜாலம் ஆகிய திரைப்படங்களை முழுமையாக இலங்கையில் தான் பண்ணினோம். பிறகு ஜூட் படத்தின் பாடல் காட்சிக்காகவும் இலங்கை வந்து இருக்கிறேன்.
றம்பொடை, நுவரெலியா, கண்டி, பெந்தோட்ட, கொழும்பு போன்ற இடங்களுக்கு திரைப்பட சூட்டிங்காக வந்து இருக்கிறேன். இதன்போது இலங்கை நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் கூட கிடைத்தது.

எங்களுக்கு தெரிந்த விடயங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
இலங்கை மக்கள் ரொம்பவும் அன்பும், பாசத்துடனும் பழகுபவர்கள்.
நாங்கள் தமிழ்  நாட்டில் இருந்து வந்திருக்கிறோம் என்றதும் அவர்களுடைய விருந்தாளிகள் போல் கவனித்துக் கொண்டார்கள்.

*உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி?
விருதுகளை எண்ண முடியாது. அண்மையில் கூட மலேசியாவில்  பாலச்சந்திரன் சேர் கையால சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

* சொந்தக் குரலில் பாட வேண்டும் என்ற ஆசை உண்டா?
 சந்தர்ப்பம்  கிடைத்தால் பாடுவேன். ஆனா கொஞ்சம் பயம் இருக்குங்க. ஏன்னா  நம்ம குரலை கேட்டு மற்றவங்க என்ன ஆவங்க என்று!

*அரசியலுக்கு வரும் ஐடியா?
சத்தியமாக கிடையாது. அரசியல் எனக்கு ஏணி வச்சாகூட எட்டாதுங்க.  நான் ஒரு நடிகனாக (கலைஞனாக) மட்டும் தான் இருக்க ஆசைப்படுகிறேன்.

* இயக்குநர் ஆகும் ஆசை?
நான் நடிப்புல மட்டும் தான் கவனம் செலுத்தனும் என்று நினைக்கிறேன். நடிப்பு கடல் மாதிரி. நான் இன்னும் நிறைய  தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.  நான் என் திறமையை இன்னம் வளர்த்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

 * உங்களுடன் இணைந்து நடித்த நடிகைகள் பற்றி?
நான் அதிகமா  சினேகா, மீராஜாஸ்மின், சோனியா அகர்வால் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடிச்சிருக்கேன். சினேகா புன்னகை அரசி.  நன்றாக தமிழ் பேசுவாங்க. தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவங்க. இவங்க கூட நடித்ததில்  எனக்கு பெருமையும் மகிழ்ச்சியுமாக இருக்கு.
அடுத்தது  மீரா ஜாஸ்மின்,  நடிப்பு என்பது அவங்களுக்குள் ஊறியிருக்கும் ஒரு விடயம். ஒரு சிறந்த நடிகையுடன் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
அப்புறமா சோனியா அகர்வால்.  இவங்களுக்கு தமிழ் பேச வராது என்றாலும் ரொம்ப அன்பாக பழகுவாங்க. இவங்க 3 பேர் கிட்ட  இருந்தும் பல விடயங்களை கற்றுக்கொண்டேன்.

*நீங்கள் சந்திக்க நினைக்கும் நபர் ?
 வேற யாருங்க!  நம்ம உலக நாயகன் கமல்தான்.  கமல்  பெரிய அறிவாளி. சினிமாவைப் பற்றி எத்தனை கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் கொடுத்து கொண்டே இருப்பாருன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.
நண்பன் படக்காட்சியில் நிஜமாகவே அழுதேன்...
* நீங்கள் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த காட்சி?
‘நண்பன்’ படத்தில் ஒரு காட்சி. நான் படிக்காம கமரா மேனாக போகனும்னு அப்பாவிடம் சொல்ல  அவர் வேண்டாம்னு சொல்வாரு. அந்த சமயத்தில என் ஆசை நிறைவேறாத ஏக்கத்தில அழுவேன். அந்தக்  காட்சியில் உண்மையாகவே அழுதுட்டேன். இந்தக் காட்சி என் வாழ்க்கையில் நடந்த காட்சியாகத் தான் பார்க்கிறேன். ஆரம்பத்தில் அப்பாகிட்ட படிப்ப விட்டுட்டு சினிமாவுக்கு  போவதற்கு அனுமதி கேட்டேன். அப்பா சம்மதிக்கலை.  அப்போது நண்பன் படக்காட்சி போன்றே அழுதேன்.

*அண்மையில் தீபாவளி கொண்டாடிய அனுபவம்?
எனது  ஆண் குழந்தைக்கு மூன்றரை வயது, பெண் குழந்தைக்கு ஒன்றரை வயது.  இவங்களுடன் சேர்ந்து சொந்தக்காரர் வீடுகளுக்குச் சென்றும் பட்டாசு வெடித்தும் கொண்டாடணும் என்று ஆசைப்பட்டோம்.  அதேமாதிரி கொண்டாடினோம். எனது வீட்டுக்கு சில தொலைக்காட்சிகள் வந்து என்னுடன் சேர்ந்து தீபாவளி நிகழ்ச்சியை கொண்டாடினார்கள்.  நிறைய விடயங்களை இந்தத் தீபாவளிமூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

 *உங்களுடைய குழந்தைகளை  நடிக்க அனுமதிப்பீர்களா?
எனது குழந்தைகளுக்கு விருப்பம் இருந்தா அவங்க வருவாங்க. நான் அவங்க நல்லா படிக்கணும்னு தான் ஆசைப்படுகின்றேன். அவங்க படித்து முடித்தவுடன் பார்க்கலாம்.

*இலங்கை  ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
நல்ல படங்களை பாருங்கள். திருட்டு சீடி மூலமாகவோ ஒன்லைன் மூலமாகவோ படங்களை பார்க்க வேண்டாம். இது எல்லோரும் சொல்லும் விடயம்தான். ஒரு படம் நல்லா இருக்குதா? இல்லையா? என்றதை நீங்களே பார்த்து நீங்களே முடிவெடுங்கள். அடுத்தவங்கக்கிட்ட தெரிந்து கொண்டு இந்தப் படம் நல்லாருக்கா படம் ஓடுமா என்று தெரிந்து கொண்டு போறதை விட அந்த முடிவு அவங்களுடையதாக இருக்கணும். ஏன்னா ஒரு படத்துக்கு பின்னாடி பலருடைய வாழ்க்கையும் இருக்கு. சில குடும்பங்களும் அதை நம்பியிருக்கு.
அழகான இந்தத் திரையுலகம் இன்னும் வாழ வேண்டும் என்றால் நீங்கள் உங்களுடைய ஒத்துழைப்பை கொடுக்கவேண்டும். உங்களை மகிழ்ச்சிப்படுத்த நாங்க இருக்கோம்.




வெள்ளி, 30 நவம்பர், 2012

எனக்கு கைக்கொடுத்த வேட்டைக்காரன் பாடல்...


வசந்தம் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஷரன் ஜிதேந்திரா.  ஞாயிற்றுக் கிழமைகளில் மியூசிக் கபே நிகழ்ச்சி மற்றும் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஹரன் ஜிதேந்திரா இந்த வார உதயசூரியனில் 


நேர்காணல்: எஸ்.ரோஷன்

சினிமாவைப் போல் அறிவிப்புத்துறையும் மிகப் போட்டி நிறைந்தது. நேயர்களின் ரசனை அறிந்து, காலம் உணர்ந்து சில நிமிட பேச்சுகளில் உள்ளத்தை கொள்ளைக் கொள்வது ஒரு அபாரமான கலை! அந்தக் கலையை சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் மட்டும் ஜெயிக்கிறார்கள்.
அந்தவகையில் நேயர்களின் உள்ளத்தில் இடம்பிடித்து ஒரு வெற்றிகரமான அறிவிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் வசந்தம் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஷரன் ஜிதேந்திரா.
 ஞாயிற்றுக்கிழமைகளில் மியூசிக் கபே நிகழ்ச்சி மற்றும் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஹரன் ஜிதேந்திரா இந்த வார உதயசூரியனில் உங்களோடு தனது அனுபவங்களைப்  பகிர்ந்து கொள்கின்றார்.

ஹாய் வணக்கம்! என் சொந்த இடம் எட்டியாந்தோட்டை. அப்பா சச்சுதானந்தன் ஒரு ஓவியர், அம்மா கஸ்தூரி ராணி, செல்லத் தங்கை சரண்யபாரதி என அழகான குடும்பம்.
ஆரம்பக் கல்வியை எட்டியாந்தோட்டை சென். மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றேன். பின்னர் புலமைப்பரிசில் மூலம் கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
ஊடகத்துறைக்கு வந்தது ஒரு பெரிய கதை. இலங்கையில் ஒரு தொலைக்காட்சி  நிகழ்ச்சியின் மூலமாக கவிஞர் அஸ்மியினுடைய நட்புக் கிடைத்தது. அதன் பிறகு சிறிதுகாலம் வேலை இடமாற்றம் காரணமாக தொடர்பு இல்லாமலிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் வசந்தம் டி.வி.யின் புது வசந்தம் நிகழ்ச்சியில் பாடுவதற்காகச் சென்ற எனது நண்பன் சுதர்ஷன் மூலமாக அஸ்மியின் தொடர்பு  மீண்டும் கிடைத்தது. அவரது உதவியால்தான் அறிவிப்பாளராக இணைந்தேன்.

முதல் நாள் நிகழ்ச்சியை தொகுத்தளித்த அனுபவம்  வாழ்நாளில் மறக்கவே முடியாது. முதல்நாள் இரவு முழுதும் நான் தூங்கவே இல்லை. தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் ரொம்ப பதற்றமாக இருந்தேன்.
பதற்றமாக இருக்கும் போது பாட்டு கேட்பது வழக்கம். உடனே என்னுடைய செல்போனை எடுத்து பாட்டைப் போட்டேன். வேட்டைக்காரன் படத்துல புலி உறுமுது, பாடல் போனது. அந்தப்பாடல் என்னுள் ஏதோ ஒரு அசாத்தியமான துணிச்சலை ஏற்படுத்தியதை உணர்ந்தேன். அந்தப் பாடல் வரிகள் எல்லாம் எனக்கே எழுதின மாதிரி இருந்தது. அந்தத் தைரியத்தில் அப்படியே போய் கமரா முன்னாடி நின்றேன். நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்தேன். அதை இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்புதான் வரும். ஒரு விடயத்தை செய்யும் போது நாம் என்ன மன நிலையில இருக்கிறோம் என்பது முக்கியம் என்பதை அன்று உணர்ந்து கொண்டேன்.

போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்களின் அடையாளம் என்ன?:
எனது அடையாளத்தை , தனித்துவத்தை ரசிகர்கள்தான் சொல்லணும் என்பது  என்னுடைய கருத்து. இருந்தாலும் புதிதாக ஏதாவது பண்ணணும். 5 நிமிடம் பேசினாலும் அதில் எனக்குத் தெரிந்த ஏதாவது ஒரு விடயத்தை நேயர்களிடம் பகிர்ந்து கொள்ளணும் என நினைப்பேன்.

அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார்?  இந்திய அறிவிப்பாளர்கள் என்றால் அறிவிப்பாளராக இருந்து நடிகராக மாறிய சிவகார்த்திகேயன் அப்புறம் கோபிநாத் ஆகியோரை ரொம்பப் பிடிக்கும். இலங்கையில் இராஜேஸ்வரி அம்மாவையும் லோஷன் அண்ணாவையும் பிடிக்கும்.

வசந்தம் டி.வி.யில் கிடைத்த மறக்க முடியாத சம்பவம்:  வசந்தத்தில் ஒளிபரப்பாகும் ஆட்டோகிராப் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இராஜேஸ்வரி அம்மாவை சந்தித்து பேசியது. அதன் பிறகு சில நாட்களில் அவர் இறந்த செய்தி கேட்டதும் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.   சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக முதன் முதல் யாழ்ப்பாணம் சென்ற அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.

உங்களுடைய ரோல் மொடல்: நிச்சயமாக என்னோட அம்மாதான். ஒரு பிரச்சினையை எப்படித் தைரியமாக எதிர்கொள்வது அதை எப்படி வென்று வருவது என்ற மன தைரியத்தை அம்மாவிடம் தான் கற்றுக் கொண்டேன்.
பிடித்த நடிகர், நடிகை: பிடித்த நடிகர்  தல அஜித். சமூகத்துல உயர்ந்த அந்தஸ்துல இருந்தாலும் எளிமையும், எவருக்கும் உதவும் தன்மையும் இவர் மேல இருக்கிற பிரியத்தை நாளுக்கு நாள் அதிகரித்தது. எப்போதும் வெற்றிப் படங்களையே கொடுத்து மக்களின் இதயத்தில் இடம் பிடிக்கிறது சாதாரண விடயம்தான். ஆனாலும் தோல்விப் படங்களை கொடுத்தாலும் இவர் மீது ரசிகர்கள் வெறித்தனமா இருக்கிறாங்கன்னா அதற்கு காரணம் அவரோட உயர்ந்த பண்பு.
நடிகைகளில் ஸ்ரேயாவை ரொம்பப் பிடிக்கும். அடுத்தது காஜல் அகர்வாலையும் பிடிக்கும்.

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம்: துப்பாக்கி. இலங்கையில் முதல் காட்சி  பார்த்து விட்டு இது  மிகப் பெரிய வெற்றியடையப் போவதை உணர்ந்தேன். இத்திரைப்படத்திற்கு வரப்போகும் பிரச்சினையைப் பற்றியும் உணர முடிந்தது.

வாழ்வில் மறக்க நினைப்பது: ஒரே நாள் இரவில் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொன்ற சுனாமியின் நினைவுகள் மற்றது 2012.12.21 இல் உலகம் அழிந்து விடுமோ என்கிற நினைப்பையும் மறக்க விரும்புகிறேன்.

மறக்க முடியாத சம்பவம்: நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கலை விழா நிகழ்ச்சிக்கு அம்மா வந்திருந்தாங்க. நான் நடன நிகழ்ச்சியில் மட்டும்தான் இருந்தேன். ஆனால், போட்டி நிகழ்ச்சிகளில் பரிசில்கள் வாங்கிய மாணவர்களை பார்த்துவிட்டு நானும் அப்படி பரிசு வாங்கி இருந்தால் நல்லது என அம்மா கூறி வருத்தப்பட்டாங்க. அதற்குப் பிறகு சில வருடங்களில் நான் கவிதை, கட்டுரை, விவாதம் என எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசும் வாங்கினேன். கடைசியில் 2004ஆம் ஆண்டு நான் கல்லூரியின் இந்த மாணவர் மன்றத் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். பின்னர் நாங்கள் ஒழுங்கு செய்திருந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு என் கையால் சான்றிதழ் வழங்குவதை அம்மா பார்த்துச் சந்தோசப்பட்டாங்க. அன்று நான் பெற்ற சந்தோசத்திற்கு அளவே இல்லை. இந்த சம்பவத்தை என்றும் மறக்க மாட்டேன்.

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்: லேட்டஸ்ஸா துப்பாக்கி படத்தில் அலைக்க லைக்க அப்பிள் என்ற பாடல்.

அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள்: கொஞ்சம் கொஞ்சம் கவிதை எழுதுவேன். ரொம்ப சுமாரா பாடுவேன், அப்புரம் நல்லா சுவீமிங் பண்ணுவேன், அப்பா மாதிரி கொஞ்சம் வரைவேன்.

சந்திக்க விரும்பும் நபர்: நடிகர் அஜித் அவரைச் சந்தித்து பிறகு அப்படியே அவருடைய உதவியுடன் சுப்பர் ஸ்டார், உலக நாயகன், இசைப்புயல், கவிப்பேரரசு ஆகியோரைச் சந்திக்க ஆசை.

திருமணம் எப்போது: திருமணத்தைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. இன்னும் 2 வருடங்களில் நடக்கும் என்று நினைக்கிறேன். காதல் என்பது எல்லா மனிதர்களுக்கும் வரக்கூடிய ஒரு பொதுவான உணர்வு. அதுக்கு நான் மட்டும் விதி விலக்கல்ல.

அடிக்கடி மறக்கும் பொருள்: பேனைதான். இதுவரைக்கும் ஒரு பேனையை கூட மை முடியும் வரை பாவித்த சரித்திரமே கிடையாது.

நீங்கள் படித்ததில் உங்களுக்குப் பிடித்தது: வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை. அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள் என்ற தத்துவம் ரொம்ப பிடிக்கும்.

யாருடன் இணைந்து நிகழ்ச்சி செய்ய பிடிக்கும்: யாரோடு நிகழ்ச்சி தொகுத்து வழங்க நேர்ந்தாலும் அதை சந்தோஷமாக செய்ய வேண்டும் என்பதுவே என்னுடைய ஆசை.

உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது: நீங்கள் தோல்வியடையும் போதெல்லாம் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள். உங்களை மேலும் பலப்படுத்திக் கொள்ள இறைவன் வழங்கும் வாய்ப்புகள் என உங்கள் மனதை ஊக்கப்படுத்துங்கள்.
மேலும் எனது நிகழ்ச்சிகளை பார்த்து கருத்து தெரிவியுங்கள். காரணம் எங்கள் பலவீனம் என்ன என்பதை உணர்ந்து கொள்வதே எம்முடைய பலம்.

வியாழன், 22 நவம்பர், 2012

ராகுமான் இசையில் பாடனும்...

‘கோ’ திரைப்படத்தில் என்னமோ ஏதோ என்ற ஒரே பாடல் மூலம் உச்சத்திற்கு போனவர் பாடகர் அலப்ராஜ்.  தற்போது மாற்றான் திரைப்படத்தில் இவர் பாடிய  தீயே... தீயே... பாடல்தான் இளைஞர்களின் ரிங்டோன். 

இந்தவாரம்  அவர் உதயசூரியன் வாயிலாக உங்களைச் சந்திக்கிறார்.
நேர்காணல்: எஸ்.ரோஷன்

ஹாய் முதல்ல  எல்லோருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்! நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையிலதாங்க. நான் தமிழன் என்று நீங்க எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பீங்க. நான் தமிழன் இல்லைங்க. நான் ஒரு மலையாளி.

பாடகராக அறிமுகமாகியது எப்படி ?

எனது குடும்பம் இசைக் கலைஞர்களைக் கொண்ட ஒரு அழகான குடும்பம். என்னுடைய அம்மா பாடகி. அத்தோடு டப்பிங் குரல் கொடுப்பவர். அப்பாவும் பாடகர், இசையமைப்பாளர். இந்தக் குடும்பப் பின்னணியில் இருந்ததால எனக்கும் சின்ன வயசுல இருந்தே இசைத்துறையில் ஆர்வம் இருந்தது. இசைத்துறையில் அப்பாதான் எனக்கு பயிற்சியளித்தார். நாங்கள் இருவரும் பல மேடைகளில் பாடல்களை பாடியிருக்கின்றோம்.  எனது நண்பரான தமன் என்னை  2009 ஆம் ஆண்டு ஐயனார் திரைப்படத்திற்கு பாடுவதற்கு அழைத்தார்.  நான் இதுவரையில் 20  22 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கின்றேன். இன்னும் புதிய பாடல்களையும் பாடிக் கொண்டிருக்கின்றேன். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடியிருக்கீங்க. இதில் எந்த மொழியில் பாடுவதற்கு உங்களுக்கு இலகுவாக உள்ளது?

நான் மலையாளி என்பதாலோ என்னவோ மலையாளப் பாடல்கள் பாடுவதற்கு இலகுவாக இருக்கும்.  தமிழில பாடுவது கொஞ்சம் கஷ்டம்தான். தமிழ் மொழியில் சிலவார்த்தைகளை பாவனையாகவும் அழகாகவும் உச்சரித்துப்பாட வேண்டும் என்ற காரணத்தினால்தான். இருந்தாலும் தமிழில் பாடுவது ரொம்பப் பிடிக்கும்.

நீங்கள் பாடிய பாடலில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது ?

 கோ படத்தில என்னமோ ஏதோ... தான் என் பேவரிட். இந்தப் பாட்டுதாங்க என் வாழ்க்கையையே மாற்றியது. இதுக்கு பிறகு தான் எனக்கு பல விருதுகளும் நிறைய சந்தர்ப்பங்களும் கிடைத்தது. அதுமட்டுமல்ல இன்றைக்கு வரை ஹிட்டாகவும் இருக்குது.

நீங்க ஹீரோ மாதிரி இருக்கீங்க.  ஏதாவது திரைப்படத்தில் நடிக்கனும்னு என்று தோணலியா?

ஏங்க எக்கு தப்பா கேக்குறீங்க. படங்களில் நடிக்கிறது என்று இதுவரை நான் யோசித்தது கூட கிடையாது.
எந்த ஹீரோவுக்கு உங்களுடைய குரல் ஒத்துப்போகுமென்று நினைக்கின்றீர்கள்?

எனக்கு யாராக இருந்தாலும் பரவாயில்லை. உதாரணமாக என்னமோ ஏதோ பாட்டுக்கு யார் நடிகர் என்று தெரியாது. பிறகுதான் நடிகர்  ஜீவான்னு தெரியும். அதேமாதிரி எங்கேயும் காதல் படத்தில் நான் பாடிய  எங்கேயும் காதல் பாட்டுக்கு பிரபுதேவா  தான் திரையில வருவார் என்று தெரியாது. ஆனா ரெண்டு பேருக்குமே அந்தப்பாடல் ரொம்பப் பொருந்திப் போனது.   யார் நடித்தாலும் பரவாயில்லை எனது பாட்டு மக்கள் மத்தியில் வெளிவந்தால் அதுவே எனக்கு சந்தோஷம்தான்.
வெற்றிக்குத்தேவை திறமையா? அதிர்ஷ்டமா?
இரண்டுமே தேவை.

 தீபாவளியில் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் இருக்கா?

நான் ஒரு கிறிஸ்தவன். இருந்தாலும் சின்ன வயசுல இருந்தே தீபாவளி என்றால் எனது நண்பனுடைய வீட்டுக்குப் போவேன். அந்தத் தொடர்மாடி கட்டிடத்தில உள்ள எல்லாரும் ஒரு இடத்தில கூடி பட்டாசு வெடிப்பாங்க. ரொம்ப சந்தோஷமாகவும் அழகாகவும் இருக்கும். 

சந்திக்க விரும்பும் நபர் யார்?

நான் நிறைய இசையமைப்பாளர்களை சந்தித்திருக்கின்றேன். ஆனால் சந்திக்க விரும்பும் ஒரே ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். அவர் இசையில் பாடனும்னு இல்லாவிட்டால் அவரது பாடலுக்கு கிட்டார் வாசிக்க சந்தர்ப்பம் கிடைச்சாலே போதும்.

இலங்கை வந்த அனுபவம் பற்றி?

2010 இல் நான் இலங்கைக்கு வந்திருக்கின்றேன். கிட்டார் வாசிப்பதற்காக. நிறைய நண்பர்களை அங்கு சந்தித்தேன். கொழும்பு அனுபவம் எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது.

இன்றைய பாடலாசிரியர்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?

புதுப் பாடலாசிரியர்கள்ல வந்து மதன் கார்க்கி ரொம்பப் பிடிக்கும். அவரது வரிகளில் கவித்துவத்தோடு புதுமையும் இருக்கும். 

மாற்றான் படத்துல தீயே... தீயே... பாடல் அனுபவம் எப்படி?

ஹரிஸ் ஜெயராஜ் சேர் பாடக் கூப்பிட்டார். இரட்டை வேடத்தில நடிக்கிற சூரியாவில் ஒரு  சூரியாவுக்கு நான் பாடினேன். ஹாரிஸ் ஜெயராஜ் கூட பணியாற்றுவது ரொம்ப இனிமையான அனுபவம்.

இலங்கையிலுள்ள உங்களுடைய ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

உங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி. நீங்க தருகிற ஆதரவுதான் எங்களோட பலம். அது ரொம்ப முக்கியம். உங்களுடைய பாராட்டுக்கள் தான் எங்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றது. பாடகர்களாகிய எங்களுக்கு எப்போதும் உங்களுடைய பங்களிப்பைத் தாருங்கள். 

வெள்ளி, 9 நவம்பர், 2012

பாடகியாக ஆசைப்பட்டேன்....


சூரியன் FM அறிவிப்பாளர்
 Fresha.IN 
நேர்காணல்
நேர்காணல்:
எஸ்.ரோஷன்


புத்துணர்ச் சியான காலைப் பொழுதில் இனிமையான பாடல்கள், வாழ்த்துக்களோடு சூரியன் வானொலியில் அருணோதயம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் தொகுப்பாளினி Fresha.
 இந்த வார உதய சூரியனில் உங்களோடு அவர்...
 ஹா உதய சூரியன் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் Fresha Leena எனது சொந்த இடம் மன்னார் . அம்மா கொலஸ்டா, அப்பா நேசன், தம்பி பிரஷ்ஷான், தங்கை  அபிஷா  என மிகவும் கலகலப்பான குடும்பம் என்னுடையது.

சிறுவயது முதலே ஊடகத்துறையில்  பணியாற்ற மிகவும் ஆசைப்பட்டேன். அதுவும் பாடகியாக வருவதற்காக மிகவும் முயற்சி செதேன். அது பலிக்கவில்லை.  நான் ஒரு அறிவிப்பாளராக வர ஆசைப்பட்டேன்.  என் ஆசை நிறைவேறியது.

கொழும்பில் ஓர் நிறுவனத்தில் அறிவிப்பு பயிற்சியை முடித்துக் கொண்டு சூரியனுக்கு விண்ணப்பித்தேன். நான் அதிர்ஷ்டசாலி.  எனக்கு இவ்வளவு  இலகுவாகக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  இப்பொழுது ஓரு அறிவிப்பாளராக உங்கள் முன் நிற்கிறேன்.
நீங்கள் தொகுத்து வழங்கும் அருணோதயம் நிகழ்ச்சி பற்றி?
சூரியன் வானலையில் அதிகாலை நேர நிகழ்ச்சி அருணோதயம், நான் பாடசாலை செல்லும் காலங்களில் இந் நிகழ்ச்சியைக் கேட்டபடி தான் செல்வேன். இந் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்குவேன்  என்று அப்போது கனவிலும் நினைக்கவில்லை.   புத்துணர்ச்சியாக அந்த காலை  பொழுதில் இனிமையான பாடல்கள், வாழ்த்துகள் என்று தொகுத்து வழங்கும் போது  கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

இந்தத் துறையில் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என நினைக்கிறீர்கள்?
  புகழ் பணம் வந்து விட்டால் தங்கள் பழைய நிலைமைகளை மறப்பது.
 புகழைச் சேர்ப்பதற்கு நல்லவர்கள் போல் நடிப்பது  (இப்படியானவர்களைப் பார்த்திருக்கிறேன்).
 திறமையை நம்பாமல் மற்றவர்களை நம்புவது (காக்கா பிடிப்பது)
 குரலை மட்டும் வைத்துக் கொண்டு  தேடல் இல்லாமல் இருப்பது
 இதையெல்லாம் இங்கே நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்கள் அடையாளம் என்ன?
இத்துறையில் தேடல் அவசியம். மற்றும் பொறுமை மிகமிக அவசியம். என்னை அடையாளப்படுத்த இன்று நான் கற்றுக் கொள்ள வேண்டியது  நிறைய இருக்கிறது.

இலங்கை இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்  யார்?
 இலங்கையில் லோசன், நவநீதன், சைலி, மேனகா

சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருக்கின்ற அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?
 நான் ரசித்து மகிழ்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் நான் ரசித்த அறிவிப்பாளர்களுடன் பணியாற்றுவது மிகவும் சந்தோசம்.

 உங்களுக்கு ரோல் மொடல் யார்?
 மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சால்வா.  அடுத்து எனது அம்மா.

உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகை யார்?
 நடிகர் ஜெயம் ரவி, கம்பீரமான தோற்றம்
ஜெனிலியா குறும்பு, ஆடையலங்காரம் சிரிப்பு

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் எது?
 மாற்றான்

வாழ்வில் மறக்க நினைப்பது?
அப்படி எதுவும் இல்லை, எதுவும் நீண்டநாள் நினைவு இருக்காது.

பொழுது போக்கு : வானொலி, தியானம்.

ஏனைய திறமை : பாடுவது

 கடுப்பாகும் விடயம் : அர்த்தமில்லாமல் காத்திருப்பது.

 பிளஸ் : துணிச்சல், யாரையும் நம்பாதது,

மைனஸ்;  எல்லா விடயத்தையும் விளையாட்டுத் தனமா எடுப்பது.

யாருடன் இணைந்து நிகழ்ச்சி செயப் பிடிக்கும்?
 ஆசையை வெளியில்  சொன்னால் நிறைவேறாது. எனது ஆசை சீக்கிரம்

நிறைவேறும். அப்போது உங்களுக்கே தெரியும்.
மறக்க முடியாத சம்பவம்?

 எனக்கு 6 வயது  இருக்கும் போது மாமாவின் மகன்.  என்னிலும் 4 வயது இளையவன். என்னுடன் விளையாடி கொண்டிருந்தான். பின்பு நான் வீடு சென்று விட்டேன். மாலையில் கிணற்றிலிருந்து அவனை பிணமாக எடுத்தார்கள் அதை என் கண்கள் மறக்கவில்லை.

துப்பாக்கி முனையில் நேர்காணல் செய்ததை என்னால் மறக்க முடியாது


வசந்தம் டிவி சிரேஷ்ட தொகுப்பாளரும், அறிவிப்பாளருமான  இர்பானுடைய நேர்காணல்.

நேர்காணல்:
எஸ்.ரோஷன்

வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளரும், தொகுப்பாளரும், சிரேஷ்ட அறிவிப்பாளருமான இர்பான் இந்த வார உதயசூரியனில் உங்களுடன் தன்னைப்பற்றிய  விடயங்களை பகிர்ந்து கொள்கின்றார்...
வாசகர் வட்டத்திற்கு வணக்கம். நான் பிறந்தது முல்லைத்தீவு. வளர்ந்தது, படித்தது, வாழ்ந்துகொண்டிருப்பது எல்லமே புத்தளத்தில். புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்று  தொடர்ச்சியாக அங்கேயே ஒரு வருடம் ஆசிரியராகவும் கடமை புரிந்திருக்கிறேன். எனது மாமா லியூசின் மூலமாகவே ஊடகத் துறைக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பம் கிடைத் தது.  இதேநேரம் எனக்கு தொடர்ச்சியாக வாப்புக்களை வழங்கியதில் கே.டி.பிரசாத் மறக்க முடியாதவர். ஊடகத்துறையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றவர்களில் எம்.என்.ராஜா அவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது.

1999 ஆம் ஆண்டு சினிமாஸ் நிறுவனத்தின் வெள்ளித்திரை விருந்து என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்கினேன். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது எனது உணர்வலைகளை சொல்லித்தீர்க்க வார்த்தைகள் இல்லை. முதல் படைப்பை தருகின்ற எல்லோரும் இதனை உணர்ந்திருப்பார்கள்.

*வசந்தம் டி.வி.க்கு வருவதற்கு முன்னர் நேத்ரா தொலைக்காட்சியில் பணிபுரிந்துள்ளீர்கள். அங்குள்ள அனுபவங்களை சொல்ல முடியுமா?
மறக்க முடியாத அனுபவங்கள் அங்குதான் கிடைத்தன. 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட வேளையில் அந்த நெருக்கடியான நேரத்தில் பணிபுரிந்த திகில் அனுபவமே அனைத்தையும் தாண்டி மனதில் இருக்கிறது.

* அறிவிப்புத்துறையைச் சார்ந்தவர்கள்  எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? இது உன்னதமான தொழில். யாருக்கும் இலகுவில் கிடைக்காத வாப்பு. நேரத்தை அறிந்து செயற்படுவதோடு பொறுப்புணர்வோடு செயலாற்ற வேண்டும். புதிய விடயங்களை தேடுபவராகவும் மொழி வளமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.
*வசந்தம் டி.வி.யில் நீங்கள் தயாரித்து, தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் பற்றி? வசந்தம் தொலைக்காட்சி ஆரம்பித்து மூன்று வருடங்களேயான நிலையில் முதல் வருடத்திலேயே இரண்டு தேசிய விருதுகளை பெற்றுக் கொண்டது. இங்கு இருக்கின்ற அனைவருமே ஒரு குடும்பமாக செயற்படுகிறோம். நிகழ்ச்சிகளை வழங்குகின்ற போது சுதந்திரமாக செயற்படும் வாப்பை எமது முகாமையாளர் வழங்குவதால்தான் தரமான நிகழ்ச்சிகள் வெளிவருகின்றன. அந்த வகையில் எனது தயாரிப்புகளாக முகமூடி, தலைவாசல், சுற்றிவரும் பூமி, கண்மணி,    எமது பார்வை, நினைத்தாலே இனிக்கும், நிலாவே வா, வசந்தம் டொப் டென் போன்றவற்றை  குறிப்பிடலாம்.

*முகமூடி நிகழ்ச்சி பற்றி ?
ஆரம்பத்தில் நமது நாட்டில் இவ்வாறான நிகழ்ச்சிகள் சாத்தியமா? என்ற சந்தேகம் இருந்தது. பின்னர் ரசிகர்களின் ஆதரவினால் இன்று நல்ல தரமான நிகழ்ச்சி என்ற பெயரை  குறுகிய காலத்துக்குள்ளே முகமூடி பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதற்கு நாடெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான
தொலைபேசி அழைப்புக்கள் வருகின்றன.
முகமூடி சமூகத்தில் அநீதி இழைக்கப்பட்டவர்களின் குரலாகவும் திறமையுள்ளவர்களுக்கு களமாகவும் அமைகிறது.

*பாடசாலை அனுபவம் எப்படி?  பாடசாலையில் நீங்கள் செத சேட்டை, அதனால் அடிவாங்கிய அனுபவம் உண்டா?
பாடசாலையில் நான் ரொம்ப நல்ல பிள்ளை... இருந்தும் ஒரு முறை வகுப்பறையில் சில மாணவர்கள் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த நேரம் அவ்வழியே வந்த கந்தசாமி சேர் நான்தான் அந்த தவறை செதேன் என்று என்னை மைதானத்தின் நடுவே வெயிலில் நிற்கவைத்தார். இன்றும் செயாத தவறுக்காக தண்டிக்கப்பட்டதை எண்ணி வருத்தப்படுகிறேன்.

*போட்டிகள் நிறைந்த இந்த துறையில் உங்களின் அடையாளம்?
அனைவரோடும் கலகலப்பாக கடமையாற்றுவதோடு இயல்பாக இருப்பது.

*உங்களுடைய ரோல் மொடல் யார்?
 நீ செல்வதற்கு பாதை இல்லை என்று கவலைப்படாதே. நீ சென்றால் அதுவே பாதை. என்ற கூற்றுக்கிணங்க செயற்பட்டு வருகின்றேன்.

*இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர்?
பீ.எச்.அப்துல் ஹமீது, கோபிநாத்

*உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகை யார்?
நடிகர் விஜஉற்சாகமான நடிப்பு, நடனம்.
நடிகை நதியாஎன்றும் இளமையான நடிப்பு.

*வாழ்வில் மறக்க நினைப்பது எது?
கடந்த கால யுத்தம் தந்த நினைவுகள்.

*உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ?
யுத்த காலத்தில் மட்டக்களப்பில் துப்பாக்கி முனையில் முன்னாள் முதலமைச்சர்  பிள்ளையானை முதன் முதலாக நேர்காணல் செதது.

*அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
வாயை மூடி சும்மா இருடா...

*பொழுதுபோக்கு?
முகப்புத்தகத்தில் நண்பர்களோடு அரட்டை அடிப்பது.

* அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள்?
தினம் தினம் கவிதைகளை எழுதி கண்காணாது
மறைத்துவைப்பேன்.

*சந்திக்க விரும்பும் நபர் யார்?
 ஆங் சாங் சூகி

*நீங்கள் அடிக்கடி கடுப்பாகும் விடயம் என்ன?
அவசர அழைப்புகளை எடுக்கும் போது Answer  பண்ணாமல் இருப்பது.

* நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்?
Until the Final Hour  என்ற ஹிட்லரின்  கடைசி நிமிடங்கள்.
உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
நல்ல தரமான நிகழ்ச்சிகளின் உருவாக்கம் உங்கள் கைகளிலே இருக்கிறது. ஆகவே தரமான நிகழ்ச்சிகளுக்கே உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

மனதில் பட்டதை சொல்லுவேன்...


சக்தி’ தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி 
தற்போது வசந்தம் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக 
கடமையாற்றுகிறார் பிரியா.
இந்த வாரம் உதயசூரியனுக்கு 
அளித்த நேர்காணல்.

நேர்காணல்:எஸ்.ரோஷன்

என் சகோதரி, சகோதரியின் கணவர் ஆகியோர் ஊடகத்துறையில் இருந்தாலும் நான் ஊடகத்துறைக்கு வந்தது எதிர்பாராமல் நடந்த சம்பவம். நான் முதன்முதல் பணியாற்றிய ஊடக நிறுவன அதிபரை முதல் முறை சந்தித்தபோது அவர் ‘‘நீங்கள் என்னவாக வர விரும்புகிறீர்கள்சு எனக் கேட்டார். நான் பொதுவாக மனதில் பட்டதைச் சொல்லும் இயல்புடையவள். அவர் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில் பிரபல்யமாக வேண்டும் என்பது தான், அவர் சிரித்துக் கொண்டே  தந்த வாப்புத்தான் என்னை இந்தத் துறைக்கு அழைத்து வந்தது.
கடுமையான உழைப்பும், ஆர்வமும் என்னை இந்தத் துறையில் நிலைத்திருக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் ஒரு ட்ரென்ட்  இருக்கும். அதைப் பின்பற்றுபவர்கள்தான் வெற்றி பெற முடியும்.
போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்களின் அடையாளம் என்ன?
அறிவிப்பாளராக இருப்பது ஒரு தனித்திறமை. அதை செபவர்களை பார்க்கும்போது பெரும் ஆச்சரியம் ஏற்படும். நான் அதை என் உயிராக மதித்து செது வருகிறேன். என் தொழிலுக்கு நான் ஒருபோதும் துரோகம் நினைத்ததில்லை. கடுமையாக உழைத்திருக்கிறேன். என்னுடைய அடையாளம் நான் நானாக இருப்பது என்று நினைக்கிறேன்.
 விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி எது?
Travel and Living, Animal Planert ரொம்ப ரொம்பப் பிடித்த தொலைக்காட்சிகள். படிக்க அறிய, ரசிக்க ஏராளம் உண்டு.

ரோல் மொடல் யார்?
பெண்களுக்காக, சமூகத்துக்காக போராடும் பெண்கள் என் ரோல் மாடல்.

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் எது? பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? எந்தப் படம்?

திரையரங்குக்குப் போகும் பழக்கமில்லை. சுதந்திரமாக வீட்டில் அமர்ந்து படம் பார்க்கப் பிடிக்கும். தமிழ், ஆங்கிலம், இந்தி படங்கள் பார்ப்பேன். அதிகம் நல்ல படங்களை தவறவிடமாட்டேன். அண்மையில் பார்த்து ரசித்த படம் வித்யாபாலனின் ‘கஹனி’ வித்தியாசமான கதைக்களம் கொண்டது.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு. அவர் நடித்த எல்லா படங்களும் பிடிக்கும்.

வாழ்வில் மறக்க முடியாதது ?
இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த நண்பன் அவர் வீட்டு வாசலில் இறந்து கிடந்தது. தற்கொலை செது கொண்டான் என்று சொல்லப்பட்டது.
* நான் சாதாரண அறிவிப்பாளராக இருந்து முகாமையாளராக பதவி உயர்வு பெற்றது.
* கலைஞர் தொலைக்காட்சியில் என்னுடைய முரளியுடனான நேரடிப் பேட்டி நிகழ்ச்சியை பார்த்து பாராட்டு குவிந்தது.
* தேசிய விருது கிடைத்தது.
 இவை எதையுமே மறக்க முடியாது
.
பொழுது போக்கு?
பாடல் கேட்பது, தனியாக அமர்ந்திருப்பது, உடற்பயிற்சி நிலையம் செல்வது.

 அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் !
விதம்விதமாக வித்தியாசமாக சமைப்பது, மற்றவர்களை நன்றாக பேசி சமாதானம் செவது. Saree டிசைன் செவது, அழகுக் கலை மீது தனிப்பிரியம் உண்டு.
  வசந்தம் டி.வி.யில் நீங்கள் தொகுத்து வழங்கும் முகமூடி நிகழ்ச்சி பற்றி ?

நீண்ட காத்திருப்பு, போராட்டத்தின் பின் ஆரம்பித்த நிகழ்ச்சி எங்கேயோ செயவேண்டியது, இங்கே செயக் கிடைத்தது. அற்புதமான நிகழ்ச்சி. இது கதையல்ல நிஜம் போலவே என்று என்னை கேட்பார்கள். நான் ‘ஆம்’ ஆனால் இது நம் மக்களுடைய தனிப்பட்ட சமூகப் பிரச்சினைகள் என்று விளக்கம் கூறுவேன். கரு ஒன்று ஆனால் களம் வித்தியாசமானது. நம்முடைய பிரச்சினைகள் மிக வித்தியாசமானவை. இன்னும் இன்னும் வித்தியாசமான விடயங்களை உங்கள் முன் கொண்டுவர தயாராகிறோம். பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர நீங்களும் ஒவ்வொரு ரசிகரும் முன்வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்கள் பிரச்சினை வெளிவருமே தவிர நீங்கள் யார் என்பது வெளிவராதது இதன் சிறப்பு. இங்கு வரும் ஒவ்வொருவரின் கதை மூலமும் நம் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணரக் கூடியதாக இருக்கும்.

சந்திக்க விரும்பும் நபர்?
இருந்திருந்தால் (உயிரோடு) கிளியோபாட்ரா...

உங்களுடைய (பிளஸ், மைனஸ்) என்ன?
பிளஸ்  எதை செதாலும் மனதை ஒரு நிலைப்படுத்தி உண்மையாக நேர்மையாக செது முடிப்பது.
மைனஸ்  அதிக முன்கோபம், அதைக் குறைக்க அதிகம் முயற்சிக்கிறேன்.
 நீங்கள் படித்ததில் பிடித்தது?
அநேகமாக வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் அதிகம் பிடிக்கும். சேகுவேராவின் வரலாற்றுப் புத்தகம் மிக மறக்க முடியாத புத்தகம். அவரை இன்னும் பிடிக்கவைத்தது. மற்றும் பெண்கள் சம்பந்தமான புத்தகங்கள் அதிகம் படிப்பேன்.

 நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
எங்கு சென்றாலும் இவர் அவர்தானே என்று குறுகுறு பார்வை பார்ப்பது. சிலர் பேசலாமா, இவர் பேசுவாரா என தயங்குவது இவை எல்லாம் என் கண்களுக்கு புலப்படும். நான்  எல்லோரோடும் சகஜமாக பேசுபவள். யார் என்னை எங்கு கண்டாலும் தாராளமாக பேசுங்கள்.
ஊச்ஞிஞுஞணிணிடு மூலம் அதிகபட்ச நண்பர்கள் இருக்கிறார்கள். என் நிகழ்ச்சிகளின் குறை நிறைகள் உங்களைத் தவிர யாராலும் சிறப்பாக சுட்டிக்காட்ட முடியாது. காத்திருக்கிறேன். அதேபோல் ஊடகங்களின் நல்லபடைப்புகளை மனம் விட்டு பாராட்டுங்கள்.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

சந்திக்க விரும்பிய உங்கள் ஊர் பிரமுகர்...


இசையமைப்பாளராகவும்,  பின்னணிப் பாடகராகவும், சிறந்த நடிகராகவும்
மக்கள் மத்தியில் அறியப்பட்டவர், பல விருதுகளுக்கு சொந்தக்காரர் 
 மாணிக்க விநாயகம் ! 

நேர்காணல்:எஸ்.ரோஷன்

ஒரு பாடகராக இலங்கையின் மூலை முடுக்கெங்கும் இவர் அறிமுகமாகியிருந்தாலும் இவருக்கும் இலங்கைக்கும் கலைக்குமான தொடர்பு மிக நீண்டது, இறுக்கமானது.
இலங்கை ரசிகர்களுக்கு எனது வணக்கம்!  என்னோட சொந்த பெயரே மாணிக்க விநாயகம்தான். எனது தந்தையார் வல்லுவூர் ராமையாப் பிள்ளை, உலகம் போற்றும் நாட்டிய மேதை. தாயார் ஞானசுந்தரம் அம்மாள். எனது தந்தை இந்தியாவிலும் இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் பல நாட்டிய மேதைகளை வளர்த்து விட்டவர். தற்போது அவர்கள் எல்லாம் வெளிநாடுகளில்  நாட்டிய மேதைகளாகவும், நாட்டிய ஆசிரியர்களாகவும் இருக்கின்றார்கள்.
என்னுடைய தகப்பனாரின் நாட்டிய நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணத்துக்கு பல தடவைகள் வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் யாழ்ப்பாணம் மண் செழித்த, தமிழ் செழித்த பூமி. இப்போ யுத்தத்திற்குப்பிறகு யாழ்ப்பாணம் சென்ற போது உருக்குலைந்த யாழ்ப்பாணத்தப் பார்த்து நான் பட்ட வேதனையை வார்த்தையால் சொல்ல முடியாது.
உடைஞ்சு உருக்குலைஞ்சு போயிருந்தாலும்  அந்த மக்களோட பாசமும் பண்பும் இன்றும் மாறல.
* இசைத்துறை அறிமுகம்
எனக்கு ஏழு வயதிருக்கும் போதே எனது மாமாவும், குருவுமான இசை மேதை சிதம்பரப்பிள்ளை யிடம் சங்கீதம் கற்றுக்கொண்டேன். இது தவிர குடும்பக்கலையுமான நாட்டியத்தையும் கற்றுக் கொண்டேன். பின்னர் இசையின் மீது கொண்ட ஈர்ப்பால் 1980களில் ஒரு வானொலியில் இசையமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டு சென்னையிலுள்ள தொலைக்காட்சிகள், வானொலிகளில் பல நூறு பாடல்களுக்கு இசையமைத்து வந்தேன்.
அதன் பின்னர் சில காலங்களில் பல ஒலி நாடாக்களுக்கு பக்திப் பாடல்கள், காதல் பாடல்கள், தேவாரங்கள், திருப்புராணங்கள் போன்றவற்றுக்கு இசையமைத்து உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தேன். அது மட்டுமல்ல, எனது இசையில் பழைய பாடகர்களில் இருந்து தற்போது உள்ள பாடகர்கள்  வரை பல பாடகர்கள் பாடியிருக்காங்க.
இதுவரையில் 15,000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து பாடியிருக்கிறேன். இதற்காக தமிழக அரசு 2003 ஆம் ஆண்டு ‘கலைமாமணி’ விருது கொடுத்தது. 2008 இல் கலைஞர் கருணாநிதி ‘இசைமேதை’ என்ற பட்டம் கொடுத்தார்.
*திரை இசைக்கு அறிமுகம்!
என்னோட பாடல்களை வித்தியாசாகர் கேட்டுவிட்டு ‘தில்’ படத்தில் முதன் முதலாக நடிகர் விக்ரமுக்காக பாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த படத்தில்  “கண்ணுக்குள்ள கெளுத்திசு என்ற பாடல் எனக்கு பெரும் புகழையும் வெற்றியையும் தேடித்தந்தது.
 அதுக்கு அப்புறமாக வித்தியாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், யுவன் சங்கர் ராஜா இப்படிப்பட்ட எல்லா இசையமைப்பாளர்களிடமும் வெற்றிப் பாடல்களைப் பாட சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பாடியிருக்கிறேன்.
*திரை உலகில் உங்கள் நண்பர்கள் பற்றி?
சமகாலத்துல வந்த நண்பர்கள்னா கார்த்திக், திப்பு, தேவன் போன்றவங்கதான்.  நாங்க எல்லோரும் பாடகர்கள். எங்களுக்குள் போட்டி உண்டு. பொறாமை இல்லை.
*திரையுலகில் உங்களுக்கு நடந்த கசப்பான சம்பவம் பற்றி?
ஒரு பாட்ட பாடுறதுக்கு இசையமைப்பாளர்கள் கூப்பிடுவாங்க. நாங்களும் போய் ரொம்ப சந்தோஷமா  பாடிட்டு பணத்தையும் வாங்கிட்டு வந்திடுவோம். அப்புறம் படம் வந்த பிறகு போய்ப் பார்த்தா நாங்க பாடின பாட்டு இருக்காது. அந்தப் பாட்டு சிலநேரம் கதாநாயகனுக்குப் பிடிக்காமல் போகும். அல்லது அவரே பாடுவதாக சொல்லியிருக்கலாம். அல்லது இசையமைப்பாளரே பாடுவதாகவும் இருக்கும். இதுபோன்ற சம்பவம் பல தடவை நடந்திருக்கு.
*இன்றைய பாடலாசிரியர்களில் உங்களுக்குப் பிடித்தவர்?
இளைய தலைமுறையில சொல்லப்போனா கவியரசு வைரமுத்துவின் மகன் கார்க்கி. இவர் ஒரு அற்புதமான பாடலாசிரியர்.
*நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார்?
நான் ரொம்ப ஆசையா சந்திக்க விரும்பியவர் உங்களுடைய (இலங்கையில்) ஊர்லதான் இருந்தாரு. அவரை பெயர் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. உங்கள் எல்லோருக்கும்தான் தெரியுமே. அவரை பார்க்க முடியாது ஏங்கும் எத்தனையோ இலட்சம் பேர்ல நானும் ஒருத்தன்.
*பாடுவது மட்டுமல்லாது நடித்தும் இருக்கின்றீர்கள். நடிப்பு அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?
பாடகராகும் வாய்ப்பு ஒரு விபத்து. அது மாதிரித்தான் நடிப்பும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியாக இருந்தது. முதன் முதலாக திருடா திருடி திரைப்படத்தில் தனுஷýக்கு அப்பாவாக  நடித்தேன். முதல் படத்திலேயே எனக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் விருது கிடைத்தது.   என்னோடு நடித்த கதாநாயகர்கள் எல்லோருமே ரொம்ப மரியாதையானவங்க. அவங்களோட இருந்ததே ஒரு அனுபவம்தான்.
*நீங்கள் இதுவரை எத்தனை திரைப்படங்களில் நடித்திருக்கிறீர்கள்?
இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஒரு 500, 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக 25 விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.
*அடிக்கடி மறக்கும் பொருள்?
நான் எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டேன். இருந்தும் ஒரு நாள் ரயில்ல வரும் போது  எனது ஒரு பையை மறந்துவிட்டு இறங்கிட்டேன். ரொம்ப தவிச்சிப் போயிட்டேன். பிறகு என் மகள் போய்த் திரும்ப அதை எனக்குக் கொண்டு வந்து கொடுத்தார். எனக்கு என்னுடைய வெற்றிலைப்பை எவ்வளவு முக்கியம்னு என் குடும்பத்திற்குதாங்க தெரியும்.
*ரசிக்கும் பாடல்கள்?
எனக்கு அதிகமாக கிராமிய இசைப் பாடல்களும், பொப்  பாடல்களும் ரொம்பப் பிடிக்கும்.
*இலங்கை ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
உங்களுடைய அன்பையும், தன்னம்பிக்கையையும் எப்பவும் இழக்காதீங்க. சந்தோஷத்த எப்பவும் மாத்திக்காதீங்க. நாங்கள் இருக்கிறோம் உங்களை சந்தோஷப்படுத்த. உங்களுடைய பொழுது போக்குக்காகத் தான் பாடிக் கொண்டு இருக்கிறோம்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

அம்மா தான் என்னுடைய ரொல்மோடல்....


சக்தி தொலைக்காட்சியில் அறிமுகமாகி தற்போது  வசந்தம் டி.வி.யின் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும்  அர்ச்சனாவின் நேர்காணல்

 நேர்காணல்:
 எஸ்.ரோஷன்

பாடசாலை காலங்களில் நான் இலக்கியத்தில் பெரும் நாட்டம் கொண்டவள். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வந்தேன்.  அப்படியிருந்தும் தற்போது ஒரு எழுத்தாளராக வருவதற்கு ஒரு சந்தர்ப்பம் இல்லாது போவிட்டது. இருந்தும் ஒரு அறிவிப்பாளராக புகழ்பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் சக்தி தொலைக்காட்சியில் அறிமுகமாகி தற்போது  வசந்தம் டி.வி.யின் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும்  அர்ச்சனா.
இந்த வார உதயசூரியனில் உங்களுடன்...


ஹா வணக்கம். நான் குடும்பத்தில் ஒரே ஒரு செல்லப்பிள்ளை.  என் சொந்த இடம் யாழ்ப்பாணம். பாடசாலை காலத்தில் பரதநாட்டியம், நாடகம், இலக்கியம், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு பல வெற்றிகளை  பெற்றிருக்கிறேன்.  உயர் கல்வியை கொழும்பில் படித்துக்கொண்டு இருக்கும் போது சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் தேவை என்ற விளம்பரம் பார்த்து விண்ணப்பித்தேன். எனது முதல் நிகழ்ச்சியான ஆனந்த இல்லம் நிகழ்ச்சி  2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த சஞ்சிகை நிகழ்ச்சிக்கான தேசிய விருதைப் பெற்றது.
பின்னர்  சக்தி தொலைக்காட்சியில் பெண்மணிக்காக, சந்திப்போமா, சக்தி சட், குட்மோனிங் சிறிலங்கா, பிரியமான தோழியே ஆகிய நிகழ்ச்சிகளை  ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில் தொகுத்து வழங்கினேன்.
தற்போது வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருப்பதுடன் தலைவாசல் என்ற காலை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றேன்.
* அறிவிப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான்  இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் நீங்கள் சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி இருக்கக்கூடாது?
அறிவிப்பாளர் தொலைக்காட்சியில் தன்னை எல்லாம் தெரிந்த விற்பனர்  என நினைத்து தனது கருத்துகளை மக்களுக்கு திணிக்கக் கூடாது. ஏன் என்றால் மக்களுள் ஒருவராக நேயர்களுடன் சினேக பூர்வ கருத்தாடலை மேற்கோள்ள வேண்டும். மற்றவர்களின் மாதிரிகளைப் பின்பற்றாமல் தனித்துவமான பாணியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கலாம்.
*இலங்கையில்/ இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?
வானொலியிலும் தொலைக்காட்சியிலும் எனக்குப் பிடித்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் அவர்கள்தான். இவரின் குரல் வளமும் தமிழ் உச்சரிப்பும் நேர்த்தியான நிகழ்ச்சித் தொகுப்பும் பிரமிக்கத்தக்கது.
*நீங்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி எது?
விஜ டி.வி.தான்  நான் விரும்பிப் பார்ப்பது. காரணம் விஜ டி.வி.யின் நிகழ்ச்சிகள் பிரமாண்டமாகவும் சுவாரஷ்யமாகவும் சமுகத்துக்கு தேவையான நல்ல கருத்துகளை முன்வைக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகின்றார்கள். அதில் நீயா நானா என்ற நிகழ்ச்சி ரொம்பப் பிடிக்கும். அதன் தொகுப்பாளர் கோபிநாத் ஒரு முற்போக்கு சிந்தனையாளர், பத்திரிகையாளர் அதுமட்டுமல்ல நல்ல எழுத்தாளரும் கூட, அதற்குச் சான்றாக ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க, தெருவெல்லாம் தேவதைகள், நேர் நேர் தேமா ஆகிய புத்தகங்களை எழுதி உள்ளார்.
*உங்களுடைய ரோல் மொடல் யார்?
எனது ரோல் மொடல் என் அம்மா தான். அம்மாவைப் போல், தன்னம்பிக்கையை துணையாகக் கொண்டு வாழ்க்கையில் சாதித்தவரை இது வரைக்கும் நேராக நான் கண்டதில்லை.
*உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர்,  நடிகை யார்?
நடிகை ஸ்னேகாவின் அழகும் நடிப்பும் ரொம்பப் பிடிக்கும். அவர் நடித்த பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் போன்ற திரைப்படங்கள் என்றும் ரசிக்கக் கூடியவை. நடிகர்களில் ரஜனிகாந்தின் ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். அவரைச் சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற பழைய திரைப்படங்களும் பிடிக்கும்.
*சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் எது?
சமீபத்தில் நான் பார்த்து, ரசித்து, வியந்த படம் நான் ஈ தாங்க... நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட கதை அம்சம் கொண்ட படம். நடிகர்களின் நடிப்பு, இசை, பாடல் எல்லாமே சிறப்பு. சாதாரணமாக ஈயை அடித்து கொல்பவர்களும் இந்த படத்தைப் பார்த்து ஒரு ஈக்காக அழுதார்கள்.
*வாழ்வில் மறக்க நினைப்பது எது?
வாழ்வில் மறக்க நினைப்பது போரும், அது தந்த மனக் காயங்களையும் கண்ணீரையும் எனது வாழ்வில் மறக்க நினைக்கின்றேன்...
*உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ?
என் தா மண்ணான யாழ்ப்பாணத்தில் இருந்து தொகுத்து வழங்கிய சந்திப்போமா நிகழ்ச்சி. மற்றையது சந்திப்போமா நிகழ்ச்சிக்காக பூண்டுலோயாவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு சென்றிருந்த போது அந்த பாடசாலையின் இடைவேளை நேரத்திற்கான மணி அடித்ததும் மாணவர்கள் அனைவரும் என்னிடம் ஓடி வந்து  சுற்றிவளைத்துக்கொண்டு ஓட்டோகிராப் கேட்டது என்றும் மறக்க முடியாது.
*உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?
எனது பொழுதுபோக்கு புகைப்படங்கள் எடுப்பது, மற்றும் இணையத்தளத்தில் சமையல் குறிப்புகளை பார்த்து சமைத்து பார்ப்பது.
* திருமணம் எப்போது...?
வீட்டில் பார்த்துக்கொண்டிருக்காங்க... மிக விரைவில் டும் டும் டும் தாங்க...
*உங்களுடைய பிளஸ், மைனஸ் என்ன?
 பிளஸ் முதல் சந்திப்பிலேயே என்னை எல்லோரும் ஸ்னேகிப்பது.
   மைனஸ்  முன் கோபம். அதை விட கொடுமை
    அந்த கோபமும் கொஞ்ச நேரம் தான்.

*உங்களுக்கு பிடித்த சாப்பாடு?
அம்மா சமைக்கிற சாப்பாடு எது என்றாலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
*அடிக்கடி எந்தப் பொருளை மறப்பீர்கள்?
நான் அடிக்கடி மறக்கும் பொருள் என்றால் பேனை தாங்க. அது கிடைக்காட்டி யாரிடமாவது கேட்டுவாங்கி எழுத மாட்டேன். மீண்டும் ஒரு புதிய பேனையை வாங்கிடுவேன்.
*நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்?
 தன்னை முகமூடிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிற மனிதர்கள் தங்களையே தொலைத்து விடுவார்கள் என்ற ஒஷோவின் தெளிவான பார்வை எல்லோருக்கும் தெளிவைத் தரும். தத்துவங்கள் என்றாலே, அவை தளர்ந்து போனவர்களுக்குத்தான் என்கிற தவறான கருத்தைத் தகர்த்து, வாழ்வியலின் வலிமையே தத்துவம் என்கிற புதிய பார்வையோடு எதையும் அணுகிய ஒஷோவைப் பிடிக்கும்.
* நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
போட்டியும் சவால்களும் நிறைந்ததுதான் ஊடகம்.  பெண்கள் ஊடகத்துறைக்கு வந்து பிரபல்யம் அடைவதை மட்டும் சாதனையாக எண்ணாமல், தனிப்பட்ட வாழ்விலும் சிறந்து நற்பெயருடன்  வாழவேண்டும்.

லிட்டில் சங்ககார சாருஜன்....



லிட்டில் சங்கக்கார சாருஜனின் நேர்காணல்....

நேர்காணல்:
எஸ்.ரோஷன்


வெறும் ஆறே வயது தான்.
 உலக கிரிக்கெட் பிரபலங்கள் பலர்
இவருக்கு அறிமுகம்!
இலங்கை கிரிக்கெட்
அணியினரின் செல்லப்பிள்ளை!
கிரிக்கெட் வீரர்களதும் வர்ணனையாளர்களதும் ஆச்சரியமான பாராட்டைப் பெற்றிருக்கிறார்.
யூ டியூப்பில்
 இவரது  வீடியோ மிகப்  பிரபலமாக பார்க்கப்படுகிறது.
யாராவது உலகப் பிரபலங்களின் மகனாக இருந்தால், அல்லது தலைசிறந்த கிரிக்கெட்
வீரரின் வாரிசாக இருந்தால் சிலவேளை இந்தப் புகழும் பெருமையும் இலகுவாக கிடைத்திருக்கக்  கூடும்.
ஆனால் சாதாரண ஒரு சிறுவனுக்கு அதிலும் இலங்கையில் ஒரு தமிழ்ச் சிறுவனுக்கு கிடைத்திருக்கிறதென்றால் அது பெரும் ஆச்சரியம்தான்.
ஆம் இந்த ஆச்சரியத்திற்குரிய , பாக்கியத்திற்குரிய சிறுவன் சாருஜன். நடுத்தர குடும்பத்தைச்  சேர்ந்தவர், அப்பா கிரிக்கெட் ஆர்வமுள்ளவர். புகைப்படக் கலைஞர். சாருஜன் கொழும்பு15 இல் வசிக்கிறார்.
சாருஜனை அவரது தந்தையின் வர்த்தக நிலையத்தில் சந்தித்தோம். மழலைக்கே உரிய குணத்தோடு    சாருஜன் வெட்கப்பட அவரது தந்தை சண்முகநாதன் சாருஜன் பற்றிச் சொல்கிறார். முகத்தில் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட பெருமிதம்.
சாருஜன் பிறந்து 10 11 மாதத்தில் அவரது கிரிக்கெட் ஆர்வம் வெளிப்பட தொடங்கி விட்டது. அவர் விளையாட கேட்பது எல்லாமே போல் தான்.  மற்ற குழந்தைகளைப் போல் எதண வேணும் விளையாட்டு சாமான் வேணும் என்று கேட்கமாட்டார். . எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
 எனக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம்.  சாருஜனுக்கு இரண்டு வயது இருக்கும் போது கு.கு.இ மைதானத்தில் இலங்கை, இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பார்க்க கொண்டு போயிருந்தோம். சின்னக் குழந்தையைக் கொண்டு போறோமே அங்கே அழுது அடம்பிடித்தால் என்ன செய்வது. நான்கைந்து மணிநேரம் எப்படி பொறுமையாக இருப்பான் என்றெல்லாம் யோசித்தபடிதான் அவரைக் கொண்டு போனேன். ஆனால் சாருஜன் அமைதியாக ஆர்வமாக கிரிக்கெட் போட்டியை ரசித்ததைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.  திரும்பி வீட்டுக்கு வருகின்ற போது ““ அப்பா அவங்க காலில போட்டு இருக்கிறது மாதிரி வேணும் என்று கேட்டார்.
 இவருடைய அளவுக்கு பேட் எடுக்கிறது அவ்வளவு சுலபமில்லையே. அதனால வீட்டில இருந்த அங்கர் மட்டையை எடுத்து காலில் கட்டி விட்டேன். அதன் பிறகு எங்கள் வீடே சாருஜனின் சிறு மைதானமாகிப் போனது.
அங்கர் மட்டையைக் கட்டிக் கொண்டு எந்நேரமும் கிரிக்கெட் விளையாடுவார். வளரவளர இவர் ரைட் சைட்டில் பந்து வீசுவதையும், லெப்ட் சைட்டில் பெட்டிங் செய்வதையும் அவதானித்தேன்.
அப்புறமாக நான் விளையாடப் போகும் போது மனைவிக்கு தெரியாமல் இவரையும் அழைத்துப் போய் விடுவேன்.கிரிக்கெட் ஆர்வம் வேணாம். படிப்பு கெட்டுடும்னு மனைவி திட்டுவாங்க.
ஒரு தடவை பாகிஸ்தான்  இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாங்களும் பார்க்கச் சென்றிருந்தோம்.
அந்த நேரத்தில் இவர் மைதானத்தின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது.  இவர் துடுப்பாடுகின்ற விதம், பந்து வீசுகின்ற விதம் எல்லாவற்றையும் கூஞுணண் குணீணிணூtண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கி இருந்தார்கள். நாங்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனோம். இதன் பிறகு தான் கிரிக்கெட் உலகின் அறிமுகம் எமக்கு கிடைத்தது.
இப்போது லிட்டில் சங்ககார என்கிற அளவுக்கு இவருக்கு புகழ் கிடைத்திருக்கிறது. எனது மகன் சங்ககார மாதிரி விளையாடுவதாக சொல்கிறார்கள். சங்ககாரவின் அத்தனை ஸ்டைலும் சாருஜனுக்கு தானாகவே வருகிறது.  சங்ககார பாணியில் இவர் விளையாடுவதை கண்ட பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்  டோனி கிரேக் இவருக்கு “லிட்டில் சங்ககாரசு எனப் பெயர் வைத்தார்.
மகனுக்கும் சங்ககாரவை ரொம்பப் பிடிக்கும். அவருக்கும் இவரை பிடிக்கும். சங்ககார அணித் தலைவர் பதவியிலிருந்து விலகும்போது சாருஜனுக்குத்தான் கடைசி கையொப்பமிட்டுள்ளார்.
சங்ககாரவை உங்களுக்கு ஏன் பிடிக்கும்? என சாருஜனிடம் கேட்டோம்.
அவர் நன்றாக விளையாடுவார். அவர் பெட்டிங் பண்ணுவது, கீப்பிங் பண்ணுவது பிடிக்கும். அதைவிட அம்பயர் அங்கிள் அவுட் காட்டினா ஒன்றும் சொல்லாம போய் விடுவாரு. ரொம்ப நல்ல அங்கிள். அதுமட்டுமில்ல சங்ககார அங்கிள் நல்லா விளையாடனும். நல்லா படிக்கனும்.
நல்ல சாப்பாடு சாப்பிடனும் என்று சொல்லியிருக்கிறார் என்றார் தன் மழழைக் குரலில்.
சாருஜனின் இன்னொரு பேவரிட்  அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேர்ன் வோன். அதுமட்டுமல்ல சாருஜனுக்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கு அடுத்தபடியாக  அவுஸ்திரேலிய  அணியைத்தான் பிடிக்கும்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மேற்கிந்திய அணியின் தலைவர் டெரன் செமி, கிறிஸ்கெய்ல், அதிரடி வீரர் கிரான் பொலக், சர்வான், இந்திய அணியின் தலைவர் தோனி, அதிரடி வீரர் விராட்கோலி. "ரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, பாகிஸ்தான் அணியில் சயிட் அப்ரிடி, அஜ்மால் உட்பட  உலக  கிரிக்கெட் பிரபலங்கள் பலருடன் புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறார் சாருஜன்.
எனினும் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரை மட்டும் சாருஜன் இன்னும் நேரடியாக சந்திக்கவில்லை. அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது சாருஜனின் நீண்ட நாள் ஆசை.
அத்தனைப் புகைப்படங்களையும் அழகிய ஆல்பமாக செய்து வைத்திருக்கிறார் சாருஜனின் தந்தை சண்முகநாதன்.
கொட்டாஞ்சேனை சென்.பெனடிக் கல்லூரியில் முதலாம் தரத்தில் படிக்கிறார் சாருஜன். மேலதிகமாக கிரிக்கெட் பயிற்சியும் பெற்று வருகிறார்.
வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் கிரிக்கெட் பயிற்சிக்காக செல்ல வேண்டும். மற்ற நாட்களில் அம்மாதான் கெஞ்சிக் கூத்தாடி அவரை எழுப்ப வேண்டும்.  கிரிக்கெட் பயிற்சி நடைபெறும் தினங்களில் அதிகாலையிலேயே எழும்பி விடுவார். எங்களையும் எழுப்பி விடுவார். அந்த அளவுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் இருக்கிறது சாருஜனுக்கு.
 இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும். நல்ல பெட்ஸ் மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் சங்ககார மாதிரி வரவேண்டும். இதுதான் என் இலட்சியம் என்கிறார் சாருஜன்.
சாருஜனின் விருப்பம் எப்படியோ  அதற்கேற்ப அவரை உருவாக்குவோம் என்கிறார் சாருஜனின் தந்தை நம்பிக்கையோடு!
இலங்கை அணிக்கு ஒரு சிறந்த வீரர் உருவாகிறார்.சாருஜனை வாழ்த்தி விடைபெற்றோம்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

இந்திய இசைக்களத்திலும் கால்பதிக்கு இலங்கை பாடலாசிரியர் ஸதீஷ்காந்

ஒரே நேரத்தில் இலங்கை, இந்திய, மலேசிய, கனேடிய திரைப்படங்களில் பாடல்களை எழுதிக் கொண்டிருக்கும் இளம் முன்னணிப் பாடலாசிரியர் ஸதீஸ்காந். தினக்குரலின் சகோதர
வெளியிடான உதயசூரியனுக்கு அளித்த நேர்காணல்
நேர்காணல்: எஸ்.ரோஷன்

பல அர்த்தமுள்ள வரிகள் மூலம் முத்திரை பதித்திருக்கும் ஸதீஸ்காந் இந்த வாரம் உங்களுடன்.
ஹாய் வணக்கம்! மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு தான் என் சொந்த ஊர். குடும்பத்தில் 4 பேர். அப்பா மின்சார சபையில் தொழில் புரிகின்றார். அம்மா ஆசிரியை. ஒரே மகன் நான். கடைசி செல்லப்பிள்ளை எனது தங்கை.
நான் இசைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகமான அனுபவம் பற்றி சொல்லப் போனால் சக்தி டி.வி.யின் இசை இளவரசர்கள் நிகழ்ச்சியில் முதல் சுற்றில் பங்கு பற்றினேன். எனினும் 2 ஆம் சுற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
அதன் பிறகு இலங்கையில் இருக்கும் எல்லா இசையமைப்பாளர்களிடமும் வாய்ப்பு கேட்டேன்.
வாய்ப்புகள் எனும் வரம் எல்லோருக்கு இலகுவாக கிடைத்து விடுவதில்லையே! அதற்காக நிறைய முயற்சித்தவம் செய்ய வேண்டும். தளராத மனம் வேண்டும். இவை இருந்தால் வாய்ப்புக் கதவு என்றாவது ஒருநாள் திறக்கும்.
எனக்கும் ஒருநாள் கதவு திறந்தது. 2007 இல் இசையமைப்பாளர் ஷமீலின் இசையில் “வானவில் தேவதை'' எனும் பாடலை எழுத சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்தப் பாடல் மூலம் இசை உலகிற்கு அறிமுகமாகி இதுவரை 3 தேசிய விருதுகளையும் ஒரு மாகாண விருதையும் பெற்றுள்ளேன்.
எனக்கு 2011ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருது ஜனாதிபதியால் அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. ஜனாதிபதி கையால் விருது பெற்றது என்வாழ்வில் மறக்கமுடியாது.
இதுவரை நான் 6 இசைத் தொகுப்புகளில் பாடல்களை எழுதியுள்ளேன். கனவின் கருவில் (ஷமீல்), உள்ளம் திறந்தேன் (ஷமில் நிக்கி), டெஸ்டினி (பிரணிவ்), யாழ் தேவி (ஜெயந்தன்) ஆகிய பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளதுடன். சகிஸ்ணா, பிரஜீவின் இசையில் இரு இசைத் தொகுப்புகள் மிக விரைவில் வெளிவர இருக்கின்றன.

சகிஸ்ணாவின் இசையில் வெளிவரவுள்ள இசைத் தொகுப்பில் இந்தியாவின் பிரபல பாடகர்களான பிரசன்னா, ஸ்ரீ சரண், வந்தனா ஸ்ரீநிவாசன், ஷில்பா, விஜ ஜேசுதாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றவர்கள் பாடியிருப்பது சிறப்பம்சமாகும்.
அதுமட்டுமல்ல இதுவரை 55 பாடல்கள், 20 நிலையக் குறியிசைகள், 100 விளம்பரப் பாடல்களை எழுதியுள்ளேன். வெற்றி, வசந்தம், சூரியன் ஆகிய வானொலிகளில் நிலையக் குறியிசைகளை எழுதியுள்ளேன்.
நான் எழுதிய வானவில் தேவதை, காதல்னா காதல் இல்லை, யாழ்தேவி, சோனியா. ஐ லவ் யு, ஏதேதோ, பூக்கின்றா பூவா, துளித் துளி, காதோடு காதல், உன்னாலே உன்னாலே, ரொக் வேமு ஆகிய பாடல்கள் சமூக வலையத்தளங்களிலும் வானொலி ஊடகங்களிலும் இலட்க் கணக்கான மக்களின் வரவேற்பைப் பெற்றது. அத்தோடு நான் எழுதிய 5 பாடல்கள் (சோனியா, துளித் துளி, காதோடு காதல், ஐ லவ் யு, ஓராயிரம் வெண்ணிலா) சக்தி தமிழ் இசை விருதிற்காக வேறுபட்ட பிரிவுகளில் பரிந்துரை செயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சூரியன் தயாரிப்பில் ஷமீலின் இசையில் எழுதிய மழை விழி என்ற பாடல் இலங்கை இசையில் ஒரு இலக்கண படைப்பாக வெளிவந்ததுடன் தனியார் வானொலிகளில் ஆயிரக் கணக்கான தடவைகள் ஒலிபரப்பானது.
அது top 20 யில் அதிக தடவைகள் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்தது. கிரிஷான் மகேசனின் இசையில் எனது வரிகளில் இந்திய இசைத் துறையின் ஜாம்பவான்களான ஷங்கர் மகாதேவன், எசான், லோ பாடிய ரொக் வெமு (rugby song) பாடல் வலையத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட பாடலாக மாறியதுடன், ஒரே வாரத்தில் 12000 இற்கும் மேற்பட்டவர்களால் download செயப்பட்டது.
இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் A.R.V.லோஷனில் குரலில் எனது வரிகளிலும் ஷமீலின் இசையிலும் வெளிவந்த இறைவன் அருகில் என்ற கவிதை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
அத்துடன் கல்லூரியின் கடைசி பெஞ்ச்சு, இன்று மாலை தென்றலுடன் கூடிய காதல் வரும் ஆகிய கவிதைக் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமாக பேசப்பட்டன.
இதுவரை ஷமீல், பிரஜீவ், கந்தப்பு ஜெயந்தன், ஜோக்ஸ், பிரணிவ், சகிஸ்ணா, சஞ்சித் லக்ஸ்மன், ராஜ், கிரிஷான் மகேசன், ஸ்ரீ விஜ, நிக்கலின் மரியோ, ஒஸ்மான், லக்ஸ்மன் உட்பட 20 இற்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களுக்கு எனது பாடல்களை எழுதியுள்ளேன்.
நான் சக்தி நிறுவனம் தயாரிக்கும் எழுதாத கதை திரைப்படத்தில் பிரஜீவின் இசையில் பாடல்களை எழுதி வருகின்றேன். அதனோடு இரண்டு இந்தியத் திரைப்படத்திலும் மலேசிய, இலங்கை மற்றும் கனேடியக் குறுந்திரைப்படத்திலும் பாடல்களை எழுதி வருகின்றேன்.
தற்போது நான் ஷாகிஸ்னா இந்திய இசையமைப்பாளரின் இசையில் 10 பாடல்களில் 8 பாடல்கள் எழுதியுள்ளேன்.
இன்னும் நான் பாடல்கள் எழுதி சிறந்த பாடலாசிரியராக வளர்வதற்கு ரசிகர்களாகிய உங்களின் ஆதரவு என்றும் தேவை.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

சூரியன் சாதாரண மக்களின் தோழனாக இருக்கிறான்!




சூரியவன் வானொலியின் அறிவிப்பாளரும்
வைத்தியருமான மணிவன்னன்
தினக்குரலின்
சகோதர
வெளியீடான உதயசூரியன்
பத்திரிகைக்கு அளித்த நேர்காணல்.

நேர்காணல்:எஸ்:ரோஷன்

சூரியன் வானொலியின் இரவுகளை இனிமையாக்கி அதிகாலையை ரம்யமாக்குபவர் அறிவிப்பாளர் மணிவண்ணன்.
அறிவிப்பாளராக பலராலும் அறியப்பட்டிருக்கும் மணிவண்ணன் தொழில் ரீதியாக ஒரு மருத்துவர், அதுமட்டுமல்ல அறிவிப்பாளர், கவிஞர், நல்ல ரசனையாளர் என பல ஆற்றல்களை தனக்குள்ளே கொண்டுள்ளார்.
விடிய விடிய இரவுச்சூரியன் நிகழ்ச்சியில் அட்டகாசமான பாடல்களை, நேரமறிந்து ரசிகர்களின் ரசனையறிந்து ஒலிபரப்பி அதிகாலையில் கவிதையோடு கீதம் கலந்து காற்றலையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் மணிவண்ணன் இந்த
வார உதயசூரியனில் உங்களோடு!
ஹா.. நான் நவரத்தினம் மணிவண்ணன் எனது சொந்த ஊர் யாழ்ப்பாணத்தின் வேலணை.
வேலணை ஜயனார் வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியை கற்றேன். பின்பு வேலணை மத்திய கல்லூரியிலும் யாழ். பற்றிக்ஸ் கல்லூரியிலும் கல்வியை தொடர்ந்து பின்னர் மருத்துவக் கல்லூரியில் கற்றேன் . தற்போது நான் மருத்துவத் துறையில் பட்டம் பெற்று மருத்துவத்துறையில் பணியாற்றுகிறேன்.

வைத்தியத் துறையிலிருந்து அறிவிப்பிற்கு!
இயல்பாகவே எனக்கு கலையீடுபாடு அதிகம். எனது ஊரிலே நாடகங்கள் இசை நிகழ்ச்சி என்று விசேட நாட்களில் நிறைய நிகழ்வுகள் நடக்கும். இவற்றை பார்த்து அவற்றில் ஏற்பட்ட ஈடுபாடும் ஈர்ப்பும் கலை ஆர்வத்திற்கு வித்திட்டன எனலாம். அத்தோடு அந்த நாட்களில் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்பது உண்டு. இதனால் அறிவிப்புத் துறையிலும் நாட்டம் ஏற்பட்டது. கல்லூரி காலங்களில் குறிப்பாக மருத்துவக் கல்லூரியில் மாணவனாக இருக்கும் போது நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் நானே அறிவிப்பாளராக இருந்து வந்தேன். அப்போது தான் இவ்வாறு எனது ஆர்வம் வளர்ந்து வந்தது.
அதன் பிறகு தொழில் ரீதியாக கொழும்பில் வசிக்க நேர்ந்த போது கிடைத்த வாப்பு என்னை சூரியன் அறிவிப்பாளராக மாற்றியது

தொகுத்தளிக்கும் நிகழ்ச்சிகள்!
வைத்தியத் தொழிலில் இருப்பதால் பகுதி நேரமாகத்தான் இதில் பணி புரிய முடிகிறது. காலையில் அருணோதயம் நிகழ்ச்சி, இரவில் விடிய விடிய சூரியன் நிகழ்ச்சியும் செவேன். காலையில் பிறந்த நாள் வாழ்த்துக்கூறி அவர்களின் மகிழ்வில் நாங்களும் கலந்து மகிழ்வது ஒரு சிறப்பான வானலை அனுபவம்.
விடிய விடிய சூரியன் நிகழ்ச்சியில் நேரடியாக நேயர்களோடு உரையாடும் சந்தர்ப்பம் வாக்கின்றது. பல தரமான பல்வேறு மன நிலையில் உள்ளவர்களோடு உரையாடும் சந்தர்ப்பமும் வாழ்க்கையில் பல பரிணாமங்களையும் பக்கங்களையும் எனக்கு அறிமுகப்படுத்துகின்றது.
அதிகாலையில் இடம் பெறும் ரீங்காரம் நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டாக வேண்டும். பல இரசிகர்களை எனக்கு பெற்றுத்தந்த நிகழ்ச்சி இது என சொல்லலாம். இது நேயர்களின் கவிதைத் தொகுப்பு நிகழ்ச்சியாக அமைகின்றது. எனக்கு கவிதை மீது ஈடுபாடு அதிகம். என் காதலிக்கு எழுதிய கவிதையில் என் முதல் கவிதை ரீங்காரம் நிகழ்ச்சியில் ஆரம்பித்தேன். இதற்கு பின்பு பல கவிதைகளை எழுதி இருக்கின்றேன். இத்தகையதொரு பின்புலம் பாடலுக்கு ஏற்ற கவிதையை கூறி நிகழ்ச்சிகளை தொகுப்பதில் எனக்கு உதவுகின்றது. இந் நிகழ்ச்சி வளர்ந்து வரும் கவிஞர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாக அமைந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் வானொலி அனுபவம்!
எனது முதல் அறிமுக நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு விடிய விடிய சூரியன் நிகழ்ச்சியில் ஆரம்பித்தது. சக அறிவிப்பாளர் றிம்சாத்துடன் இணைந்து செத அந்த நிகழ்ச்சி மறக்க முடியாததோர் அனுபவம். முதல் நிகழ்ச்சியென சற்று பதற்றமாகவும் வான் அலையின் என் குரல் ஒலிக்கிறதென்ற பரவசமாகவும் இருந்தது .

இந்த துறையில் கைகொடுத்தவர்கள்!
திருமதி கமலோஜினி பரமசிவம் அவர்கள் என்னை சூரிய குடும்பத்தில் இணைவதற்கான அறிமுகத்தை ஏற்படுத்தி தந்தார்.
அவரையும் எனக்கு பயிற்சியும் ஆலோசனையும் வழங்கி நெறிப்படுத்திய மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் சூரியன் தலைமைப் பொறுப்பதிகாரி நவநீதன் ஆகியோர் இத்துறையில் எனக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள். அத்துடன் சிறுவயதிலிருந்து கலைத்துறையில் என்னை வழிப்படுத்திய எனது சித்தப்பா கவிஞர் வேலணையூர் தாஸ் அவர்களையும் என்னை வளர்த்து கல்விதந்து ஆளாக்கிய பெற்றோர்களையும் இவ்விடத்தில் நான் குறிப்பிடவேண்டும்.

அறிவிப்புத் துறையில் முன்மாதிரி?
யாரையும் பின்பற்றாமல் எனக்கென ஒரு பாணியை ஏற்படுத்த முயற்சிக்கிறேன் ஆனால் மூத்த அறிப்பாளர்கள் நடராஜசிவம், பீ. எச். அப்துல்ஹமீத், மதியழகன் ஆகியோரின் அறிவிப்பு மிகவும் பிடிக்கும். அவர்களது வழிகாட்டல் மற்றும் அனுபவம் சக அறிப்பாளருடைய ஆதரவு என்பவற்றால் வளர விரும்புகிறேன் .

குடும்பம்?
யாழ்ப்பாணத்தில் பிரபல வைத்தியர் க.நவரத்தினம் எனது தந்தையார் அம்மா கமலேஸ்வரி. எனக்கு நான்கு சகோதரர்கள்.
மனைவி சுஜீபா இவரும் மருத்துவ பணியில் இருக்கிறார். ஆராதனா, அக்சயா என இரண்டு மகள்மார். எனது மனைவி ரீங்காரம் நிகழ்ச்சி விரும்பி கேட்பார். எனது கலைப்பயணத்தில் இவர்களும் துணையாக இருக்கிறார்கள்.

உங்கள் சக அறிப்பாளர்கள் !
அன்பான ஒரு கலைக்குடும்பம் ஒவ்வொருவரும் வேறுபட்ட தனித்திறமை வாந்தவர்கள். பல்வேறு ஆளுமைகளின் கூட்டணி. சூரிய குடும்பம் எல்லோருடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆவல். நேரம் தடையாக இருக்கும். இருப்பினும், எதிர்பார்ப்புகளும் காத்திருப்புகளும் நிறைவேறலாம் என்ற நம்பிக்கையுண்டு.

இரண்டு துறைகளில் இனிமை அனுபவம்!
மருத்துவத்துறையில் இருந்து கொண்டே அறிவிப்பாளராகவும் பணியாற்றுகின்றேன். இரண்டும் வேறுபட்ட தொழிற் சூழலாக இருப்பினும் இரண்டும் மக்களோடு தொடர்பானது. மேலும் வானொலி கூடுதலாக இசையோடு சம்பந்தப்பட்டது.
இசை கூட சில வேளைகளில் மருத்துவமாகிறது. மனதினால் ஏற்படும் உளவியல் சார்ந்த நோகளுக்கு இசை தீர்வாகிறது என ஆராசிகள் சொல்கின்றது இந்தவகையில் எனது தொழிலோடு மிக நெருக்கமாக உணர்கிறேன்.

வானொலி ஊடகத்துறை இன்று எந்நிலையில் உள்ளது. ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
தொழில் நுட்பம் வளராத காலங்களில் வானொலியே மக்களின் பிரதான ஊடகமாக இருந்தது இன்று இலத்திரனியல் ஊடகங்களின் வரவு வானொலியின் செல்வாக்கை சிறிது குறைத்துள்ளது .
ஆயினும் இன்றும் வானொலிக்கென்று தனியான ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பாக சூரியன் சாதாரண மக்களின் தோழனாக இருக்கிறான் .

வியாழன், 19 ஜூலை, 2012

என்னை வளர்த்து விட்ட ஊடகங்கள்...

பாடகியாக அறிமுகமாகி அறிவிப்பாளராக பின்னணி குரல் கொடுப்பவராக இலங்கையின் ஒரு நட்சத்திரமாக பிரகாசித்துக் கொண்டிருப்பவர் பிரஷாந்தினி மயில்வாகனம்.

அண்மையில் மலேசியத்திரைப்படம் ஒன்றிற்காகவும் பாடல் பாடியிருக்கும் பிரசாந்தினி இந்தவாரம் பேஸ்புக் பகுதியில்....

நேர்காணல்: எஸ்.ரோஷன்

பிறந்தது வளர்ந்தது எல்லாம் கொழும்பில்தான். அப்பா, அம்மா, அண்ணா, நான் மற்றும் இரண்டு சகோதரிகள் என அன்பான குடும்பம். அம்மா நீங்கள் யாவரும் அறிந்த பாடகி லில்லி மயில்வாகனம். என் தாயார் இசைத்துறையில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக எனக்கும் சிறுவயது முதல் அம்மா போல ஒரு பாடகியாக வரவேண்டும் என ஆசை. கூடவே ஆசிரியராக வரவேண்டும் என்று ஒரு எண்ணமும் இருந்தது.
பாடசாலை காலத்தில் சகல இசை நிகழ்ச்சிகள், போட்டிகளையும் விட்டு வைக்காமல் பங்கு பற்றினேன். கூடவே விளையாட்டுத் துறையிலும் எனக்கு ஈடுபாடு அதிகம்.
எனது இசைப் பயணத்தின் ஆரம்பமாக நான் தரம் 11 படிக்கும் போது சக்தியின் இளையகானம் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றும் வாப்பு கிடைத்தது. அதில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டேன்.
சிறு வயதிலிருந்து கர்நாடக இசையை முறைப்படி பயின்று வந்ததால் என் இசைப்பயணத்திற்கு அது சிறந்த சக்தியை வழங்கியது.
அடுத்த கட்டமாக சக்தி சுப்பர்ஸ்டார் சீசன்02 இல் பங்கேற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலும், இறுதிச் சுற்றில் 3 ஆம் இடத்தை பெற்றேன். அன்று முதல் இலங்கை மக்களுக்கு அறிமுகமான பாடகி என்ற அந்தஸ்தை பெற்றுக்கொண்டேன்.
இப்போட்டி நிகழ்ச்சிக்கு பின்னர் என் இசைப் பயணம் சிறப்பாக அமைய பலர் எனக்கு வாப்புகள் வழங்கினார்கள். குறிப்பாக கொழும்பின் பல முன்னணி இசைக் குழுக்களில் பாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அத்தோடு, குடச்டுtடடி கூங யில் Shakthi TV °À SMS Galata எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாப்பும் கிடைத்தது.
சாம்பசிவ மணிக்குருக்கள் ஐயா என் பாடும் திறமையை பாராட்டி எனக்கு சின்னக்குயில் எனும் பட்டத்தையும் வழங்கி கௌரவித்தமை என்னால் மறக்க முடியாத நிகழ்வாகும்.
தொடர்ந்து, இலங்கையின் இசைத்துறையில் மிளிர்ந்து வரும் பல முன்னணி இசையமைப்பாளர்களான செந்தூரன், ஷமீல்,
ஸ்ரீ விஜ, தினேஷ் கனகரட்ணம், கிருஷான் மஹோவின் வெஸ்லி லக்ஷ்மன் சுதர்சன்,
ஸ்ரீ பிருந்தன், சவாஹிர் மாஸ்டர் இன்னும் பல இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்கள் பாடும் வாப்பு கிடைத்தது. பாடியும் வருகிறேன்.
என் இசைப்பயணத்தில் இன்னும் மறக்க முடியாத விடயங்களாக, தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகர்களோடு இணைந்து பாடும் வாப்பு கிடைத்தது.
தமிழ் இமையமைப்பாளர்கள் மட்டுமன்றி பல சிங்கள இசையமைப்பாளர்களுடன் பணியாற்றும் வாப்பும் கிடைத்தது. விஷேடமாக, பாத்திய சந்துஷ் இசையமைப்பில் வெளியான சிங்கள வெற்றித் திரைப்படமான Dancing Stars திரைப்படத்தில் பல பாடல்கள் பாட சந்தர்ப்பம் கிட்டியது.
மற்றும் இலங்கையின் முன்னணி இசையமைப்பாளரான ரோஹண வீரசிங்கவின் இசையமைப்பில் வெளிவந்த சிங்கள வரலாற்று திரைப்படமன""குச பபா'' திரைப்படத்தில் பின்னணி குரல் கொடுக்கும் வாப்பும் கிடைத்தது.
பொதுவாக, இலங்கை இசைக்கலைஞர்களின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது எனும் ஒரு கருத்து இருந்து வருகிறது.
அந்நிலைமை சற்று மாறி, அவர்களும் நம்மவர்களின் சிறந்த படைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் என் இசைப்பயணத்தின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்களிப்பு கணிசமான அளவு உண்டு என்பதை இச்சந்தர்ப்பத்தில் மகிழ்வுடன் தெரிவிக்கலாம்
பாடல்கள் மட்டும் தான் பாட முடியும் என்று எண்ணியிருந்த எனக்குள் அறிவிப்புத்திறமையும் இருக்கிறது. என்பதை உலகறியச் செத பெருமையும் Shakthi TV யையே சாரும்.
அந்த வகையில், அண்மையில் மக்கள் மனம் வென்ற Shakthi Super Star- Season- 04 பிரம்மாண்ட போட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழகும் வாப்பை சக்தி நிறுவனம் எனக்கு வழங்கியது.
தற்போது சிறந்த பாடகி மற்றும் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளி என்ற அந்தஸ்தையும் மக்கள் எனக்கு பெற்று தந்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட சில வருடங்களுக்குள் என் இசைப் பயணத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள் பல. என்னுடைய வளர்ச்சியின் ஆரம்பம் முதல் இன்று வரை எவ்வித குறையும், தடைகளுமின்றி என்னை வழிநடத்துபவர்கள் என் குடும்பத்தார். அவர்களை எனக்கு கொடுத்ததற்காக இறைவனுக்கு என் நன்றிகள்,
இத்தோடு நின்றுவிடாது, என் இசைப்பயணத்தில் இன்னும் என் முயற்சிகள்
தொடரும்........

வியாழன், 12 ஜூலை, 2012

ஒரே தினத்தில் பல நாடுகளிலும் வெளியிடப்பட உள்ள முதலாவது தமிழ் இசை இறுவட்டு ஆர்யன்


பாடகர் (Rapper) ஆர்யன் தினேஷ் கனகரட்ணத்தின் "ஆர்யன்' இசை ஆல்பம் நேற்று சனிக்கிழமை இலங்கை உட்பட பல நாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.


"ஆர்யன்' இசை ஆல்பம் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் நேற்று ஒரே தினத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் இவ்வாறு ஒரே தினத்தில் பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்ட முதலாவது தமிழ் இசை ஆல்பம் என்ற அடையாளத்தை எட்டியுள்ளது.
"ஆர்யன்' இசை ஆல்பத்தை Die-A- Tribe Entertain ment (Private) Limited நிறுவனம் இலங்கையில் வெளியிட்டு வைத்துள்ளதுடன் Antostage நிறுவனம் ஆல்பத்தின் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.
இதேநேரம் மலேசியா, சிங்கப்பூர், இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் Psycho.Unit Asia(மலேசியா), J.R.Media works (ஐரோப்பா), Antomatic Music & Entertainm ent and Greatmu6 (இந்தியா) போன்ற நிறுவனங்கள் இந்த இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளன.
ஆர்யன் தினேஷ் கனகரட்ணமும் அவரது சகாவான பொனிகில்லாவும் இணைந்து கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் சென்று ஆர்யன் இசை ஆல்பம் பற்றிய ஊக்குவிப்பு பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளனர். அத்துடன், இசை ஆல்பத்தை வாங்கும்போது ஒரிஜினல் பிரதிகளை வாங்கி உதவுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுவிட்ஸர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஆல்ப சி.டி.க்களை தற்போது பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், itunes, Amazon, nokia உள்ளிட்டவற்றின் ஊடாக இந்த ஆல்பத்தை டிஜிட்டல் டவுன்லோட் செய்யவும் முடியும்.
ஆர்யன் இசை ஆல்பத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக “You ate my money’ என்ற பாடலின் வீடியோ ஒன்றையும் Die-A-Enter tainment மற்றும் Antostage Records ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. பணம் காரணமாக சில இளைஞர்கள் எப்படி தேவையில்லாத பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை இந்தப் பாடல் விபரிக்கிறது.www.youtube.com Cøn¯zuÍzvÀ “You ate my money’ என்று டைப் செய்வதன் மூலம் இந்த பாடலின் வீடியோவை பார்க்க முடியும்.
இதேநேரம், ஆர்யன் இசை ஆல்பத்தின் வெளியீட்டை http://www.youtube.com/watch? v=36RcyAG4PN..எனும் இணையத்தள முகவரியின் மூலம் பார்க்க முடியும்.

வெள்ளி, 6 ஜூலை, 2012

பலர் பாராட்டினார்கள் சிலர் தூற்றினார்கள்

பாடலோடு உற்சாக துள்ளல் நடனமென தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி ரசிகர்களை மகிழ்விப்பவர் மொகமட் வஃபா தினக்குரலின் சகோரவெளியிடான உதயசூரியனுக்கு அளித்த போட்டியின் கடந்த வாரத் தொடர்ச்சி....

நேர்காணல்:
எஸ்.ரோஷன்

(கடந்த வாரத் தொடர்ச்சி)
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பார்கள். ஆனால் எந்தத் திறமைசாலிக்கும் தட்டியவுனே வாய்ப்புக் கதவுகள் திறந்து விடுவதில்லை. முட்டி மோதிப் போராடி திறக்க வேண்டும். அப்படி போராடியவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்.
நான் சாதாரணமானவன். திறமைகளை வளர்த்துக் கொள்ளத் துடிப்பவன் எனக்கு மட்டும் வாய்ப்புகள் இலகுவாகக் கிடைத்துவிடுமா என்ன?
புகழைப் போன்ற போதையை வேறு எதுவும் தந்துவிட முடியாது. முதல் மேடையில் கிடைத்த கைத்தட்டல் எனக்கும் பாடும் ஆர்வத்தை தூண்டியது. விளைவு பாடசாலை கல்வியை முடித்து விட்டு புசல்லாவைக்கு வந்து சிறு இசைக் குழுக்களில் பாட வாய்ப்பு தேடினேன்.
பிறகுதான் தெரிந்தது ஒருவன் தன்னை நிரூபிப்பது அத்தனை சுலபமானதல்ல!
என்னுடைய தந்தை ரூபவாஹினியில் இஸ்லாமிய கீதங்கள் பாடுவார். அவரோடு இணைந்து நானும் பாடுவேன். மூன்று நான்கு இஸ்லாமிய கீதங்கள் பாடினேன். பல இடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. எங்கு சென்றாலும் எனது திறமைக்கு ஏதாவது தடைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது.
சில நாட்களுக்கு பின்னர் சூரியன் எப்.எம் இன் நகருக்குள் நகரும் இசை வாகன நிகழ்ச்சியில் ((Gibbons) இசைக் குழுவில் பாடகனாக பாட வாய்ப்புக் கிடைத்தது. அத்தருணத்தில்தான் தனியார் தொலைக் காட்சியில் Super star நிகழ்ச்சி பற்றி அறிந்து அங்கு சென்றேன். அதன் மூலமாக வஃபா இலங்கை முழுவதும் அறிந்த பாடகனாக அறிமுகப்படுத்தப்பட்டான்.
அந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு திருப்பு முனை என்றும் கூறலாம். ஆடலுடன் பாடி அசத்தினேன். பலர் பாராட்டினார்கள். ஆனால் சிலர் பல தப்பான விமர்சனங்களை சொன்னார்கள். நான் பாடுவதில்லை. ஆடுகிறேன் என்றார்கள். அந்த நிகழ்ச்சியில் தெரிவு செய்யப்பட்ட 12 பேரில் முதலாவதாக வெளியேறியது நான் தான். மிகவும் மனம் நொந்தேன்.
ஆனாலும் இறுதி நிகழ்ச்சியில் பங்குகொள்ள அழைப்புக் கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு என்னை நிரூபிக்க வேண்டும் என நினைத்தேன். எனது முயற்சி பலன் தந்தது. அதில் நாள் ஒரு star ஆக தெரிவு செய்யப்பட்டேன்.
இறுதிப் போட்டியின் பின்னர் என்னை புகழாத யாரும் இல்லை. தொடர்ந்தும் இசைத்துறையை கைவிடாது கற்றுக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கிறேன்.
முகவரி இசைக் கோவை, சக்தி சுப்பர் ஸ்டார் அல்பம் என தொடர்ந்தும் பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் என்று பாடிக் கொண்டிருக்கிறதுங்க.
நான் அதில் கற்றது கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. எனது அடுத்தக்கட்ட முயற்சியாக லெஜன்ஸ் என்ற பெயரில் இசைக் குழுவை ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறேன். ஆர்வமுள்ள திறமையான இளைஞர்களுக்கு இதில் வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளேன்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இசைத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் எனது தொலைபேசி இலக்கத்துடன் (0775442451) தொடர்பு கொள்ள முடியும்.
என்னைப் போன்ற இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்பதுதான்.

வெள்ளி, 29 ஜூன், 2012

முதல் பாடலை அழுது கொண்டே பாடினேன்

பாடலோடு உற்சாக துள்ளல் நடனமென தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி ரசிகர்களை மகிழ்விப்பவர் மொகமட் வஃபா தினக்குரலின் சகோதர வெளியிடான உதயசூரியனுக்கு அளித்த பேட்டி

நேர்காணல்:எஸ்.ரோஷன்

இசை ரசிகனின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் மாறுகிறது. இரசனை ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது! ஆக இசைத்துறையில் ஜெயிப்பதற்கு ஒவ்வொரு கலைஞனும் ஒரு வித்தியாசத்தை, புதுமையைக் காட்ட வேண்டியிருக்கிறது!
பாடலோடு உற்சாக துள்ளல் நடனம் என தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி ரசிகர்களை மகிழ்விப்பவர் மொகமட் வஃபா!
இலங்கை இசை ரசிகர்களுக்கு மிகப் பரிச்சயமான வஃபா இந்தவாரம் பேஸ்புக் பகுதியில்!
ஹாய்! பசுமையும் இயற்கை அழகும் மிகுந்த புசல்லாவை தான் என் சொந்த மண்.
தந்தை ஆதம் பாவா, தாய் பெமீலா, நான் உட்பட நான்கு ஆண் சகோதரர்கள், எல்லோருக்கும் செல்லமாய் ஒரு தங்கை என அழகான அன்பான குடும்பம்.
தந்தையும், தாயும் கலையில் அதிக நாட்டம் உடையவர்கள். எனது தந்தை தேசிய சேவையில் ""பி'' தரத்து பாடகரும் கூட! இருந்தும் எனக்கு ஆரம்ப காலத்தில் இசையில் ஆர்வம் இருக்கவே இல்லை. 8ஆம் ஆண்டு வரை புசல்லாவை தேசிய பாடசாலையிலும் 9ஆம் ஆண்டிலிருந்து உயர்தரம் வரை எனது தந்தையின் சொந்த ஊரான சம்மாந்துறை மத்திய கல்லூரியிலும் படித்தேன். பின்னர் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பாடத்தைப் பெற்று தெகிவளையில் ஒரு தனியார் கம்பனி ஒன்றில் கடமையாற்றினேன்.
என்னுடைய இந்த காலகட்டங்களை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. இளமைக் காலம் தேடல் நிறைந்த காலம் என்று கூறலாம்.
நான் சம்மாந்துறையில் படிக்கும் போது தான் எனக்கு இந்த
பாடும் ஆர்வம் ஒட்டிக் கொண்டது. நான் முதல் முதல் பாடிய அனுபவம் மறக்க முடியாதது. நான் சாதாரண தரத்தில் படிக்கும் போது வகுப்பறையில் நண்பர்களுடன் சேர்ந்து பாடிக்கொண்டிருப்பேன்.
ஒருசமயம் எங்கள் பாடசாலையில் கலை விழா! விழாவில் எமது வகுப்பு சார்பாக ஒரு நிகழ்ச்சியை வழங்க வேண்டும். அக்காலத்தில் சும்மா ஒரு கூட்டத்துக்குள் நடப்பதே எனக்கு கூச்சத்தை தரும். நண்பர்களில் ஒருவன் திடீர் என்று வகுப்பறைக்கு வந்திருந்த ஆசிரியர்களிடம் வஃபா நல்லா பாடுவான். இம்முறை அவன் நிகழ்ச்சி செய்வான் என்று சொல்லி விட்டான். எனக்கு ""குப்'' என்று வியர்த்துவிட்டது.
வகுப்பறைக்கு வந்திருந்த ஆசிரியர்கள் என்னை பாடச் சொல்லி கேட்டார் கள். நான் மறுத்தேன். அவர்களும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக என்னை சுமார் 15 நிமிடமாக வற்புறுத்த நானும் பிடிவாதம் மிக்க வேதாளமாக மறுத்துக் கொண்டிருந்தேன்.
இறுதியில் ஆத்திரம் கொண்ட
வகுப்பாசிரியர் என்னை பிரம்பால் அடித்துவிட்டார்.
கண்களில் கண்ணீர் நிறைந்து வழிய நான் பாடினேன். பாடலைக் கேட்டுவிட்டு எனக்கு நண்பர்களும் ஆசிரியர்களும் நீ நன்றாக பாடுகிறாய் என்று தட்டிக் கொடுத்தனர்.
கலை நிகழ்வு இடம்பெற்ற தினம் முழுப் பாடசாலையின் கவனத்தையும் என்வசம் ஆக்கிக்கொண்டேன். கை தட்டல்களை பெற்றேன்.
அந்த முதல் கை தட்டல்தான் எனது பாடும் ஆர்வத்திற்கு தொடக்
கமாக அமைந்தது.
(மிகுதியை அடுத்த வாரம் சொல்கிறேன்)

வெள்ளி, 8 ஜூன், 2012

என்னை அடையாளப்படுத்திய இசை இளவரசர்கள்

ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும்,அறியப்பட்டுவரும் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ''நான்'' திரைப்படத்தில் இசையமைப்பாளர்விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளள கவிஞர் அஸ்மின் தினக்குரலின் சகோதர வெளியிடான உதயசூரியனுக்கு அளித்த பேட்டி
நேர்காணல்.எஸ்.ரோஷன்


கவிதை எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே நான் பாடல் எழுதிக் கொண்டிருந்தாலும் என்னை சரியாக நெறிப்படுத்தி பட்டை தீட்டி முழு இலங்கைக்கும் என்னை அடையாளப்படுத்தியது சக்தி கூங யினால் 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ""இசை இளவரசர்கள்'' நிகழ்ச்சியென்றால் மிகையில்லை. அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்த ஷியாவுக்கு இவ்வேளையில் நான் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய திரைப்பட பாடலாசிரியர்களை இசையமைப்பாளர்களை இயக்குநர்களை சந்திக்கும் வாப்பு எனக்கும் கிட்டியது. எமது ஹம்சத்வனி குழுவுக்கு இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பாடல் உருவாகும் கதைச்சூழலை சொல்லியிருந்தார். இசையமைப்பாளர் பரத்வாஜ் கதைக்கு இசையமைக்க வேண்டிய நுணுக்கங்களை சொல்லித்தந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பாடலாசிரியர்களான பா.விஜ, நா.முத்துக்குமார், சினேகன், விவேகா போன்றோர்களை சந்தித்து பாடல் எழுதும் நுட்பம் பற்றி என்னால்
கற்க முடிந்தது.
மோகனின் இசையில் எனது வரிகளுக்கு ரணில் மற்றும் சுவர்ணியா ஆகியோர் "வா வா அன்பே நீ வா...' என ஆரம்பிக்கும் பாடலை உருவாக்கினோம். அதுவே ஒலி ஒளி வடிவில் வெளிவந்த எனது முதல் பாடலாகும்.
அதன் பின்னர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய "எங்கோ பிறந்தவளே' என ஆரம்பிக்கும் பாடல் சர்வதேசமெங்கும் மிகுந்த வரவேற்பை பெற்று பலரதும் கைதட்டல்களை எமக்கு பெற்றுத்தந்தது. டிரோன் பெர்ணான்டோ, நலிந்த, ராஜ் தில்லையம்பலம், ஆனந்த், விமல்ராஜா, வேரணன் சேகரம், காதல்வைரஸ் போன்ற நம் நாட்டு இசைக் கலைஞர்களோடும் புலம்பெயர் கலைஞர்களோடும் நான் பணியாற்றியுள்ளேன்.
இசையமைப்பாளர் டிரோனின் இசையில் நான் எழுதிய "புறப்படு தோழா' பாடல் வியர்வையின் ஓவியம் நிகழ்வில் முதலாமிடம் பெற்று 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை எனக்கு பெற்றுக் கொத்தது.
அதே போன்று 2011ஆம் ஆண்டு வியர்வையின் ஓவியம் நிகழ்வில் ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய "எங்கோ பிறந்தவளே' மீண்டும் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை எனக்கு பெற்றுத்தந்தது. அதன் பிறகு ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய ‘காந்தள் பூக்கும் தீவிலே’ பாடலை தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் புலம் பெயர்ந்த நம்மவர்கள் என பலரும் பெரிதாகப் பாராட்டினார்கள். பாடலை ஜெயந்தனுடன் சேர்ந்து அவரது சகோதரி ஜெயப்பிரதா பாடியிருந்தார். இந்தப் பாடலை ரசித்து இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அவரது அடுத்த படத்தில் எனக்கு வாப்புத் தருவதாக சொல்லியிருந்தார். சில உள்ளூர் வானொலிகள் எமது இந்தப் பாடலை கண்டுகொள்ளாத நிலையில் வெற்றி வானொலி ‘விடியல்’ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது. ஆனால் புலம்பெயர் நாடுகளில் இந்தப் பாடல் ஒலிக்காத வானொலி நிலையங்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எமது பாடலை ஒலிபரப்பின. எமது நாட்டு ரசிகர்கள் இந்தப்பாடலை கேட்காமல் இருப்பது துரதிர்ஷ்டமே. ஙுOக்கூக்ஆஉ இணையத்தளத்தில் இந்தபாடலை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர். இலங்கையில் வெளிவந்த தமிழ் பாடல்களில் அதிக ரசிகர்கள் பார்வையிட்ட பாடல் என்ற சாதனையும் இப்பாடல் நிகழ்த்தியுள்ளது.
இதன் பிறகு திரைப்படத்தில் பாடல் எழுதுவது, முதலாவதாக எனக்கு ‘பனைமரக்காடு’ திரைப்படத்தின் மூலமே சாத்தியமானது. இயக்குநர் கேசவாஜின் இயக்கத்தில் விமல்ராஜாவின் இசையில் ‘உயிரிலே’ என ஆரம்பிக்கும் பாடலை எழுதியிருந்தேன். இந்தப்பாடலை பின்னணி பாடகர் ஆனந்த் பாடியிருந்தார்.
அதன்பிறகு பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் விஜ அன்ரனியின் இசையில் ‘நான்’ என்ற திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். இந்தப் பாடலில் எனக்கு வாப்பு கிடைத்தது சர்வதேச ரீதியாக வைத்த போட்டி ஒன்றின் மூலமே ஆகும்.
இசையமைப்பாளர் விஜ அன்ரனி பல புதிய பாடகர்களை பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். எனவே தான் தயாரித்து, இசையமைத்து, கதாநாயகனாக அறிமுகமாகும் ‘நான்’ திரைப்படத்தில் புதிய பாடலாசிரியரை அறிமுகம் செயும் நோக்கோடு தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் வாயிலாக ஒரு போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். போட்டியில் வெற்றி பெறுபவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவருக்கு வாப்பளிப்பதாக அறிவித்திருந்தார். அவரால் வழங்கப்பட்ட கதைசூழல், இசைக்கேட்ப நானும் பாடலை எழுதி அனுப்பியிருந்தேன். பல மாதங்கள் கடந்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை திடீரென ஒருநாள் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்து சொன்ன அவர் போட்டியில் நான் வெற்றியீட்டியதாக அறிவித்ததோடு உடனே சென்னைக்கு வருமாறு அழைத்திருந்தார்.
நான் சென்னை சென்று இரண்டு நாட்கள் அவரோடு தங்கியிருந்து முழுப்பாடலையும் எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருக்கின்றேன். பாடல் வெளியீட்டு விழா மிகவிரைவில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. அதற்கும் என்னை அழைக்க இருக்கின்றனர். விஜ அன்ரனி பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். கடின உழைப்பாளி. தனது ஒவ்வொரு இரவையும் பகலாக்கி உழைத்ததினால்தான் இன்று அவரால் முன்னணி இசையமைப்பாளர்கள் வரிசையில் இடம்பிடிக்க முடிந்துள்ளது. தெரிந்தவர்களையே தெரியாது என்று கூறும் வறட்டு சிந்தனையுள்ள படைப்பாளிகளுக்கு மத்தியில் அவர் பண்பாளர். அவரோடு பணிபுரிந்த அந்த இரண்டு நாட்களும் என் வாழ்வில் மறக்கமுடியாத அழகிய நாட்கள்.
‘நான்’ திரைப்படம் என்னைப்போன்று முன்னேறத்துடிக்கும் இளைஞனின் கதை. முற்றிலும் மாறுபாடான கதைக்களம். நான் நிச்சயம் வெற்றிபெறும். இத்திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரைத்துறையில் எனக்கு மட்டுமல்ல இலங்கை கலைஞர்கள் பலருக்கும் கதவு தானாக திறக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.